May 23, 2023

எங்கும் எதிலும் (zen inspiration)

 


மலரும் பூக்களில்
சிந்தியிருக்கும் சிரிப்பு
அது சுமந்து வரும்
நேசத்தின் வாசம்
மலைகளின் கம்பீரம்
காற்றின் சுதந்திரம்
இயற்கையின் மடியில்
இறைந்திருக்கும்
வார்த்தைகளற்ற
உபநிடதங்கள்
மௌனமொழி கீதைகள்
எல்லா தத்துவங்களும்
போதிக்கப் படுவதில்லை.
புன்னகைப் பூக்களாக
மலரும் தருணங்களால்
சில பேருண்மைகள் உணரப்படுபவை
சுற்றிச் சுழன்றிருக்கும்
சக்தியின் இயக்கங்களிலும்
முக்திநிலை காணும்
தத்துவ ஞானி
-ShakthiPrabha

தொலைந்தவள்



திரும்ப முடியாதொரு திருப்பத்தில்
நுழைந்து தொலைந்து போனேன்
கதறியழுது உடைந்து போனேன்
நொறுங்கி காணாதொழிந்தேன்
என் பழைய முகம்
மீட்கவே முடியாமல் மாறிப் போனது

April 21, 2023

Virtue of doing Namaskaram




அப்படிக் கீழே விழாமலிருப்பதற்கு நமஸ்காரம் என்பதாக வினயத்தோடு கீழே விழுவதே சஹாயம் பண்ணும்!

.
உசந்த ஸ்தானத்தில் இருக்கிறவன் தப்புப் பண்ணி இடறி விழுகிறபோதுதான் அப்புறம் எழுந்திருக்கவே முடியாமல் – அதாவது, அந்த
உசத்தியை மறுபடி அடையவே முடியாதபடி – ஊர் உலகமெல்லாம் சிரித்து அவனை மட்டந்தட்டி வைத்து விடுகிறது. மனிதன் அகபுற உயர்வு வீழ்ச்சிகள் தலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது
.
உலகம் சிரிப்பது, இருக்கட்டும். ஆத்மார்த்தமாக ஒருத்தனுக்கு எது நல்லது? எப்படி இருந்தால் அவனுக்கு உள்ளூர ஒரு நிறைவு, நிம்மதி ஏற்படுகிறது? பாரம் தூக்கினால் நிம்மதியா, அதை இறக்கிப் போட்டால் நிம்மதியா? பாரம் என்றால் இந்த சம்ஸார ஸாகரத்தில் ஏற்படுகிற கஷ்டங்களின் பாரம் மட்டுமில்லை. பெரிய பாரம் அஹம்பாவந்தான். தற்பெருமைதான். அதை இறக்கினாலே நிரந்தர நிம்மதி. அப்படி இறக்குவதற்கு சஹாயம் செய்யும் க்ரியைதான், ஒரு மநுஷ்ய சரீரத்தை இறக்கி பூமியோடு பூமியாகப் போட்டு நமஸ்கரிப்பது!
.
பிறத்தியார் இறக்கினால் அவமானம்; நாமே இப்படித் தலையை இறக்கினாலோ வெகுமானம்! தலைக் கனம், மூளைப் பெருமை போகவே தலையால் நமஸ்கரிப்பது! “தலையே நீ வணங்காய்!” என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியதும்.
.
உசத்தி ஒன்றும் வேண்டாம்; தாழவே இருக்க வேண்டும். உயர்மட்டத்தில் ஜலம் நிற்காமல் தாழ்மட்டத்திலேயே சேருகிற மாதிரி
நாம் மனோபாவத்தில் தாழ இருந்தால்தான் அருள்மழை – நம்மிடம் பாய்ந்து வந்து தேங்கி நிற்கும். அதற்கு அடையாளமாகத்தான் தலையோடு கால் சரீரத்தை நில மட்டத்தோடு தாழ்த்திக் கிடப்பது.
.
Virtue of being humble
நம்முடைய புராதனமான ‘ட்ரெடிஷ’னில் விநய குணத்திற்கு ரொம்பவும் சிறப்புக் கொடுத்திருக்கிறது. பதவி, பணம், அறிவு, அழகு என்று ஒவ்வொன்றை வைத்தும் அஹங்காரம், தலைக்கனம் ஏற இடமுண்டானாலும் அந்தத் தலைக்கனமும் ரொம்பத் தலைதூக்கி நிற்பது ‘அறிவிலே நாம் பெரியவர்’ என்று ஒருவர் நினைக்கிற போதுதான்! அப்படியிருப்பவர்கள் எதையும் துச்சமாக, தூக்கி எறிந்து, பரிஹஸித்து எல்லாம் பேசுவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட அறிவு விருத்தியை விநயத்தோடு சேர்த்து இறுக்கி முடிச்சுப் போட்டுக் கொடுத்து விட்டால் எல்லாவிதமான தலைக்கனங்களையும் அடக்கி இறக்கி விட்டதாக ஆகிவிடும். இதைத்தான் நம் சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கின்றன.
.
விநயம் இருக்கிற இடத்தில்தான் ஈச்வர கிருபை சேருமாதலால் எல்லாரும் அதற்கு ஆசைப்பட்டு, அதற்கு உபாயமாக உள்ள நமஸ்காரத்தை நிறையப் பண்ண வேண்டும். பெரியவர்களைத் தேடித் தேடிப் போய் நமஸ்காரம் பண்ணணுமென்று அந்த நாளில் சொல்லிக் கொடுப்பார்கள்.
.
People who are physically unfit to do Namaskaram

நான் விஸ்தாரமாய் சொல்வதைக் கேட்டுவிட்டு சரீர உபாதி காரணமாக அப்படிப் பண்ண முடியாதவர்களும் தங்களை வருத்திக் கொண்டு அப்படிப் பண்ண வேண்டும் என்றில்லை. அவர்கள் மானஸீகமாக அப்படிப் பண்ணினாலே போதும். ஸ்தூலமாகப் பண்ண முடியாத அவர்களுக்குத்தான், ‘பண்ண முடியலியே’ என்ற feeling நமஸ்காரம் பண்ணுகிறவர்களின் பக்தியையும் விட ஜாஸ்தியாக ஏற்படும்.
-
Namaskaram as a way for Mukti

‘நிலத்திலே கழி மாதிரி தண்டனிட்டுக் கிடக்கிறவன் அடைகிற ச்ரேயஸை நூறு யாகம் பண்ணினவனும் அடைய முடியாது’; ‘ஒரு நமஸ்காரம் பத்து அச்வமேதத்திற்கு ஸமம் என்பதுகூட ஸரியில்லை. ஏனென்றால் அந்தப் பத்து அச்வமேதக்காரனுக்குப் புனர்ஜன்மா உண்டு. நமஸ்காரமோ ஜன்ம விமோசனத்தையே தருகிறது’ என்றெல்லாம் தர்ம சாஸ்த்ரங்களில் நமஸ்கார பலனைச் சொல்லியிருக்கிறது.
.
Chapter: தலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது
Chapter: அருள்மழை சேரும் ‘தாழ்நிலை’
Chapter: விநயத்தின் சிறப்பு
Chapter: ஜன்ம விமோசனமே அளிப்பது
Chapter: விதி விலக்கு
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 20, 2023

மனிதனின் வீழ்ச்சியும் உயர்வும்

 Growth of Species called human

’மற்ற ப்ராணி வர்க்கங்கள் அத்தனையும் குறுக்கே வளர்கிற ஜந்துக்கள்; மநுஷ்யன் ஒருத்தன் தான் காலுக்கு மேலேயும் உடம்பு, சிரசு என்று உயரவாட்டில் ‘ஊர்த்வமுக’மாக வளர்கிறவன்;
.
சிருஷ்டி வர்க்கங்களிலேயே இவன் தான் உசந்தவன் என்பதால் இப்படி இவனைப் படைத்திருப்பது’ என்று பெருமை சொல்கிறதுண்டு. ஆனால் இந்த உசத்தி அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலேயும் கொண்டு விட்டால் இவன் மிருக ஜாதிக்கும் கீழே போக வேண்டியதுதான்!
.
Think high, walk high
நம்முடைய சிந்தனை, வாழ்க்கை முறை எல்லாம் மற்ற பிராணிகளுடையதைப் போல இந்த்ரிய ஸெளக்யங்களோடு முடிந்து போகாமல் உசந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பகவான் நம்மை இப்படிப் படைத்திருப்பதாகப் புரிந்து கொண்டு அதற்கான ப்ரயாஸைகளைப் பண்ணி இன்னும் உசந்த ஸ்திதிக்குப் போகணுமே தவிர, தற்பெருமைப் பட்டுக் கொண்டு கீழே விழுந்துவிடக் கூடாது.
.
To learn to be humble
தற்பெருமையை என்னவென்று சொல்கிறோம்? ‘தலைக் கனம்’ என்கிறோம். குறுக்கு வாட்டில் வளருகிற பிராணியாயிருந்து அப்படி மண்டைக்கனம் ஏறினால் பரவாயில்லை; ‘பாலன்ஸ்’ கெட்டுப் போகாமல் சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் உயரவாட்டில் இப்போது நாம் இருக்கிற தினுஸில் மண்டைக் கனம் ஏறினால்? ‘ஈக்விலிப்ரியம்’ என்கிற சமசீர் நிலையே கெட்டுப் போய், குலைந்து போய், தடாலென்று விழ வேண்டியதுதான்!
.
பகவான் நாம் உயரவாட்டில் வளரும்படி வைத்து சிரஸை உச்சியில் வைத்திருக்கிறார் என்றால் ஒரு போதும் தலைக் கனம் ஏறாமல், பணிவாயிருந்து நம்மை விழுவதிலிருந்து – வீழ்ச்சியிலிருந்து – காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
..
(அதற்கு என்ன செய்ய வேண்டும்?)
.
Chapter: மனிதனின் அக-புற உயர்வு-வீழ்ச்சிகள்
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 19, 2023

Offering Pranams / Namaskarams to Elders - தெய்வத்தின் குரல்

 




Humility of idolized souls.

இத்தனை வருஷமாக நித்யமும் நீங்கள் கூட்டங்கூட்டமாக வந்து எனக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டு வந்திருப்பதில் நானும் உங்களுக்காக அவனை(இறைவனை) மனஸால் நமஸ்கரித்து, உங்கள் நல்லதற்காக ப்ரார்த்தித்துக் கொள்ளத்தான் முடிந்த மட்டும் முயற்சி பண்ணி வந்திருக்கிறேன்.
.
நாங்கள்(துறவிகள்) உங்கள் நமஸ்காரத்தை மனசாலே தூக்கி, உங்களுக்காக நாங்கள் செய்கிற ப்ரார்த்தனையின் ‘வெயிட்’’டையும் அதோடு சேர்த்து நாராயணனிடம் கொண்டு இறக்க வேண்டும்.
.
Offering everything unto Lord NarayaNa
“இது நமக்குக் கொஞ்சங்கூட உரிமைப் பண்டமில்லை. நம் மூலமும் எதாவது நல்லது நடந்தால் அப்படி நடத்துவிக்கும் அந்த நாராயணனுக்கே உரிய ஸாமான் இது. அதை நாம் ஒரு கூலியாகத்தான் தாங்குகிறோம்” என்பது புரிந்து கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பக்தர்களிடம் ப்ரியத்தினால் அந்த பாரத்தை ஸந்தோஷமாகவே தாங்கி – தாற்காலிகமாகத் தாங்கி – பகவானிடம் இறக்க வேண்டும்.
...
அப்படி இறக்காமல் எங்களுக்கே அந்த நமஸ்காரம் என்று நினைத்துக் கொண்டால் அது நிரந்தரமான பாப பாரமே ஆகி விடும்.
-
Devotees carry no baggage
மறுபக்கம், நமஸ்காரம் பண்ணுகிறானே, அவனைப் பார்த்தால் அவன் தான் பாக்யசாலி என்று தெரிகிறது. என்ன பாக்யம் என்றால் பாரத்தைத் தள்ளி விட்டு அக்கடா என்று கிடக்கிற பாக்யம்! பெரியவர் என்று அவன் நினைக்கிற ஒருவருக்கு முன்னாடி தன்னுடைய உடம்பைத் தள்ளி நமஸ்கரிக்கிற போதே அவன், ‘இவர் நம்முடைய ஸமாசாரத்தைப் பார்த்துக் கொள்வார்’ என்று பாரத்தையும் தள்ளி விடுகிறான்.
Acharya talks about he becoming Peetaathipathi at a young age
இந்த மாதிரி பாரத்தைத் தள்ளி லேசாகி, எளிசாகி ஒருத்தருக்கு முன்னே நமஸ்கரித்துக் கிடக்கிற பாக்யம் எனக்கு பால்யத்திலேயே போய் விட்டது! பறிபோய் விட்டது! ‘ஸ்தானம்’ வந்து பாக்யத்தைப் பறித்துக் கொண்டு போய் விட்டது!
.
Chapter: நம் பிரார்த்தனையும் அடியார் நம்பிக்கையும்
Chapter: உயர் ஸ்தானம்; ஆயின் கூலி வேலை!
Chapter: நமஸ்கரிப்பவனே பாக்யசாலி
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 18, 2023

Rudhra - aspect of Shiva - பிரபஞ்சம் Cosmic Dance

Cosmic Dance - Nataraja


Rudhra who is the aspect of Shiva

வடக்கே ஹிமாசல கேதார்நாத், அமர்நாத்திலிருந்து தெற்கே ராம்நாத் (ராமேச்வரம்) வரை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஈச்வரனும் இரண்டு இல்லை.
.
ஒரு ஸமயத்தில் உக்ரம், இன்னொரு சமயத்தில் சௌம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே சௌம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.
.
அந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் சதாசிவ நாமா..
.
Creator and the Protector
மஹாவீரன் ரணபூமியில் உக்ரனாயிருக்கிறான், கிருஹத்தில் ஸெளம்யமாயிருக்கிறான் என்றேன். சுவாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; கிருஹமாகவும் இருக்கிறது! ஒரு பக்கத்தில் ஸம்ஹார கர்த்தாவாக இருக்கிறான்.! இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான்!
.
ஒரே ஸமயத்தில் இந்த இரண்டு கார்யமும் நடக்கிறது. ஒரே ஸமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி
ஸம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது! ஒரே ஸமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக் கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் ஸமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன! இந்த இரண்டு தினுஸான கார்யமும் ஒரே ஸமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த ஸர்வாந்தர்யாமி ஒரே ஸமயத்தில் ஸெளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது?
.
அவன் அவனாக மட்டுமே நிஜ ஸ்வரூபத்தில் இருக்கிறபோது இந்த இரண்டாகவும் இல்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். ஈச்வரனாயிருக்கும் போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான்.
.
மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிற போது ((நாமாக நமக்குள் இருக்கும் போது)) ஒவ்வொரு ஸமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு ஸமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்!
.
Sivan vs Sivam

சிவன்- அநுக்ரஹம் என்கிற கார்யம் செய்கிறவன். சிவம் – ஸகல கார்யமும் நின்று போய் அந்த அநுக்ரஹம் அநுபவ மாத்திரமாகப் பிரகாசிக்கிற பரப்ரம்ம நிலை!
.
அநுக்ரஹ மூர்த்தி சதாசிவன். அநுபவத்தில் அமூர்த்தியாயிருக்கும் ப்ரம்மம் சதாசிவம்.
.
அந்த அமூர்த்த ஸதாசிவம் தான் அநுக்ரஹத்துக்கே மூர்த்தியான ஸதாசிவனில் முடிகிற பஞ்ச க்ருத்ய மூர்த்திகளாகவும் மாயையில் கூத்தடிப்பது!
.
Shivam the eternal

‘ஸத்’தோடு ஸம்பந்தப்பட்டதாக ‘ஸதா’ என்பதைச் சொல்லலாம். எப்போதும் மாறாமல், சாகாமல் இருக்கிறதே ஸத். ‘ஸத்யம்’. ; ஸத் – Eternity; ஸதா - Eternal.
.
சாந்தமாக என்றும் உள்ள ஸத்ய வஸ்து ஸதாசிவம். அந்த சாந்தம் மாயையில் சலனமுற்றுத்தான் ஸ்ருஷ்டி – ஸ்திதி – லய (ஸம்ஹார) – திரோதான – அநுக்ரஹங்கள் நடப்பது. வெளியிலே இப்படி சலிக்கிற அப்போதும், எப்போதும் – ஸதா – உள்ளே சாந்தம் சாந்தமாகவே இருக்கிறது. ஸ்ருஷ்டிக்கு முந்தி, லயத்துக்குப் பிந்தி ஸதாவும் சாந்த சிவம் இருந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது.
.
அதுதான் மாயா ஸ்ருஷ்டியின் Base. மாறிக்கொண்டேயிருந்து அப்புறம் அழிந்தே போகிற சிருஷ்டியின் மாறாத Base;
அழிவேயில்லாத base.
.
Moolam (the Origin)
.
மரத்துக்கு base ஆன மண் மாதிரி அது. மண்ணில் விதை முளைக்கிறது. மரமாகிறது; அப்புறம் கடைசியில் அந்த மரம் மட்கிப் போகிறது. இதில் எத்தனையோ மாறுதல்கள்; முடிவாக அழிவு. விதையைத் தாங்கி உயிர் கொடுத்த மண்ணோ மாறாமலே இருக்கிறது. மாறாத அதன் மேலேயே விதை செடியானது; மரமானது; மரம் முற்றி, அப்புறம் மட்கியும் போனது! மட்கின மரமும் அந்த மண்ணோடேயேதான் மண்ணாக ஆகி விடுகிறது! அப்படி, மாயை நடக்கும் பிரபஞ்சத்துக்கும், அந்த மாயையையே நடத்தும் மஹேச்வரனுக்கும் ஸதாசிவமே base. அது மட்டுமில்லை; மாயையிலிருந்து விடுவிப்பதான அநுக்ரஹத்தைச் செய்யும் மூர்த்தியாக ஸதாசிவன் என்று இருக்கிறானே, அவனுக்கும் சதாசிவம் base. ஸதாசிவம் அமூர்த்தி, தத்வமயம்.
.
மாயா ப்ரபஞ்சம் எத்தனையோ கோடி கோடி வருஷம் நடந்து விட்டு – இத்தனை கோடி என்று கணக்கே இருக்கிறது – அப்புறம் ப்ரம்மத்தோடு
ஐக்கியமாகிவிடும்.
.
மாய ப்ரபஞ்சம் உள்ளவரை அதை ஸதாவும் நடத்துபவன், அதிலிருந்து கடத்துபவன் சதாசிவன். கடந்தபின், மாயமும் ப்ரபஞ்சமும் அடிபட்டுப் போனபின் ஏக ஆத்மாவாக நிற்கிற சாந்த அத்வைதமே சதாசிவம்.
.
Chapter: எப்போதும் உக்ரனே எப்போதும் ஸெளம்யனும்
Chapter: சிவனும் சிவமும்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 17, 2023

Glory of Cauvery and Thula Snanam (காவிரியின் பெருமை - துலா ஸ்நானத்தின் மகிமை)




(Glory of Cauvery and Thula Snanam) (Dosha Nivarthi)

.
இராமனாக ராவணனை வதம் செய்த பின் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா நரகாசுர வதத்திற்குப்பிறகு வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார்; கைலாஸத்துக்குப் போனார்.
Shankar-Narayana : Love and Respect for each other.
.
சைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இரண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டத் தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேருக்குமோ, ‘தாங்கள் இரண்டு பேருமே சாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோக அநுக்ரஹத்துக்காகவும், நிர்வாஹம் – சம்ஹாரம் என்று தொழில் பிரிவினை பண்ணிக் கொண்டு வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும்.
.
அதனால் அவரும் இவர் காலில் விழுவார்; இவரும் அவர் காலில் விழுவார். அடித்துக் கொண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு சமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு சமயம் மற்றவர் தோற்பார். அப்படியே அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.
.
இப்போது க்ருஷ்ண பரமாத்மா கைலாஸத்துக்குப் போய் ஈச்வரனிடம், “என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
.
Solution given by Lord Shiva
ஈச்வரன், “இது துலா மாஸம். (அதாவது நம் ஐப்பசி)*. இந்த மாஸம் பூராவும் புரதி தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீர ஹத்தி தோஷம் போயே போய்விடும்” என்று சொன்னார்.
.
Thula Snaanam
காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.
.
அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.
.
Dosha Nivirthi
யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.
.
உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.
.
ஆகையால் துலா மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸுர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கின்றன.
.
Detoxifying ourselves
புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உன் அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப்பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்பதுண்டு. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!
.
Chapter: ஈசன் சொன்ன பிராயச்சித்தம்
Chapter: காவேரி துலா கட்டம்
Chapter: தீபாவளியில் காவேரி ஸ்நானம்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)