மின்மினிப்பூச்சிகள்
சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
March 26, 2026
திண்ணியம் முருகர்-Ancient thiNNiyam Murugar temple கல்வி, ஞானம்-திருமணதோஷம் விலக-Removes Obstacles
தமிழ் வளர்த்த அந்தணர் - காரி நாயன்மார் - An inspiration
February 25, 2026
கவிச் சின்னங்கள்
கவிதொகுத்த
கற்றைப் பூச்செண்டின்
ஒற்றைச் சரத்தை
மெல்ல நிமிர்த்தி
மொட்டு விரியவே
மெல்லிசைக் கோர்த்து - புது
மெட்டமைத்து மேடையேற்றி
பட்டுவண்ண நூல்நூற்று
ஒளிப்பெருக்கி;
பட்டித் தொட்டியெங்கும்
ஒலிப்பெருக்கியதில்,
அமுதென எழுந்தது நாதம்
மெழுகென நெகிழ்ந்த நேயர்கள்
ஊனெனும் ஓலையில்
உயிரெனும் -மைத்தொட்டு
உணர்வுகளால்
எழுதிச் சென்றனர்.
ஒரேயொரு கவிதைக்கு
ஒவ்வொரு முறையும்
ஆங்கே புனையப்படும்
ஓராயிரம் கவிதைகள்!
(ShakthiPrabha)
February 23, 2026
சிவன் அடியவராகவே வாழ்ந்த அரசர் - கழற்றிற்று அறிவார்
February 15, 2026
அண்டமே அகண்டமே
ஆனந்த ஜோதியே
ஆதியுமான பொருளே
ஆணுமல்லாத
பெண்ணுமல்லாத
ஆதாரமான நிலையே
..
திந்திமி திமிதிமியென
பிரபஞ்சம் விழித்தெழ
நாதமென எழும் நாதனே!
இடதுகாலைத் தூக்கி
இயக்கத்தை காட்டியே
நடமாடிடும் எம் ராஜனே!
..
பற்றற்ற வித்தின்
பரம்பொருள் ரூபமே
பரிபூரணானந்தனே!
பொன்னாபரணங்கள்,
மேற்பூச்சு வேண்டாத,
பொன்னார் மேனியனே!
..
தனியனே! தலைவனே!
தாயுமானவனே..
உமைபாகனான வரமே!
சிந்தையில் புகுந்த
எந்தையே எழிலே
சித் அம்பரத்தின் அருளே!
..
மங்கலங்கள் நிறைந்து
உயிரெலாம் உயரவே
அம்பலனே அபயமென்று,
சங்கடங்கள் தீரவே
சங்கரனைப் பற்றினோம் ..
சிவமே! பவமே! எம் தவமே!
..
தவவிரதங்கள் ஏற்றே
அம்பிகை நாடிடும்
அதிரூப சுந்தரனே!
இன்னல்களைக் களைந்து
ஐயங்கள் போக்கிடும்
அத்தனே! அன்பின் அமுதே!
..
காணும் காட்சியெலாம்
சின்மய ரூபமே....
ஹரஹர சிவசிவ நமச்சிவாயமே
சிவசிவ ஹரஹர நமச்சிவாயமே
-
எழும் ஓசையெல்லாம்
சின்மய ரூபமே
ஹரஹர சிவசிவ நமச்சிவாயமே
சிவசிவ ஹரஹர நமச்சிவாயமே
ShakthiPrabha
February 14, 2026
அன்புள்ள எனது காதலர்களுக்கு
January 28, 2026
புரிந்தாலும் புதிர்