March 30, 2023

தூரல்கள்

 

அகோரப் பசியின் தீநாக்குகள்
தீனி வேண்டி நாலாபுறமும்
கோரத் தாண்டவமாடியது.
மேகமென பொழியா மழையை மன்னித்து.
தேகம் தீண்டிய சிறுதூரலை தனதாக்கியது
சாரல்களின் சுகமான தீண்டலால்
சற்றே சினம் தணிந்து, அணைந்தது;
சிறுவிரலால் அணைத்தது.
....
இறக்கும் தறுவாயில்
ஊட்டப்படும் இரண்டு சொட்டு நீர்.
இனி பசி எடுக்காது.
எடுத்தாலும் தகிக்காது.
புழுங்காது
சுட்டெரித்து சாடாது.
குளிரும், குளிர்ந்து கூத்தாடும்...
உயிர் தங்கும்...

இன்னும் சிலகாலம் வரை.

No comments:

Post a Comment