April 21, 2023

Virtue of doing Namaskaram




அப்படிக் கீழே விழாமலிருப்பதற்கு நமஸ்காரம் என்பதாக வினயத்தோடு கீழே விழுவதே சஹாயம் பண்ணும்!

.
உசந்த ஸ்தானத்தில் இருக்கிறவன் தப்புப் பண்ணி இடறி விழுகிறபோதுதான் அப்புறம் எழுந்திருக்கவே முடியாமல் – அதாவது, அந்த
உசத்தியை மறுபடி அடையவே முடியாதபடி – ஊர் உலகமெல்லாம் சிரித்து அவனை மட்டந்தட்டி வைத்து விடுகிறது. மனிதன் அகபுற உயர்வு வீழ்ச்சிகள் தலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது
.
உலகம் சிரிப்பது, இருக்கட்டும். ஆத்மார்த்தமாக ஒருத்தனுக்கு எது நல்லது? எப்படி இருந்தால் அவனுக்கு உள்ளூர ஒரு நிறைவு, நிம்மதி ஏற்படுகிறது? பாரம் தூக்கினால் நிம்மதியா, அதை இறக்கிப் போட்டால் நிம்மதியா? பாரம் என்றால் இந்த சம்ஸார ஸாகரத்தில் ஏற்படுகிற கஷ்டங்களின் பாரம் மட்டுமில்லை. பெரிய பாரம் அஹம்பாவந்தான். தற்பெருமைதான். அதை இறக்கினாலே நிரந்தர நிம்மதி. அப்படி இறக்குவதற்கு சஹாயம் செய்யும் க்ரியைதான், ஒரு மநுஷ்ய சரீரத்தை இறக்கி பூமியோடு பூமியாகப் போட்டு நமஸ்கரிப்பது!
.
பிறத்தியார் இறக்கினால் அவமானம்; நாமே இப்படித் தலையை இறக்கினாலோ வெகுமானம்! தலைக் கனம், மூளைப் பெருமை போகவே தலையால் நமஸ்கரிப்பது! “தலையே நீ வணங்காய்!” என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியதும்.
.
உசத்தி ஒன்றும் வேண்டாம்; தாழவே இருக்க வேண்டும். உயர்மட்டத்தில் ஜலம் நிற்காமல் தாழ்மட்டத்திலேயே சேருகிற மாதிரி
நாம் மனோபாவத்தில் தாழ இருந்தால்தான் அருள்மழை – நம்மிடம் பாய்ந்து வந்து தேங்கி நிற்கும். அதற்கு அடையாளமாகத்தான் தலையோடு கால் சரீரத்தை நில மட்டத்தோடு தாழ்த்திக் கிடப்பது.
.
Virtue of being humble
நம்முடைய புராதனமான ‘ட்ரெடிஷ’னில் விநய குணத்திற்கு ரொம்பவும் சிறப்புக் கொடுத்திருக்கிறது. பதவி, பணம், அறிவு, அழகு என்று ஒவ்வொன்றை வைத்தும் அஹங்காரம், தலைக்கனம் ஏற இடமுண்டானாலும் அந்தத் தலைக்கனமும் ரொம்பத் தலைதூக்கி நிற்பது ‘அறிவிலே நாம் பெரியவர்’ என்று ஒருவர் நினைக்கிற போதுதான்! அப்படியிருப்பவர்கள் எதையும் துச்சமாக, தூக்கி எறிந்து, பரிஹஸித்து எல்லாம் பேசுவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட அறிவு விருத்தியை விநயத்தோடு சேர்த்து இறுக்கி முடிச்சுப் போட்டுக் கொடுத்து விட்டால் எல்லாவிதமான தலைக்கனங்களையும் அடக்கி இறக்கி விட்டதாக ஆகிவிடும். இதைத்தான் நம் சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கின்றன.
.
விநயம் இருக்கிற இடத்தில்தான் ஈச்வர கிருபை சேருமாதலால் எல்லாரும் அதற்கு ஆசைப்பட்டு, அதற்கு உபாயமாக உள்ள நமஸ்காரத்தை நிறையப் பண்ண வேண்டும். பெரியவர்களைத் தேடித் தேடிப் போய் நமஸ்காரம் பண்ணணுமென்று அந்த நாளில் சொல்லிக் கொடுப்பார்கள்.
.
People who are physically unfit to do Namaskaram

நான் விஸ்தாரமாய் சொல்வதைக் கேட்டுவிட்டு சரீர உபாதி காரணமாக அப்படிப் பண்ண முடியாதவர்களும் தங்களை வருத்திக் கொண்டு அப்படிப் பண்ண வேண்டும் என்றில்லை. அவர்கள் மானஸீகமாக அப்படிப் பண்ணினாலே போதும். ஸ்தூலமாகப் பண்ண முடியாத அவர்களுக்குத்தான், ‘பண்ண முடியலியே’ என்ற feeling நமஸ்காரம் பண்ணுகிறவர்களின் பக்தியையும் விட ஜாஸ்தியாக ஏற்படும்.
-
Namaskaram as a way for Mukti

‘நிலத்திலே கழி மாதிரி தண்டனிட்டுக் கிடக்கிறவன் அடைகிற ச்ரேயஸை நூறு யாகம் பண்ணினவனும் அடைய முடியாது’; ‘ஒரு நமஸ்காரம் பத்து அச்வமேதத்திற்கு ஸமம் என்பதுகூட ஸரியில்லை. ஏனென்றால் அந்தப் பத்து அச்வமேதக்காரனுக்குப் புனர்ஜன்மா உண்டு. நமஸ்காரமோ ஜன்ம விமோசனத்தையே தருகிறது’ என்றெல்லாம் தர்ம சாஸ்த்ரங்களில் நமஸ்கார பலனைச் சொல்லியிருக்கிறது.
.
Chapter: தலைக் கணம் குறையத் தலையால் வணங்குவது
Chapter: அருள்மழை சேரும் ‘தாழ்நிலை’
Chapter: விநயத்தின் சிறப்பு
Chapter: ஜன்ம விமோசனமே அளிப்பது
Chapter: விதி விலக்கு
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment