April 20, 2023

மனிதனின் வீழ்ச்சியும் உயர்வும்

 Growth of Species called human

’மற்ற ப்ராணி வர்க்கங்கள் அத்தனையும் குறுக்கே வளர்கிற ஜந்துக்கள்; மநுஷ்யன் ஒருத்தன் தான் காலுக்கு மேலேயும் உடம்பு, சிரசு என்று உயரவாட்டில் ‘ஊர்த்வமுக’மாக வளர்கிறவன்;
.
சிருஷ்டி வர்க்கங்களிலேயே இவன் தான் உசந்தவன் என்பதால் இப்படி இவனைப் படைத்திருப்பது’ என்று பெருமை சொல்கிறதுண்டு. ஆனால் இந்த உசத்தி அஹம்பாவத்திலேயும் தற்பெருமையிலேயும் கொண்டு விட்டால் இவன் மிருக ஜாதிக்கும் கீழே போக வேண்டியதுதான்!
.
Think high, walk high
நம்முடைய சிந்தனை, வாழ்க்கை முறை எல்லாம் மற்ற பிராணிகளுடையதைப் போல இந்த்ரிய ஸெளக்யங்களோடு முடிந்து போகாமல் உசந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பகவான் நம்மை இப்படிப் படைத்திருப்பதாகப் புரிந்து கொண்டு அதற்கான ப்ரயாஸைகளைப் பண்ணி இன்னும் உசந்த ஸ்திதிக்குப் போகணுமே தவிர, தற்பெருமைப் பட்டுக் கொண்டு கீழே விழுந்துவிடக் கூடாது.
.
To learn to be humble
தற்பெருமையை என்னவென்று சொல்கிறோம்? ‘தலைக் கனம்’ என்கிறோம். குறுக்கு வாட்டில் வளருகிற பிராணியாயிருந்து அப்படி மண்டைக்கனம் ஏறினால் பரவாயில்லை; ‘பாலன்ஸ்’ கெட்டுப் போகாமல் சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால் உயரவாட்டில் இப்போது நாம் இருக்கிற தினுஸில் மண்டைக் கனம் ஏறினால்? ‘ஈக்விலிப்ரியம்’ என்கிற சமசீர் நிலையே கெட்டுப் போய், குலைந்து போய், தடாலென்று விழ வேண்டியதுதான்!
.
பகவான் நாம் உயரவாட்டில் வளரும்படி வைத்து சிரஸை உச்சியில் வைத்திருக்கிறார் என்றால் ஒரு போதும் தலைக் கனம் ஏறாமல், பணிவாயிருந்து நம்மை விழுவதிலிருந்து – வீழ்ச்சியிலிருந்து – காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
..
(அதற்கு என்ன செய்ய வேண்டும்?)
.
Chapter: மனிதனின் அக-புற உயர்வு-வீழ்ச்சிகள்
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment