சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
May 23, 2023
எங்கும் எதிலும் (zen inspiration)
April 12, 2023
நிரம்பியிருக்கும் கோப்பை
April 11, 2023
Agatha Christie's stories - Translation in Tamil (By ShakthiPrabha) மினி குறுநாவல்கள்
Happy to share... that, "ஸ்வர்ணகமலம்" - மே 2023 ஆண்டு மலரில், , 'Agatha Christie'- Crime genreன் சில குறுநாவல்கள் (few short stories), எனது மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது.
April 05, 2023
பேரமைதி (Inspired from Zen story )
April 04, 2023
ஏகம் (zen Story மொழியாக்கம்)
April 02, 2023
Zen story - கவிதை மொழியாக்க முயற்சி
March 30, 2023
உள்ளும் புறமுமாகி ( Inspired from Zen story)
March 28, 2023
நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் ) (Thomas Hood)
நினைவுச்சாரல்கள் (மொழியாக்கம் )
அக்ஷய பாத்திரங்கள் (மொழிபெயர்ப்புக் கவிதை)
அள்ளக் குறையாத
அன்பெனும் நீரூற்றை ஆன்மாவில் நிரப்பி,
மானுடத் துயர்துடைக்கும் அமுதசுரபிகளாக வேண்டும்;
வளரன்பில் புதைந்திருக்கிறது
வாழ்தலின் இன்பம்;
இறைவனின் கொடையை உறிஞ்சி
பிறர்க்குப் பரிசளிப்பதில் மறைந்திருக்கிறது
நமது தேடலுக்கான விடை.
**
மூலம்: ஆங்கிலம்: Ella Wheeler Wilcox
தமிழில் -ஷக்திப்ரபா
February 27, 2023
சொல்வனத்தில் மொழிபெயர்ப்புக் கவிதை (பயம் ) (மூலம் Khalil Gibran)
சொல்வனத்தில் எனது மொழிபெயர்ப்புக் கவிதை
மூலம் Khalil Gibran (Fear)
தமிழில் ஷக்திப்ரபா
(click on the link to read)
https://solvanam.com/2023/02/26/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/
Thankyou solvanam team.
February 06, 2023
சொல்வனத்தில் எனது மொழிபெயர்ப்புக் கவிதை
மேலேயுள்ள சுட்டியில் சொல்வனத்தின் பதிவாகியிருந்த எனது மொழிபெயர்ப்புக் கவிதை ( 2021 july)
May 03, 2019
பேரிளம்பருவம் (மொழியாக்கம் 3)
January 02, 2019
நட்சத்திரங்கள் (மொழியாக்கம் 2 ) Source: Listen by Vladimir Mayakovsky
சற்றே கேள்... எவனோ ஒருவனின் தேவைக்காக நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொரு இரவிலும் வானிறங்கி கூரை-உச்சியில் ஒரு நட்சத்திரமேனும் மின்னுவது மிக அத்தியாவசியம்""
Listen! (English Version)
Poet: Vladimir Mayakovsky a renowned Russian poet and social reformer. His multifarious talent won him recognition as poet, script writer, actor, artist, director, public speaker, there by making him a very influential person in Russian literature and politics.
Poetry talks on hope, that mankind sustains. Hope is the most beautiful gleaming pearl that lights even the darkest nights. He beseeches god to keep the hope alive but for which existence becomes impossible. He lights the lamp of hope in every mind suffering in despair.
November 20, 2014
புத்தர்கள் - zen poem - தமிழாக்க முயற்சி
August 17, 2009
Pablo Neruda`s - Saddest poem - சோகத்தின் வரிகள் [மொழிபெயர்ப்புக் கவிதை]
இனி என்னைப் பாதித்த அந்தக் கவிதை உங்களுடன்...

சோகத்தின் வரிகள்
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.
இப்படிக் கூடத் துவங்கலாம்..
"வான்முழுதும் நட்சத்திரங்கள்
நீலமாய்,
தூரமாய்,
நடுங்கும் நட்சத்திரங்கள்"
காற்றின் ஓம்காரம் வானெங்கும் எதிரொலிக்கும் இரவு.
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.
நான் அவளை நேசித்தேன்.
சில நேரங்களில் அவளும் கூட என்னை.
இது போன்ற இரவுகளில்,
எல்லையற்று விரியும்
வானக் குடையின் கீழ்
அவளை அணைத்து முத்தமிட்டிருக்கும்
எல்லையற்ற கணங்கள்..
அவள் என்னை நேசித்தாள்.
சில நேரங்களில் நானும் கூட அவளை.
ஜீவனற்று பெரிதாய் விரிந்திருக்கும் அந்தக் கண்களை
என்னால் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?
அவள் எனதில்லை என்ற எண்ணம்.
அவளைத் தொலைத்து விட்ட உணர்வு..
அதனால் தான்..
சோகத்தில் தோய்ந்த கவிதையொன்று இன்றென்னால் எழுதமுடியும்.
இரவுகளின் அடர்த்தி
அவளின் இல்லாமையால், இன்னும்கூட அடர்கிறது.
பனித்துளிகள் புல்லில் படர்வதைப் போல்..
கவித்துளிகள் இன்றென் நெஞ்செங்கும்.
இருத்திக்கொள்ள முடியாத காதலாய் இருந்தால் தான் என்ன?
தொலைந்த காதலின் ஊடே தொலையாத உணர்வுகள்...
நட்சத்திரங்களைத் தாலாட்டும் இவ்விரவின் மடியில்
தன்னந்தனியாய் நான் மட்டும்.
தூரத்தில் பாடலொன்று பட்டுத் தெறிக்கிறது.
தூரத்தில்..
ஆன்மாவை அவளிடமே விட்டுவிட்டு ஒற்றையாய் நான்.
கண்கள் அவள் அருகாமையை நாடத் துடிக்கிறது
நெஞ்சம் அவளைத் தேடிக் களைக்கிறது
இருப்பினும்..
அவள் என்னோடு இல்லை.
இதே இரவு..
இரவுப் பனியில் குளித்த இதே மரங்கள்...
நாங்கள் மட்டும் 'நாங்களை'த் தொலைத்து.
காதல் துறந்த பின்னும் கூட
காற்றில் கலக்காத காதல் உணர்வுகள்..
என் குரல்
காற்றின் தோளேறி அவள்
காதுகளைத் தேடியது.
அவள் வேறொருவனுடையவள்.
என் முத்தங்களில் தோய்ந்த அவள்..
அவள் மெல்லுடல்
அவள் குரல்
அவள் விரிந்த கண்கள்....
அவளுக்கான காதல் இறந்தேவிட்டிருப்பினும்..
அவளைக் காதலிக்கிறேன்.
காதலின் ஆயுள் சிறிது
அதன் மயக்கத்தின் நீளம் மட்டும் நீண்டுகொண்டே...
அவள் அருகாமையை உணர்ந்த இது போன்ற ஒரு இரவால்,
ஆன்மா தொலைக்கப்பட்டிருக்கிறது.
இது அவளால் எனக்குண்டாகும் கடைசி வலி என்றபோதும்...
இது அவளுக்கான என் கடைசிக் கவிதை என்றபோதும்...
மூலம்:
SADDEST POEM
Pablo Neruda.
I can write the saddest poem of all tonight.
Write, for instance: "The night is full of stars,
and the stars, blue, shiver in the distance."
The night wind whirls in the sky and sings.
I can write the saddest poem of all tonight.
I loved her, and sometimes she loved me too.
On nights like this, I held her in my arms.
I kissed her so many times under the infinite sky.
She loved me, sometimes I loved her.
How could I not have loved her large, still eyes?
I can write the saddest poem of all tonight.
To think I don't have her. To feel that I've lost her.
To hear the immense night, more immense without her.
And the poem falls to the soul as dew to grass.
What does it matter that my love couldn't keep her.
The night is full of stars and she is not with me.
That's all. Far away, someone sings. Far away.
My soul is lost without her.
As if to bring her near, my eyes search for her.
My heart searches for her and she is not with me.
The same night that whitens the same trees.
We, we who were, we are the same no longer.
I no longer love her, true, but how much I loved her.
My voice searched the wind to touch her ear.
Someone else's. She will be someone else's. As she once
belonged to my kisses.
Her voice, her light body. Her infinite eyes.
I no longer love her, true, but perhaps I love her.
Love is so short and oblivion so long.
Because on nights like this I held her in my arms,
my soul is lost without her.
Although this may be the last pain she causes me,
and this may be the last poem I write for her.




