April 18, 2023

Rudhra - aspect of Shiva - பிரபஞ்சம் Cosmic Dance

Cosmic Dance - Nataraja


Rudhra who is the aspect of Shiva

வடக்கே ஹிமாசல கேதார்நாத், அமர்நாத்திலிருந்து தெற்கே ராம்நாத் (ராமேச்வரம்) வரை கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஈச்வரனும் இரண்டு இல்லை.
.
ஒரு ஸமயத்தில் உக்ரம், இன்னொரு சமயத்தில் சௌம்யம் என்று அவன் மாறி மாறி இருப்பானா என்றால் அப்படியும் இல்லை. வாஸ்தவத்தில் எதுவாகவும் இல்லாத அவன் எப்போதுமே உக்ர ருத்ரனாகவும் இருப்பான், எப்போதுமே சௌம்ய சிவனாகவும் இருப்பான். நம் அறிவையும், நம்முடைய லாஜிக்கையும் மீறிய பரமாத்மாவான அவனால் அப்படி இருக்க முடியும்.
.
அந்த மாதிரி எப்போதுமே சிவமாக அவன் இருப்பதை வைத்து அவனுக்கு ஏற்பட்டதுதான் சதாசிவ நாமா..
.
Creator and the Protector
மஹாவீரன் ரணபூமியில் உக்ரனாயிருக்கிறான், கிருஹத்தில் ஸெளம்யமாயிருக்கிறான் என்றேன். சுவாமிக்கோ ப்ரபஞ்சமே ரண பூமியாகவும் இருக்கிறது; கிருஹமாகவும் இருக்கிறது! ஒரு பக்கத்தில் ஸம்ஹார கர்த்தாவாக இருக்கிறான்.! இன்னொரு பக்கத்தில் பரிபாலன கர்த்தாவாக இருக்கிறான்!
.
ஒரே ஸமயத்தில் இந்த இரண்டு கார்யமும் நடக்கிறது. ஒரே ஸமயத்தில் ஒரு இடத்தில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உண்டாகி
ஸம்ஹாரமும், இன்னொரு இடத்தில் நல்ல மழை பெய்து பரிபாலனமும் நடக்கிறது! ஒரே ஸமயத்தில் ஏதோ இரண்டு தேசங்கள் மோதிக் கொண்டு யுத்தம் செய்கின்றன; வேறே இரண்டு தேசங்கள் ஸமாதானம் செய்து கொண்டு உறவு கொண்டாடுகின்றன! இந்த இரண்டு தினுஸான கார்யமும் ஒரே ஸமயத்தில் நடக்கிறது என்றால், அப்போது அந்த ஸர்வாந்தர்யாமி ஒரே ஸமயத்தில் ஸெளம்யம், உக்ரம் இரண்டுமாக இருக்கிறான் என்று தானே ஆகிறது?
.
அவன் அவனாக மட்டுமே நிஜ ஸ்வரூபத்தில் இருக்கிறபோது இந்த இரண்டாகவும் இல்லாமல், இரண்டையும் கடந்த ஸ்திதியில் இருக்கிறான். ஈச்வரனாயிருக்கும் போது நல்லது-கெட்டது இரண்டுக்கும் மூலமாக ஒரே போதில் இருக்கிறான்.
.
மூலத்திலிருந்து வந்த தனி ஜீவர்களான நாமாகிற போது ((நாமாக நமக்குள் இருக்கும் போது)) ஒவ்வொரு ஸமயத்தில் நல்லதாகவும், ஒவ்வொரு ஸமயத்தில் கெட்டதாகவும் இருக்கிறான்!
.
Sivan vs Sivam

சிவன்- அநுக்ரஹம் என்கிற கார்யம் செய்கிறவன். சிவம் – ஸகல கார்யமும் நின்று போய் அந்த அநுக்ரஹம் அநுபவ மாத்திரமாகப் பிரகாசிக்கிற பரப்ரம்ம நிலை!
.
அநுக்ரஹ மூர்த்தி சதாசிவன். அநுபவத்தில் அமூர்த்தியாயிருக்கும் ப்ரம்மம் சதாசிவம்.
.
அந்த அமூர்த்த ஸதாசிவம் தான் அநுக்ரஹத்துக்கே மூர்த்தியான ஸதாசிவனில் முடிகிற பஞ்ச க்ருத்ய மூர்த்திகளாகவும் மாயையில் கூத்தடிப்பது!
.
Shivam the eternal

‘ஸத்’தோடு ஸம்பந்தப்பட்டதாக ‘ஸதா’ என்பதைச் சொல்லலாம். எப்போதும் மாறாமல், சாகாமல் இருக்கிறதே ஸத். ‘ஸத்யம்’. ; ஸத் – Eternity; ஸதா - Eternal.
.
சாந்தமாக என்றும் உள்ள ஸத்ய வஸ்து ஸதாசிவம். அந்த சாந்தம் மாயையில் சலனமுற்றுத்தான் ஸ்ருஷ்டி – ஸ்திதி – லய (ஸம்ஹார) – திரோதான – அநுக்ரஹங்கள் நடப்பது. வெளியிலே இப்படி சலிக்கிற அப்போதும், எப்போதும் – ஸதா – உள்ளே சாந்தம் சாந்தமாகவே இருக்கிறது. ஸ்ருஷ்டிக்கு முந்தி, லயத்துக்குப் பிந்தி ஸதாவும் சாந்த சிவம் இருந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது.
.
அதுதான் மாயா ஸ்ருஷ்டியின் Base. மாறிக்கொண்டேயிருந்து அப்புறம் அழிந்தே போகிற சிருஷ்டியின் மாறாத Base;
அழிவேயில்லாத base.
.
Moolam (the Origin)
.
மரத்துக்கு base ஆன மண் மாதிரி அது. மண்ணில் விதை முளைக்கிறது. மரமாகிறது; அப்புறம் கடைசியில் அந்த மரம் மட்கிப் போகிறது. இதில் எத்தனையோ மாறுதல்கள்; முடிவாக அழிவு. விதையைத் தாங்கி உயிர் கொடுத்த மண்ணோ மாறாமலே இருக்கிறது. மாறாத அதன் மேலேயே விதை செடியானது; மரமானது; மரம் முற்றி, அப்புறம் மட்கியும் போனது! மட்கின மரமும் அந்த மண்ணோடேயேதான் மண்ணாக ஆகி விடுகிறது! அப்படி, மாயை நடக்கும் பிரபஞ்சத்துக்கும், அந்த மாயையையே நடத்தும் மஹேச்வரனுக்கும் ஸதாசிவமே base. அது மட்டுமில்லை; மாயையிலிருந்து விடுவிப்பதான அநுக்ரஹத்தைச் செய்யும் மூர்த்தியாக ஸதாசிவன் என்று இருக்கிறானே, அவனுக்கும் சதாசிவம் base. ஸதாசிவம் அமூர்த்தி, தத்வமயம்.
.
மாயா ப்ரபஞ்சம் எத்தனையோ கோடி கோடி வருஷம் நடந்து விட்டு – இத்தனை கோடி என்று கணக்கே இருக்கிறது – அப்புறம் ப்ரம்மத்தோடு
ஐக்கியமாகிவிடும்.
.
மாய ப்ரபஞ்சம் உள்ளவரை அதை ஸதாவும் நடத்துபவன், அதிலிருந்து கடத்துபவன் சதாசிவன். கடந்தபின், மாயமும் ப்ரபஞ்சமும் அடிபட்டுப் போனபின் ஏக ஆத்மாவாக நிற்கிற சாந்த அத்வைதமே சதாசிவம்.
.
Chapter: எப்போதும் உக்ரனே எப்போதும் ஸெளம்யனும்
Chapter: சிவனும் சிவமும்
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment