April 04, 2023

ஏகம் (zen Story மொழியாக்கம்)

 



துகளென்று துவளாதே- பேரண்டத்தின் சிறு
நகலென்று புரிந்த கணமே விலகும்,
தீராத வினைகளின் ஆறாத வலிகள்.
போறாத காலமும் பொன்னாக மாறும்,
மீளாப் பெருந்துயரும்- சுக்கு
நூறாகிச் சிதறும்..
எள்ளி நகையாட எவரும் நலிந்தாரிலை,
தள்ளி பயந்தோட அவரொன்றும் வேறிலை.
பரவெளியின் சங்கமெனப் பிறந்ததிந்த வங்கமே!
புத்தனுக்குள் எழுந்த போதிமரத்து ஞானமிது
சித்தனென்று ஆக்கிடும் உனையே.
--
மூலம்: Zen கதைகள்
தமிழில் சாரத்தை மொழியாக்கிய முயற்சி:
ஷக்திப்ரபா

No comments:

Post a Comment