January 19, 2021

ஐஸ்க்ரீம்



தேனாக உருகி
தொண்டைக்குள்  இறங்கி
தகிக்கும் வெயிலை
தணிக்கும் பாவையே
.
பதமாகப் பாலோடு
சர்க்கரையுந்தான் சேர்த்து
பனியாக்கிக் குழைத்து
கனிகளுடன் சுவைத்திடவே
.
பனித்தேகம் தனைத்தொட்டு
பக்குவமாய் உண்டபின்னே - உன்
வெளிர் முகமே எனது இரு
விழி தன்னில் ஆடுதடி..
.
பகலென்ன இரவென்ன
பாவை நீ இருந்திட்டால்
இடமென்ன பொருளென்ன
தாவி உனை முத்தமிட
.
உயிரோடு உயிராகி
உணர்விலே பூ பூத்து
பல நூறு ஆண்டுகளே
புவி தன்னில் போயிடினும்
.
பிற ஒன்றை நினையாமல்
பத்தினியாய் காத்திருப்பேன் - நின்
பட்டுமேனி தொட்டிடவே
தவமானத் தவமிருப்பேன்

No comments:

Post a Comment