October 25, 2022

வானத்தில் திருவிழா

(Pic Credit: Bharath G. Babu)

அடிவானத்து அடுப்பு
பொன்னெனக் கனன்றெறிய;
அழகான வெண்முகிலும்
அரிசியெனத் திரண்டெழும்ப;
அந்தி சூரியனே வெல்லப்பாகாகி,
வானத்துப் பானையில்
வாழ்த்தொலிக்க பொங்கலிட்டு..
தென்றலது வேதம் முழங்க,
தேவதைகள் பூத்தூவ,
பூமகளும் பசும்பாய் விரித்து,
விண்ணகத்து தேவதைக்கு
விரைந்தமுதளிக்கும்
கவின்மிகு திருவிழா !
புரட்டாசி மகளுக்கு
புவிதன்னில் பெருவிழா!
எழிற்காட்சி கண்ட
என்னகமும் களிப்பேறி;
ஈடிலா இயற்கையின்
இதமான மடி சாய்ந்து;
இசைந்தே அசைந்தாடி
மதிமயக்கம் கண்டதே!

No comments:

Post a Comment