October 31, 2022

சுந்தரருக்கு பொன்னின் மாற்று உரைத்த பிள்ளையார் (தெய்வத்தின் குரல்)

 #Deivathin_kural Volume 7:

***************************
Leelas of the Lord (shiva) and Ganesha's assistance for Sundarar (short cute story)
------------------------------------------------
ஃப்ரெண்ட் என்கிற முறையிலே ஸுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) ஸ்வாமிகிட்டே (ஈசனிடம்) எதை வேணாலும் கேட்பார். பரவை நாச்சியார் என்று அவருக்கு ப்ரியாமானவள். அவள் ஸுந்தரமூர்த்திகளின் ஊரான திருவாரூர் கோவிலில் நாட்யம் பண்ணுகிறவர்களில் பரம பக்தையான ஒரு உத்தமி. ரொம்பவும் தானதர்மிஷ்டை. அவள் வாரிக் கொடுக்கிறதற்காக ஸுந்தரர் அப்பப்போ "பொன்னு தா", "நெல்லு தா" என்றெல்லாம் ஸ்வாமியிடம் நச்சரித்துப் பெற்றுக் கொள்வார்.
.
ஒருமுறை விருத்தாசலத்திலேயும் அவர் பொன் கேட்டு, ஸ்வாமியும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். ஸுந்தரர் அதோடு விடாமல் "கொடுத்தது மட்டும் போறாது. இதைக் காபந்து பண்ணி எடுத்துண்டு நான் ஊர் ஊராப் போயத் திருவாரூர் சேருகிறது கஷ்டம். ஆனதாலே இதை நீயே எப்படியாவது அங்கே சேர்த்திடு" என்றார்.
.
ஸ்வாமியும் "ஸரி" என்றார். ஆனால் கொஞ்சம் லீலை பண்ண நினைத்து, "இந்தப் பொன்னை இங்கே ஓடற மணிமுத்தாற்றிலே போட்டுடு. அப்பறம் ஊர் ஊரா என்னைப் பாடிண்டு திருவாரூருக்குப் போய் அங்கே கமலாலயத்திலே - அதுதான் அங்கே உள்ள பிரஸித்தி பெற்ற திருக்குளம் - ஈசான்ய 'வடகிழக்கு' மூலையிலிலேருந்து கலெக்ட் பண்ணிக்கோ" என்றார்.
.
"அப்படியே" என்று மணிமுத்தாற்றிலே பொன் மூட்டையைப் போடப் போன ஸுந்தரருக்கு ஒரு ஸந்தேஹம் வந்தது. "நாம் ஸ்வாமியை படுத்தியெடுக்கிறோம் என்கிறதாலே, ஸ்வாமி இங்கே உசந்த மாற்றுத் தங்கமாக் குடுத்துட்டு கமலாலயத்தில எடுக்கறப்போ மாற்று கொறைச்சுடப்போறார்" என்று நினைத்தார். இரண்டு இடத்திலேயும் உரைத்து மாற்றுப் பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்று நினைத்தார்.
.
உடனே அவருக்கு ஸஹாயம் செய்வதற்காகப் பிள்ளையார் வந்து நின்றார். பொன்னை உரைத்துப் பார்த்து, பத்தரை மாற்று - 24 காரட் - என்று - 'ஸர்டிஃபை' பண்ணினார். விருத்தாசலம் கோவிலில் அறுபத்து மூவருக்குப் பக்கத்தில் 'மாற்றுரைத்த பிள்ளையார்' என்றே அவர் இருக்கிறார்,
.
அந்தப் பொன்னில், பின்னாடி 'கம்பேர்' பண்ணுவதற்காக ஸாம்பிளாக ' ஒரு துணுக்கை ஸுந்தரர் வெட்டியெடுத்துக் கொண்டு மூட்டையை அப்படியே மணிமுத்தாற்றில் போட்டு விட்டார். அப்புறம் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் பாடிக்கொண்டே போய்த் திருவாரூரை அடைந்தார்.
.
பரவை நாச்சியாரைக் கமலாலயத்தின் ஈசான்யத்தில் படித்துறையில் நிறுத்தி விட்டுக் பொன்னை எடுப்பதற்காக குளத்துக்குள் இறங்கினார். இவர் நினைக்காததை ஸ்வாமி விளையாடினார். இவர் தேடு தேடு என்று தேடியும் பொன் மூட்டையே அகப்படவில்லை!
.
பரவையானால், "எங்கேயோ ஆத்துலே போட்டுட்டு இங்கே கொளத்துலே தேடறீரே ஸ்வாமி" என்று பரிஹாஸம் பண்ணினாள். அவள் சொன்னது பிற்பாடு வசனமே ஆகிவிட்டது! ஸுந்தரருக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. உணர்ச்சி ஜாஸ்தியானால் அவருக்குப் பாட வந்துவிடும். "பொன் செய்த மேனியினீர்!" என்றே ஆரம்பித்துப் பாடினார். (பிறிதொரு சமயத்தில்) "பொன்னார் மேனியனே!" பாடினதும் ஸுந்தரர்தான்.
.
ஸ்வாமி இவருடைய பாட்டைப் பெறணுமென்றே தான் சோதித்தது இவர் பாடினவுடனே பொன் அகப்படும்படிப் பண்ணிவிட்டார்! இங்கேயும் பிள்ளையார்தான் வந்து மாற்றுப் பார்த்தார். அதனால் திருவாரூரிலும் ஒரு மாற்றுரைத்த விநாயகர் உண்டு. ஸுந்தரர் பயந்த விளையாட்டையும் ஸ்வாமி இப்போது பண்ணியிருந்தார்!மச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்று குறைந்திருந்தது!14 காரட்!
.
பாட்டு ப்ரியரை ஸுந்தரர் மறுபடி ஸ்துதித்தார். ஸ்வாமியும் பதினாலை இருபத்து நாலாகவே மாற்றிக் கொடுத்தார்.
.
Chapter: சுந்தரருக்கு அருள் (VOLUME 7)
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 30, 2022

Lord Ganesha heeded to the plea (cute n short incident) (Deivathin Kural)

 

செவிசாய்த்த வினாயகர்

லால்குடிக்குக் கிட்டே அன்பில் என்று ஒரு ஊர். தேவாரத்தில் அதை அன்பில் ஆலந்துரை என்று சொல்லியிருக்கிறது. அப்பரும் ஸம்பந்தரும் அந்த க்ஷேத்ரத்திற்குக் கிளம்பினார்கள். வழியிலே கொள்ளிடம் குறுக்கிட்டது. ஒரே வெள்ளம் பரிசலா, படகா ஒன்றுமே போக முடியாத வெள்ளம் இப்படி ஆச்சே என்று அவர்கள் அக்கரையில் நின்று கொண்டே ஸ்வாமியிடம் முறையிட்டார்கள்.
.
அப்போது ஸ்வாமி கேட்டுக் கொள்கிறதற்கு முன்னாடி அங்கேயிருந்த பிள்ளையார்தான், "வெள்ளச் சத்தத்தோட யாரோ ப்ரலாபிக்கிற குரலும் கேக்கறாப்ல இருக்கே" என்று காதை அந்தப் பக்கம் கொஞ்சம் சாய்த்து உன்னிப்பாகக் கேட்டார். 'செவி சாய்க்கிறது' என்பதை நிஜமாகவே பண்ணினார் .
.
மஹா பக்தர்களான அப்பர் - ஸுந்தரர்களின் குரல் என்று தெரிந்து கொண்டார். உடனே அப்பாவுக்கு 'ரிலே', 'ரெகமன்டேஷன்' எல்லாம் பண்ணினார். அப்பாவும் உடனே வெள்ளம் வடியும்படிப் பண்ணி அவர்களைக் கோவிலுக்கு வரவழைத்துக் கொண்டார்.
.
அன்பிலாலந்துறையில் 'செவிசாய்த்த விநாயகர்' என்றே அந்தப் பிள்ளையார் விக்ரஹ ரூபத்தில் அழகாகக் காதைச் சாய்த்துக் கொண்டு இருக்கிறார்.
.
Chapter: தேவார கர்த்தர் இருவருக்கு அருள்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 27, 2022

Lord Vinayaka guided Sambandhar (short incident at thErezhundhur) (தெய்வத்தின் குரல்)

சம்பந்தர் குமாரஸ்வாமி அவதாரம்.

..
தேரழுந்தூர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தமிழ் கவிச் சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். அங்கே ஸ்வாமிக்கு வேதபுரீச்வரர் என்றே
பேராயிருப்பதால் ஊருக்கே வேதபுரி என்று இன்னொரு பேர் இருந்திருக்கணும். அந்த வேதபுரியில்தான் தமிழின் சக்கரவர்த்திக் கவி பிறந்திருக்கிறார் அங்கே "ஞான ஸம்பந்த விநாயகர்" என்றே ஒரு பிள்ளையார் இருக்கிறார்.
.
சம்பந்தரின் பாடல் பெற்ற அந்த ஸ்தலம் வைஷ்ணவர்களின் திவ்ய தேசத்திலும் ஒன்று. ஆமருவியப்பன் என்றும் கோஸகர் என்றும் ப்ரக்யாதி வாய்ந்த பெருமாள் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறார்.
.
ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அந்த ஊருக்குப் போனபோது இரண்டு பக்கங்களில் இரண்டு கோபுரங்கள் தெரிந்தது. ஒன்று ஈச்வரன் கோவில்.
இன்னொன்று பெருமாள் கோவில்.
.
அனன்யமான பக்தியை - அதாவது, ஒரு தெய்வத்திடம் மட்டுமே மனஸைப் பூர்ணமாக அர்ப்பணித்துச் செய்கிற பக்தியை - ஈச்வரனிடமே வைக்கவேண்டுமன்று தான் அவருக்கு அதிகாரம் சிவ பக்தியை வளர்த்துக் கொடுக்கவே அதிகார புருஷராக அவதாரம் செய்திருந்தவர் அவர். அதனால் கண்ணுக்குத் தெரிந்த இரண்டு கோவிலில் எது சிவாலயம் என்று தெரியாமல் அவர் கொஞ்சம் குழம்பினார். அப்போது இந்தப் பிள்ளையார்தான் அவருக்குக் கோவிலை அடையாளம் காட்டினார். அதனால் 'வழிகாட்டி விநாயகர்' என்றும் அவருக்கு ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது.
.
ரொம்பவும் ஸந்தோஷத்துடன் சிவாலயம் சென்று பதிகம் பாடின ஸம்பந்தர் ஸ்வாமியிடம், "எனக்கு வழிகாட்டியது பிள்ளையார்தான் என்று
என்றென்றைக்கும் லோகம் நினைவு வைத்துக் கொள்ளும்படியாக அவருக்கு என் பெயரையே சூட்ட வேணும். அதோடு, நீங்கள் ஆர்த்ரா (ஆருத்ரா) தர்சனமும் அந்த ஸந்நதியில்தான் மண்டகப்படி நடத்திக் கொள்ள வேண்டும்" என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டார்.
.
அதனால்தான் அங்கே அந்தப் பிள்ளையாருக்கு 'ஆளுடைய பிள்ளையார்' என்றே சொல்லப்படும் ஞானஸம்பந்தரின் பேர். அந்த ஊர் சிவன் கோவில் நடராஜாவுக்குத் திருவாதிரையின் போது இன்றைக்கும் அங்கேதான் ஆர்த்ரா தர்சன வைபவம் நடத்தப்படுகிறது.
.
Chapter: சம்பந்தருடன் சம்பந்தம் Volume 7
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 25, 2022

வானத்தில் திருவிழா

(Pic Credit: Bharath G. Babu)

அடிவானத்து அடுப்பு
பொன்னெனக் கனன்றெறிய;
அழகான வெண்முகிலும்
அரிசியெனத் திரண்டெழும்ப;
அந்தி சூரியனே வெல்லப்பாகாகி,
வானத்துப் பானையில்
வாழ்த்தொலிக்க பொங்கலிட்டு..
தென்றலது வேதம் முழங்க,
தேவதைகள் பூத்தூவ,
பூமகளும் பசும்பாய் விரித்து,
விண்ணகத்து தேவதைக்கு
விரைந்தமுதளிக்கும்
கவின்மிகு திருவிழா !
புரட்டாசி மகளுக்கு
புவிதன்னில் பெருவிழா!
எழிற்காட்சி கண்ட
என்னகமும் களிப்பேறி;
ஈடிலா இயற்கையின்
இதமான மடி சாய்ந்து;
இசைந்தே அசைந்தாடி
மதிமயக்கம் கண்டதே!

October 23, 2022

Mother Ganga, SriLakshmi and Deepavali (Excerpts From Deivathin Kural)

‘கங்கா ஸ்நானம்’ என்று ஏன் தீபாவளியன்று வைத்திருக்கிறது?

.
’இந்த நாளை பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள்.
.
இதிலே தனது பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.
.
இப்படி கங்கா ஸ்நானம் பண்ணியவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம் எல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாள். அவள் நரகனுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் அல்லவா? Mother earth என்றே இங்கிலீஷில்கூடச் சொல்கிறார்களே! பசு, பூமி, வேதம் மூன்றையும் ஸகலருக்கும் தாயாராகவே சொல்லியிருக்கிறது.
.
இருந்தாலும் நரகனை நேரே தான் பெற்றதால் அவனிடம் அதிகப் பிரியம் வைத்து இந்த நாளுக்கு ‘நரக சதுர்த்தசி’ என்றே பேர் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டாள். ஆனாலும் இப்போது பஞ்சாங்கத்தில்தான் அந்தப் பேர் போட்டிருக்கிறதே தவிர, நாம் தீபாவளி என்றே சொல்கிறோம். ‘தீபாவளி’ என்றால் தீப வரிசை. வடக்கேதான் இப்படி விளக்கேற்றி வைத்து நிஜ தீபாவளியாக்க் கொண்டாடுகிறார்கள். நாம் கார்த்திகை தீபோத்ஸவம் என்று வைத்துக் கொண்டு விட்டோம்.
.
Chapter: ஏன் கங்கா ஸ்நானம்?
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

கீதை : தீபாவளியின் தம்பி (Excerpts from Deivathin Kural)

பகவத்கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
ஸக்ருதபி யேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேந சர்ச்சா
என்று ’பஜகோவிந்த’த்தில் சொல்கிறார்.
...
‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை – அதாவது யமலோகத்துக்கு, நரகத்துக்குப் போகாமல், புண்ய லோகத்துக்கு அவன் போகிறான்’ என்று அர்த்தம். கங்கா தீர்த்த பானம் பண்ணினவனிடம் யமனுக்கு ‘ஜூரிஸ்டிக்‌ஷன்’ இல்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.
.
இந்த ஸ்லோகத்தில் ஒரு ஆச்சரியம், இதில் சொல்லியிருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி ஸம்பந்தம் இருப்பதுதான்!
.
பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புஸ்தகங்களில் கீதை உச்சியாக இருக்கிறது. தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரே தான் கொடுத்திருக்கிறார்.
.
முராரியை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். பகவானுடைய பெயர்கள் எத்தனையோ இருக்க ‘முராரி ஸமர்ச்சா’ என்றே சொல்கிறார். நரகாசுரனின் ஸகாவான முரனைக் கொன்றபோதுதான் பகவான் முராரியானார்.
.
ஆசார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகன் என்றவுடனேயே நரகத்தின் ஞாபகமும் யமதர்மராஜா ஞாபகமும்தான் வருகின்றன. அதுவும் தவிர, தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் ‘யம தீபம்’ என்றே போடுகிறார்கள்.
.
ஆசார்யாள் சொல்கிற கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள ‘கனெக்‌ஷன்’::: (we will briefly read about it tommmorrow)
.
Chapter: கீதை : தீபாவளியின் தம்பி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

October 01, 2022

Where does Sri.Lakshmi Reside (Deivathin kural)

 



லஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து.

.
* ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு,
* மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம்,
* யானையின் மஸ்தகம் (தலை),
* வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு
* பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது.
.
ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது (தாழ்ந்தது) என்று எதுவுமேயில்லை. அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே (உயர்ந்தனவே). நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம். பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை.
.
Chapter: கோமாதாவும் லக்ஷ்மியும்
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

அம்பாள் திருவடி மகிமை ( #Deivathin_kural Volume 6: )

Thiruvadi Mahimai




திருவடித் தூளி என்னவெல்லாம் அநுக்ரஹம் செய்கிறதென்று மூன்றாம் ச்லோகத்தில் சொல்கிறார். ப்ரபஞ்சத்திலுள்ள ஜீவர்களுக்கு அது எப்படியெல்லாம் அநுக்ரஹிக்கிறது; ப்ரபஞ்சத்திலிருந்தே விடுவித்தும் அநுக்ரஹிக்கிறது என்று சொல்கிறார்.
.
அவித்யா என்றால் அஞ்ஞானம். அது ஒரு பெரிய இருட்டு; ‘திமிரம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருக்கும் இருட்டு. ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது. இப்படி அஞ்ஞானியாக இருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின் பாததூளி கொடுக்கிறது.
.
அவித்யை என்பது ஆத்மாவைத் தெரிந்து கொண்ட மஹான்களைத் தவிர பாக்கி அத்தனை பேரையுமே பிடித்திருப்பது. மஹா புத்திமான்கள், கெட்டிகாரர்களுங்கூட அவித்யையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். '
.
அவர்கள் அறிவு வறண்டு போயிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அதற்குள்ளே அம்பாளின் பாததூளி ஒரு தேனான ப்ரவாஹத்தை ஃபௌன்டனாகப் பீய்ச்சியடித்து பசுமையாகப் பண்ணுகிறது. தேனென்றால் அது ஒரு புஷ்பத்திலேதானே ஊறும்? இங்கே அப்படிப்பட்ட புஷ்பம் எது? எதுவென்றால், 'ஜீவ ஓட்டமுள்ள அறிவென்கிற பூங்கொத்து'. சைதன்யம் என்பது சித் என்கிற பரம ஞானந்தான். அதுவே மந்த புத்திகாரர்களுக்கு புத்திப் பிரகாசத்தை தேனாகப் பாய்ச்சுகிற பூங்கொத்தாக இருக்கிறது.
.
சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதை எல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும் தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். நாம் என்ன இஷ்டப்பட்டாலும் அதை உண்டாக்கிக் கொடுத்துவிடும்.
.
இப்படி மூன்று இருக்கின்றன– காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று.
..
சிந்தாமணி அசேதனமான ஜட பதார்த்தத்தைச் சேர்ந்தது – கல்லு, மண்ணு மாதிரியான பதார்த்த வகை.
.
கல்பக வ்ருக்ஷம் சேதனமும் ஜடமும் சேர்ந்த தாவர வகை. தாவரங்கள் ஜலத்தைக் குடிக்கிறது, வேர் கிளை என்று வளர்கிறது, இனவிருத்தி பண்ணிக் கொள்கிறது ஆகிய அம்சங்களால் சேதன ஜாதியில் வருகின்றன. ஆனால் அவை இருந்த இடத்தை விட்டு நடக்க முடியாது;
காமதேநு பூர்ணமான சேதன ஜீவன். ரூபத்தில் மிருகமான பசுவாயிருப்பது. அறிவிலோ மநுஷ்யர்களுக்கும் மேலே திவ்யமான நிலையிலிருப்பது. இப்படி, இஷ்டத்தைக் கொடுப்பதில் மூன்று தினுஸான ஸ்ருஷ்டியினங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று. Animal Kingdom , Vegetable Kingdom , Mineral Kingdom என்ற மூன்றில் ஒவ்வொன்றிலும் ஸகல இஷ்ட பூர்த்தி பண்ணுவதாகக் காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று ஒவ்வொன்று இருக்கின்றன.
.
அதில் அம்பாளின் பாததூளி தரித்ரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது.
இந்த ஸெளந்தர்ய லஹரியிலேயே சிந்தாமணிகளைக் கோத்துச் செய்த ஜப மாலையையே உருட்டிக் கொண்டு சில மஹா பாக்யசாலிகள் அம்பாள் மந்திரத்தை ஜபிக்கிறார்களென்று வருகிறது: ஒரு சிந்தாமணியே கேட்டதையெல்லாம் கொடுத்து விடும். கேட்டதற்கும் மேலே எத்தனையோ பங்கு [மடங்கு] அம்பாள் பாததூளி கொடுக்குமாதலால் பல சிந்தாமணிகளைக் கோத்த மாலையாக அதைச் சொல்லியிருக்கிறார்.
.
கல்பக வ்ருக்ஷம் பற்றியும் சொல்லியிருக்கிறார். அதுவும் பாத மஹிமையைச் சொல்வதுதான். கல்பகம் மாதிரியே இன்னும் நாலு தேவலோக விருக்ஷங்களும் கேட்டதையெல்லாம் கொடுப்பவையாதலால் எல்லாவற்றையும் சேர்த்து ‘தேவலோக தருக்கள்’ என்கிறார்.
.
அந்த நாலு என்னவென்றால்
பாரிஜாதம் ஒன்று.
மந்தாரம் இன்னொன்று.
ஸந்தானம்,
ஹரிசந்தனம் என்பவை பாக்கி இரண்டு [தெய்விகமான மர வகைகள்]:
.
என்ன சொல்கிறாரென்றால், கல்பக விருக்ஷம் முதலான ஐந்தும் அதன் கீழே வந்து நிற்பவர்களுக்கு அந்த ஸமயத்தில் மாத்திரம் தங்கள் கிளை நுனியிலுள்ள துளிர்கள் மூலம் இஷ்ட பூர்த்தி தருகின்றன. தேவலோகவாஸிகள் மாத்திரந்தான் அப்படி அந்த விருக்ஷங்களுக்குக் கீழே போய் நிற்க முடியும். ஆனால் ஸர்வ ஜனங்களுக்குமே, உன் பாதங்கள் ஸதாகாலமும் இஷ்ட பூர்த்தி தருகின்றன” — என்று சொல்லி, இன்னும் சில சமத்காரங்களும் பண்ணியிருக்கிறார்.
.
இப்படியாக, அம்பாளின் பாததூளி அவித்யை இருட்டுக்கு ஸூர்யோதயமாயும், ஜடத் தன்மை போக்கும் சைதன்யத் தேனாகவும், தரித்ரம் போக்கும் சிந்தாமணியாகவும் இருக்கிறது.
.
இன்னும் என்ன பண்ணுகிறது அந்தப் பாததூளி? நமக்கு முக்யமாகத் தெரிவது அறிவாளியாவதும், ஐச்வர்யவானாவதுந்தான். ஆனால் ஆசார்யாளுக்கு முக்யம் நம்முடைய அவித்யை போய் நாம் ஸம்ஸார நிவ்ருத்தி பெறுவதுதான்.
.
‘பிறவிப் பெருங்கடல்‘ என்று திருவள்ளுவர் சொல்கிறாரே, அதுதான் ‘ஜன்ம ஜலதி’. ‘பொய்ம் மாயப் பெருங்கடல்‘ என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிற ஸம்ஸார ஸாகரமும் அதுதான். அதிலே நாம் அப்படியே முழுகிப் போயிருக்கிறோம். ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிப் போனவர்களுக்கு அம்பாளுடைய பாததூளி என்னவாக இருக்கிறது என்றால், – ”முரரிபு வராஹஸ்ய தம்ஷ்ட்ரா பவதி”: வராஹமாக வந்த மஹாவிஷ்ணுவின் கோரைப் பல்லாக இருக்கிறது. ‘தம்ஷ்ட்ரம்’ என்றால் கோரைப் பல்.
.
வராஹாவதாரத்தின் கோரைப் பல்லாக இருக்கிறதென்று சொன்னால் என்ன அர்த்தம்? சம்ஸார ஸாகரத்தில் முழுகியுள்ள நம்மையெல்லாம் அதிலிருந்து வெளியிலே கொண்டுவந்து தூக்கி நிறுத்தும் கோரைப் பல்லாக அம்பாளின் சரண பாம்ஸு [பாததூளி] இருக்கிறது:
.
Chapter: இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி
.
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)