November 08, 2020

நின்றசீர் நெடுமாற நாயனார்



.
சீரும் சிறப்புமாக மதுரை ஆண்ட பாண்டிய மன்னனின் இயற்பெயர் நெடுமாறன். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டு திகழ்ந்தார். இவருக்கு முதுகு கூன் விழுந்ததால் கூன் பாண்டியன் என்று வரலாறு குறிப்புகள் கூறுகின்றன. வடநாட்டிலிருந்து போர் முரசு கொட்டி வந்த பகைவர்களை திருநெல்வேலியில் தோற்கடித்த பெருமைக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்று போற்றபட்டார். சோழ இளவரசி மங்கையர்கரசியை தமது அரசியாக்கினார். 
.
மங்கையர்க்கரசியாரும், நெடுமாறனின் நீதி தவறாத அரசின் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் சிவ பக்தர்களாக சைவத்தின் பால் ஈடுபட்டிருக்க, மன்னன் நெடுமாறன் சமணர்களின் கருத்துடன் மெல்ல மனம் மாறி சமண மதத்தை தழுவியிருந்தார். அரசன் மதம் மாறியதால், மெதுவே குடிகள் சிலரும் சமண மதத்தை தழுவினர். சைவம் தழைத்தோங்கிய மதுரை மாநகரம் சமணத்தை தலைவணங்கி வரவேற்றது.
.
திருஞானசம்பந்தர் பாண்டி நாடு எழுந்தருளிய போது மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் அவரை நாடி சைவம் தழைத்தோங்க வேண்டிக்கொண்டனர். ஞானசம்பந்தரின் வருகை அறிந்த சமணர்கள் அரசரிடம் ஒப்புதல் வாங்கி, அவர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். அத்தீயை ஏவியவருக்கே திருப்பியனுப்ப பதிகம் பாடியதால், அரசருக்கு சுரநோய் வந்து அவதியுற்றார். சமணர்களால் தீர்வு காண முடியாமல், சம்பந்தர் "மந்திரமாவது நீறு" என்று பாடி திருநீறு பூசி குணமாக்கினார். சைவத்தை தழுவிய மன்னனின் கூனை நிமிர்த்தி 'நின்றசீர் நெடுமாற' நாயனார் ஆக்கினார் சம்பந்தர். சமணர்களை அனல் வாதம் புனல் வாதம் மூலம் வென்ற சம்பந்தருக்கு பெரும் மரியாதை செய்தார். (இதனையொத்த கதையை விளக்கமாக சம்பந்தர் வரலாற்றில் பார்த்தோம்) சிவ ஆகம முறைகளும் பூஜைகளும் ஆலயத்திருப்பணிகளும் முன் போல் நடைபெற ஆவன செய்தார்.
.
உடன் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் துணை நிற்க, அடியார்களை உபசரித்து, சிவத்தொண்டுகள் பல காலம் புரிநதிருந்து, அவனருளாலே அவன் தாள் பணிந்து நற்கதி எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment