மின்மினிப்பூச்சிகள்
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
January 18, 2026
சென்னையை சேர்ந்த நாயன்மார் - திருவொற்றியூர் ஆலயத்தில் தீபம் ஏற்றிய கலியர்.
December 29, 2025
யாரோடு யார்
நமக்குப் பிறந்து
கைபிணைத்து பயணித்து
அகமலர்ந்து சிரித்து
சிந்தையில் சிலிர்த்து
அங்கமெலாம் பூரித்து
ரகசியங்கள் கிசுகிசுத்து
உயிரோடு உயிராக அழுது
கண்ணீரால் கவரிவீசி
உனக்காக நான்;
உனக்குள்ளே நான்;
வாக்குறுதி வழுவாமல்
வாழ்வின் விளிம்புவரை
உறுதியோடு உடன்வரும்
உண்மையான உறவு
ஆழ்மன அந்தரங்கம்...
ShakthiPrabha
December 15, 2025
November 10, 2025
October 17, 2025
எளிய நவகிரக பரிகாரம் ஸ்லோகம் - நவரத்தினமாலை சூட்டும் Simple Navagraha Pariharam -SundaraKandam.
October 14, 2025
சமர்ப்பணம்
ஆரியாம்பா சிவகுரு ஈன்ற
ஆனந்த அமுதே!
காலடியில் உதித்த
காமகோடி பீடமே - உம்
காலடி அளந்த வரமே,
பாரெங்கும் தழைத்தோங்கும்
அத்வைத வேத சாரமே.
..
சம்சார சாகரத்தை
முதலைப் படகேறி
சன்யாசமென மாற்றி
சனாதன வேருக்கு நீரூற்றிய
சங்கரன் புதல்வனே!
..
பன்னிரெண்டு வயதிலேயே
பாஷ்யங்கள் பலவியற்றி -பிரம்ம
சூத்திரத்தின் கருப்பஞ்சாறேடுத்து - எம்
அறிவு வேட்கைக்கு இன்னமுதளித்த
தாயுமானவரே!
..
மண்டனமிஸ்ரரின் தத்துவ சாரத்தை
வாதில் வென்ற வாணியின் சுடர்வடிவே!
ஆதார ஷண்மதங்களை
சீராக வகுத்த ஆதிகுருவே!
பொன்மன மங்கைக்கு
பொருள்மழை பொழிவித்த
திருவின் அருளே!
..
பூரணாநதி புரளும் பாதையை
தாரணியில் கொஞ்சம் வளைத்து,
பெற்றவளின் தீராத் துயர் தீர்த்து;
உமைச் சுமந்த தளிருடலுக்கு
இள வாழைத்தண்டிலே சிதையூட்டி
பிறவிப் பிணியறுத்த பெருஞ்சுடரே!
தாய்க்குத் தாயான தயாபரனே!
..
சிங்கார சாரதையை
சிருங்கேரி துவாரகையின்
பீடங்களில் ஸ்தாபித்து,
பூரி கோவர்த்தனத்தில்
கோலாகலமாகவே
கோபாலனை அமர்த்தி,
துவாரகையில் காளிகையும்,
பத்ரியின் பனியில்
பளிங்கென ஒளிரும் ஜோதிஷென,
வேத நான்கினை நிறுவ;
திக்கெட்டிலும் திக்விஜயம் செய்த,
தில்லையம்பலத்தின் திருவம்சமே!
..
எங்கள் காமகோடியின் காமதேனுவே
பரமாச்சாரியார் பணியும் பரம்பொருளே
உம் பெருமை பேச - பஞ்ச
இந்திரியங்களால் ஆகுமோ!
உம் பணி செய்து பண்புறவே
சிறியேனுக்கேகுமோ!
..
துரிதோத்தரணம் !
-ShakthiPrabha