March 09, 2020

செருத்துணை நாயனார்




தஞ்சாவூர் மருகனாட்டில் பிறந்த சிவத்தொண்டர். உள்ளன்போடு சிவத்தை வழிபட்டு தொண்டுகள் புரிந்து வாழ்ந்திருந்தார். பல்லவ அரசரான கழற்சிங்கர் தனது பட்டத்து ராணியுடன் சுவாமி தரிசனம் செய்து சிவத்தோண்டுகள் புரிய திருவாரூர் கோவிலுக்கு வருகை தந்திருந்தார். சிவ பூஜைக்கென சேகரித்த மலர் விதிவசமாக கீழே விழுந்திருந்தது. அதை அறியாத அரசியார், கீழே விழுந்த மலரை எடுத்து அதன் எழிலிலும் நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்து அதனை முகர்ந்தார். அதனை கண்டு சிவ அபராதம் நிகழ்ந்துவிட்டதென துடித்து அரசியாரின் மூக்கினை அரிந்துவிட்டார். சிவ அபராதம் பொறுகாத அபிரீமிதமான அன்பை இறைவன் பால் கொண்டிருந்து, மேலும் பல காலம் நெடிது வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
(பல்லவ அரசரான கழற்சிங்கரும் ஒரு நாயன்மார். இவரது வரலாறு முன்னமே நினைவுகூர்ந்தோம்)
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment