April 05, 2015

நிரந்தர வரம்



கதைகளில்
கவிதைகளில்
வார்த்தைகளில்
வசனங்களில்
சொற்களில்
சொல்லாமலே சென்ற
முட்களில்
பாடல்களில்
ராகங்களில்
உணர்வுகளைத்
தேடித் திரிந்து
தேகம் நலிந்து
வருடங்கள் தொலைந்து
வருத்தங்கள் மெலிந்து விட்ட போதிலும்
மலிந்து விடவில்லை நம் காதல்
உன் நினைவுக் கிடங்குகளில்
புன்னகைத்து
பன்னீர்ப் பூச்சொரிகிறேன்
பிரார்த்தனைகளால்
பாலமிட்டு மிளிரும்
தெய்வீகக் காதல்

-ஷக்திப்ரபா