May 23, 2023

எங்கும் எதிலும் (zen inspiration)

 


மலரும் பூக்களில்
சிந்தியிருக்கும் சிரிப்பு
அது சுமந்து வரும்
நேசத்தின் வாசம்
மலைகளின் கம்பீரம்
காற்றின் சுதந்திரம்
இயற்கையின் மடியில்
இறைந்திருக்கும்
வார்த்தைகளற்ற
உபநிடதங்கள்
மௌனமொழி கீதைகள்
எல்லா தத்துவங்களும்
போதிக்கப் படுவதில்லை.
புன்னகைப் பூக்களாக
மலரும் தருணங்களால்
சில பேருண்மைகள் உணரப்படுபவை
சுற்றிச் சுழன்றிருக்கும்
சக்தியின் இயக்கங்களிலும்
முக்திநிலை காணும்
தத்துவ ஞானி
-ShakthiPrabha

No comments:

Post a Comment