February 15, 2026

 




அண்டமே அகண்டமே

ஆனந்த ஜோதியே

ஆதியுமான பொருளே

ஆணுமல்லாத

பெண்ணுமல்லாத

ஆதாரமான நிலையே

..

திந்திமி திமிதிமியென

பிரபஞ்சம் விழித்தெழ

நாதமென எழும் நாதனே!

இடதுகாலைத் தூக்கி

இயக்கத்தை காட்டியே

நடமாடிடும் எம் ராஜனே!

..

பற்றற்ற வித்தின்

பரம்பொருள் ரூபமே

பரிபூரணானந்தனே!

பொன்னாபரணங்கள், 

மேற்பூச்சு வேண்டாத, 

பொன்னார் மேனியனே!

..

தனியனே! தலைவனே!

தாயுமானவனே..

உமைபாகனான  வரமே!

சிந்தையில் புகுந்த 

எந்தையே எழிலே

சித் அம்பரத்தின் அருளே!

..

மங்கலங்கள்  நிறைந்து  

உயிரெலாம் உயரவே 

அம்பலனே   அபயமென்று,

சங்கடங்கள் தீரவே

சங்கரனைப் பற்றினோம் ..

சிவமே! பவமே! எம் தவமே!

..

தவவிரதங்கள் ஏற்றே

அம்பிகை நாடிடும் 

அதிரூப சுந்தரனே! 

இன்னல்களைக் களைந்து

ஐயங்கள் போக்கிடும்

அத்தனே!  அன்பின் அமுதே!

..

காணும் காட்சியெலாம்

சின்மய ரூபமே....

ஹரஹர சிவசிவ  நமச்சிவாயமே

சிவசிவ ஹரஹர   நமச்சிவாயமே

-

எழும் ஓசையெல்லாம்

சின்மய ரூபமே 

ஹரஹர சிவசிவ  நமச்சிவாயமே

சிவசிவ ஹரஹர   நமச்சிவாயமே


ShakthiPrabha


February 14, 2026

அன்புள்ள எனது காதலர்களுக்கு



கண்டதை எழுதி
கணப்போழுது கழியாது
காதலர்தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
உள்ளமதை விரித்து
உனையே எங்கும் காணும்
உன்னத நிலையதனை
தேடிப் போகிறேன்
காதலர்தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
அபின்னமாகவே
அனைத்தயும் அளக்கும்
அற்புத கலைக் கண்ணை
நாடி போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
ஆங்கோர் உலகில்
அனந்தமென நிலைத்து
ஆனந்த வெள்ளத்தை
சுவைக்கப் போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
கண்டவர் மேல் கொள்ளும்
அன்பும் பாசமும்
காதலும் நேசமும்,
காலணா காசுக்கும்
காட்சிப் பெறாதே!
கண்ணனவன் நெஞ்சமதே
தஞ்சமெனப் போகிறேன்
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
கால வெள்ளத்தின் கரையில்
தொலை தூரத்தில்;
தூய மாடத்தில்;
தோரணம் நாட்டி
காத்திருப்பேன்..
உனை எதிர்பார்த்திருப்பேன்...
காதலர் தினத்துக்கெல்லாம்
கவிதை எழுத முடியாது
..
வந்து சேர்ந்துவிடு
வராமல் மறுப்பவரை
வருந்தி அழைத்துவிடு
கமலக் கண்ணனுடன்
காதலாகிக் கலந்திடுவோம்
சிறுசேவைகள் சாதித்து
பணி செய்திடுவோம்
மலர்களால் மாலைகட்டி
அணி செய்திடுவோம்
..
வாடித் துவளும்
பிறவியைச் சாடுவோம்
மாதவன் மட்டுமே
மாதவம் என்றே
பாடிப் பணிவோம்
ஆடிக் கொண்டாடுவோம்
.....
காதலர் தினத்துக்கெல்லாம்...
இதோ எனது கவிதை
உனக்கும்- எனக்கும்
அவனுக்கும் அவளுக்கும்
அன்னைக்கும் தந்தைக்கும்
பிள்ளைக் குலத்துக்கும்
அறிந்துமறியாத
அத்துனை உயிருக்கும்
புனைந்த கவிதை
💐 ShakthiPrabha 💐

January 28, 2026

புரிந்தாலும் புதிர்

 


பலகாலம் சுமந்திருந்த 
பழுப்பேறிய திரவம்
புளிப்பும் துவர்ப்புமாக 
விளிம்புவரை நுரைத்திருந்தது.
பொங்கித் ததும்பிடினும்
நிலைதடுமாறி கரைபுரளாமல்,
நளினமாகவே ஏந்தியிருந்தேன்...

அடையாளக் கோப்பையது,
என்னையே தாங்குவது!
குளிர் திரவமதை
கண்டவர் கிண்ணங்களிலும்
சொட்டுச் சொட்டாய்
சிந்தியபடியே நகர்கிறேன்
அடடா!  எட்டாத அதிசயமடி
மாயத்திரவமதுவும்
மதுரமாகிப் பொனதடி!

ShakthiPrabha


January 24, 2026

பாபங்கள் போக்கும் ரதசப்தமி - நாளை செய்ய வேண்டிய எளிய வழிபாட்டு முறை (25-1-26)







👇👇👇 Video talks about the Importance of Rathasapthami, simple ways to
observe Rathasapthami and benefits of performing prayers to Sun god on auspicious day of Ratha sapthami. 👇👇👇



 

January 18, 2026

சென்னையை சேர்ந்த நாயன்மார் - திருவொற்றியூர் ஆலயத்தில் தீபம் ஏற்றிய கலியர்.




Story of kaliya nayanmar, whose endurance and perseverance to do his humble contribution towards the lord Shiva, won him a permanent bliss and mukti.

#நாயன்மார்கள், #நாயன்மார், #கலியர், #கலியனார், #தீபம், #விளக்கு, #திருவிளக்கு, #சிவன், #சென்னை, #திருவொற்றியூர், #பக்தி, #வறுமை, #செக்கிழுத்தல், #செக்கு, #எண்ணை, #வியாபாரம், #ஞானம், #நிலையாமை, #உறவு, #சிவனடியார், #பெரியபுராணம், #முக்தி,
#பேரின்பம்

#Nayanmar, #NayanmargaL, #Lord, #Siva, #periyapuranam, #trader, #kaliyar, #diya, #deepam, #Shiva, #chennai, #tiruvottiyur, #poverty, #oil, #oilpressing, #Wisdom, #Mukti, #bliss


 

December 29, 2025

யாரோடு யார்




நமக்குப் பிறந்து

கைபிணைத்து பயணித்து

அகமலர்ந்து சிரித்து

சிந்தையில் சிலிர்த்து

அங்கமெலாம் பூரித்து 

ரகசியங்கள் கிசுகிசுத்து

உயிரோடு உயிராக அழுது

கண்ணீரால் கவரிவீசி

உனக்காக நான்;

உனக்குள்ளே  நான்;

வாக்குறுதி வழுவாமல்

வாழ்வின் விளிம்புவரை

உறுதியோடு  உடன்வரும்

உண்மையான உறவு

ஆழ்மன  அந்தரங்கம்...




ShakthiPrabha