April 17, 2023

Glory of Cauvery and Thula Snanam (காவிரியின் பெருமை - துலா ஸ்நானத்தின் மகிமை)




(Glory of Cauvery and Thula Snanam) (Dosha Nivarthi)

.
இராமனாக ராவணனை வதம் செய்த பின் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா நரகாசுர வதத்திற்குப்பிறகு வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார்; கைலாஸத்துக்குப் போனார்.
Shankar-Narayana : Love and Respect for each other.
.
சைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இரண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டத் தோன்றுகிறது. அவர்கள் இரண்டு பேருக்குமோ, ‘தாங்கள் இரண்டு பேருமே சாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோக அநுக்ரஹத்துக்காகவும், நிர்வாஹம் – சம்ஹாரம் என்று தொழில் பிரிவினை பண்ணிக் கொண்டு வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும்.
.
அதனால் அவரும் இவர் காலில் விழுவார்; இவரும் அவர் காலில் விழுவார். அடித்துக் கொண்டு சண்டையும் போட்டுக் கொள்வார்கள். அதில் ஒரு சமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு சமயம் மற்றவர் தோற்பார். அப்படியே அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.
.
இப்போது க்ருஷ்ண பரமாத்மா கைலாஸத்துக்குப் போய் ஈச்வரனிடம், “என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
.
Solution given by Lord Shiva
ஈச்வரன், “இது துலா மாஸம். (அதாவது நம் ஐப்பசி)*. இந்த மாஸம் பூராவும் புரதி தினமும் அருணோதயத்திலிருந்து உதயாதி ஆறு நாழிகை (2 மணி 24 நிமிஷம்) வரை அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் வாஸம் செய்கின்றன. அதிலே ஸ்நானம் பண்ணினால் வீர ஹத்தி தோஷம் போயே போய்விடும்” என்று சொன்னார்.
.
Thula Snaanam
காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.
.
அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்னதோடில்லாமல் தாமும் கூட வந்தார்.
.
Dosha Nivirthi
யமுனாதீர விஹாரி தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார்.
.
உடனே அவருக்கு வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக (பிரத்யக்ஷ நிரூபணமாக) ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.
.
ஆகையால் துலா மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸுர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கின்றன.
.
Detoxifying ourselves
புண்ய ஸ்மரணம்தான் பெரிய ஸ்நானம். உன் அழுக்கையெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப்பாட்டிப் பரிசுத்தி பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்பதுண்டு. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விடக்கூடாது. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!
.
Chapter: ஈசன் சொன்ன பிராயச்சித்தம்
Chapter: காவேரி துலா கட்டம்
Chapter: தீபாவளியில் காவேரி ஸ்நானம்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment