January 20, 2021

விரயம்




நீ பகிர்ந்த முகவரியை
உதறித் தள்ளினாலும்
உனது முக வரிகள்
அனுமதியின்றி
அத்துமீறி நுழைந்து
எனது அகமெங்கும்
தமை எழுதிக் கொண்டன
.

தொலைத்த
முகவரி வேண்டியே
எங்கும் அலைகிறேன்
நீ சுமந்த
முக வரிகளின்
தடயங்கள் தேடுகிறேன்
என் முக வரி
மண்ணில் புதைவதற்குள்...
குரல் கொடு!
-


No comments:

Post a Comment