#சுந்தரகாண்டம், #அனுமன், #நவகிரகதோஷம், #பரிகாரம், #நவகிரஹம், #சுக்கிரன், #வெள்ளி, #சுக்ராச்சாரியார், #planet, #Navagraha, #SundarakaNdam, #Hanuman, #Dosha, #Venus, #pariharam, #sloka,
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
September 12, 2025
September 10, 2025
நான் ஏன் கூட்டிட்டு வரணும்?
அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் எழுதிய கீர்த்தனை - "நீ போய் அழைத்து வாடி" - இன்று காலை கேட்ட போது வாக்கேயக்காரருக்கு என்னே ஒரு அழகான சிந்தனை!! என்று தோன்றியது.
.
இந்த பாடலில் வரும் கோபிகா ஸ்த்ரீ, அவளுடைய தோழியை தூதனுப்புகிறாள். இவளே பகவானை அழைத்திருக்கலாமே! இவளுக்கு அந்தரங்கமான சியாமளன். நீல மேக வர்ணன்.
...
நீராடும் கரையில் நெருங்கிப் பேசி, நித்தமும் பிரியேன் என்று சத்தியமெல்லாம் செய்திருக்கிறான். இவளே போய் அழைக்கலாமே! அவன் என்ன சாதாரணனா? மானுடனா? பரப்பிரமம் இல்லையா, அவனுக்கு எதற்கு தூது ? என்றால்...
..
இங்கு "சகி" என்று சொல்லப்படும் கோபிகை, இன்னொரு ஜீவாத்மாவைக் குறிப்பதாக தோன்றுகிறது. அது பெண்ணாக இருக்க வெண்டுமென்ற அவசியம் இல்லை. Not gender based. எனக்கு நேர்ந்த பேரின்பமெல்லாம், அடியே சகி, உனக்கும் நேரவேண்டாமா? நீ போய் அழைத்து வாயேன்! ... 𝒶𝓷𝒹 ℯ𝔁𝓅𝓮𝓇𝓲ℯ𝓷𝒸𝓮 𝓽𝒽𝓮 𝓷ℯ𝓬𝓉𝓪𝓇 ℴ𝓯 𝓭𝒾𝓿𝓃𝓲𝓉𝔂... என்று பரோபகாரம் பண்ணுகிறாள். ஊருக்கு உபன்யாசம் செய்கிறாள்.
..
ராமானுஜர் தான் அடைந்த அனுபவத்தை ஊருக்கெல்லாம் உபதேசித்து, அவர்களும் க்ஷேமம் பெற வேண்டுமென காருண்யம் கொண்டாரல்லவா, அதை நினைவு படுத்துகிறது.
.
இந்த பாடலுக்கு நடனமணி அற்புதமாக அபிநயமும் செய்தார். இசை, நாட்டிய விருந்து.
..
அந்த நீலமேக சியாமளனிடம் கேட்க ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன. இரக்கமில்லாத நிகழ்வுகளுக்கு காரணம் கேட்டாலும், ஆயிரம் சமாதானம் சொல்வான், பத்தாயிரமே சொன்னாலும், மனம் புண்ணாகி இருப்பவர்களுக்கு, பக்குவமும் இல்லாத சாதாரணர்களுக்கு, சட்டென ஆறுவதில்லை.
..
Walking out of context....
..
அம்புஜம் கிருஷ்ணா என்று wikiல் தேடிப் பாருங்கள். "கருநாடக-பாடகியாம்". கர்னாடகம் என்றால் பழைய, தொன்றுதொட்டு, 𝖆𝖓𝖈𝖎𝖊𝖓𝖙 𝖘𝖙𝖞𝖑𝖊 𝖔𝖋 𝖘𝖎𝖓𝖌𝖎𝖓𝖌 என்று பொருட்படுத்தலாம். அது என்ன கரு-நாடகம்? உலகமே கருமையான நாடக மேடையன்றோ என்று சொல்ல வருகிறார்களோ?
Labels:
general
September 09, 2025
In gratitude: to our guru Paramacharya An- awakening. மஹாபெரியவா மகிமை
In gratitude: to our guru Paramacharya An- awakening.
அது ஒரு பொன்னிரவுப் பொழுது.... 2010 வருடம் என்று நினைக்கிறேன். ஆம் பொன்னிரவுப் பொழுது. என் வாழ்வை மாற்றியமைத்த இரவும் அதனைத் தொடர்ந்த விடியற்காலையும்.
.
வழக்கம் போல் எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாண்ட முயற்சி செய்து கொண்டிருந்தேன். Endless questions, never finding its right partners as answers.
.
காலகாலமாக இதையே செய்து கொண்டிருப்பதன் விளைவாக வந்த அயர்ச்சி. என் கேள்விகளுக்கு விடை தேடி, scriptures, upanishads, quora(இது வேற!!) , hundreds of books in my library almirah, ம்ஹூம்...விடை காணமுடியவில்லை.
.
இரவு பதினொறு மணியிருக்கும். தோல்வியின் பாரம் சுமந்தே தூங்கிப்போனேன். எப்படியும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தி (hehe Shakthiprabha) கேள்விக்கான விடையின் வேட்டையை நாளை தொடருவாள்..... என்ற நம்பிக்கையுடன்.
.
அடுத்த நாள் அதிகாலை.... என் முன்னோர் செய்த புண்ணியத்தின் பயனாக, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதிகாலை ....... 5 மணிக்கு முன். தோராயமாக நாலரை மணி அளவில் இருக்கும். இருட்டு விலகவில்லை. Remember vividly, I suddenly woke up as though I was awakened by someone. I heard someone calling out a name. I turned around to see my daughter tossing in her bed. Vague hazed background where my husband was walking around the room adjacent to our bedroom. Yes I could see him.
.
and then...........a big halo ball of light, a very powerful ball of light close to six-feet rose before my eyes. In that halo of light, I saw my acharya, Kanchimahaswami standing with his dhandam right next to me.Unmistakably grace of Divine Darshan . I saw his face, eyes, his dhandam, his stature, his kashaayam....
.
It glowed, blue, yellow, and white light.........I rubbed my eyes...and saw again. He was standign there. The halo, the light, and acharya. பக்கத்தில் என் மகள் புரண்டு படுத்திருப்பதும் தெரிந்தது. என் கணவர் அறைக்கு அப்பால் நடமாடுவது தெரிந்தது. I was not insane. It was not hallucination.
.
முழுவதாக 30 அல்லது 50 வினாடி ஆட்கொண்ட தரிசனம் தொடர்ந்த வண்ணமிருந்தது. தண்டத்துடன், தீட்சிண்யமான கண்கள், முகம்....... அவர் முகம் என் மனதில் பதிந்தது. சில வினாடிகளுக்குப் பிறகு என் கண் முன்னே சிறிது சிறிதாக ஒளி அகன்றதையும் கண்டேன். மறுபடியும் திரும்பிப் பார்த்தேன், தூங்கும் என் மகள்.... நடமாடும் என் துணைவர். நான் கண்டது கனவல்ல. நான் கண்டது மருட்சி அல்ல. இப்போது அந்த ஒளி இல்லை. ஆச்சார்யர் ஆட்கொண்டு, தரிசனம் தந்து சென்றுவிட்டார். Remaining scenario was as it was...my daughter...my husband doing the same things.
.
Though my parents, inlaws and my grandfather had acharya's pictures and revered photographs, அன்றைய தினம் வரை, என் வீட்டில் மஹாபெரியவரின் படம் இருந்ததில்லை . ஆச்சார அனுஷ்டானங்களை பெரிதும் கடைபிடித்ததில்லை. அவரை குரு ஸ்தானத்தில் வைத்து வணங்கியதில்லை. அவருடைய போதனைகளை படித்ததில்லை. Like I had mentioned, though wearing the cloak of theism, I had nutured an agnostic approach almost always, delving atheism on and off .... UNTIL THat DAY.
.
மறு நாள் , I confirmed myself I was sane.
....
In coming years, repeatedly acharya gracing my humble-self, miraculously, with his grace, during our trying times....stands as assurance.....
.
என் தேடலுக்கு, நாங்கள் எதிர்பாராத ஒரு தருணத்தில் எதிரேபாராத ஒருவர் எங்களுக்கு குருவாக கிடைத்தது எங்கள் பாக்கியம்.
.
This post was due to be posted... in gratitude to our life-giver Paramacharya. என்றென்றும் அடிபணிந்த சேவர்களாக சிஷ்யர்களாக தொடரும் பாக்கியத்தை வேண்டி....
.





.
Labels:
Paramacharya,
periyava,
அர்ச்சனை,
பெரியவா,
மஹாபெரியவா
Parabrahma - Prakruthi (பிரக்ருதியும் பரமாத்மாவும்)
அசைந்தாள்;
அசைந்தான்.
எண்ணங்களால்
கிளர்ந்தெழுந்தான்.
..
மாயத்திரை எழுப்பி
கதைகதையாய் திரித்தாள்.
அதில் கரைந்தான்.
உட்புகுந்து உலகையளந்தான்.
உடனிணைந்து
பின்னிப் பிணைந்து
தன்னை மறந்தான்.
..
மாயசக்தியின் மயக்கத்தில்
தன்னில் பாதியைத் துறந்தான்.
அவள் இயக்க;
இவன் இயங்கினான்
..
சிவசிவசிவ என ஆட
சக்தியவளோ
இச்சையாகி இசைந்து
கிரியையாகி நடந்து
ஞானமாகி அடங்குகிறாள்
..
நாடகத்துள் நயமுண்டு
லயமுண்டு நவரசமுண்டு
ஆங்காங்கு இடைவேளைகள்
இறைந்து கிடைப்பதுண்டு
இறுதியும் அறுதியுமின்றியே ;
சதா தொடரும் ; படரும்; துளிரும்
சதா சிவமேனவே...
-ShakthiPrabha
Labels:
கவிதை
September 04, 2025
குருபார்வையின் சுபம் சேர்க்கும் எளிய ஸ்லோகம் -Simple Parihara Sloka- Sundara Kandam- Guru Preethi
Guru / Jupiter Remedy for affliction.குருகடாக்ஷம் அருளும் ரத்னமாலா சுலோகம். Shloka chanting and Translation details in Tamizh and English. #sita, #Saints, #சீதா, #மகான், #சுந்தரகாண்டம், #ரத்னமாலா #ஸ்தோத்திரம், #ஹனுமான், #அனுமன், #தோஷம், #நவகிரகதோஷம், #பரிகாரம், #நவகிரஹம், #குரு, #வியாழன், #குருபகவான், #planet, #Navagraha, #SundarakaNdam, #Hanuman, #Dosha, #Jupiter, #pariharam, #Rathnamala, #sloka, #Sthothram
August 27, 2025
கல்வி,ஞானம்-புதன் பரிகாரம்- SundaraKandam-Rathnamala- Gifts communciation skills, wisdom, knowledge.
#சுந்தரகாண்டம், #ரத்னமாலா #ஸ்தோத்திரம், #ஹனுமான், #அனுமன், #தோஷம், #நவகிரகதோஷம், #பரிகாரம், #நவகிரஹம், #புதன், #budhan, #planet, #Navagraha, #SundarakaNdam, #Hanuman, #Dosha, #pariharam, #Rathnamala, #sloka, #Sthothram , #கல்வி, #ஞானம், #அறிவு, #Commmunication, #knowledge, #wisdom
Subscribe to:
Posts (Atom)