March 28, 2023

நமஸ்கரிப்பவனே பாக்கியசாலி (தெய்வத்தின் குரல்)

இத்தனை வருஷமாக நித்யமும் நீங்கள் கூட்டங்கூட்டமாக வந்து எனக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டு வந்திருப்பதில் நானும் உங்களுக்காக அவனை(இறைவனை) மனஸால் நமஸ்கரித்து, உங்கள் நல்லதற்காக ப்ரார்த்தித்துக் கொள்ளத்தான் முடிந்த மட்டும் முயற்சி பண்ணி வந்திருக்கிறேன்.

.
நாங்கள்(துறவிகள்) உங்கள் நமஸ்காரத்தை மனசாலே தூக்கி, உங்களுக்காக நாங்கள் செய்கிற ப்ரார்த்தனையின் ‘வெயிட்’’டையும் அதோடு சேர்த்து நாராயணனிடம் கொண்டு இறக்க வேண்டும்.
.
Offering everything unto Lord NarayaNa
“இது நமக்குக் கொஞ்சங்கூட உரிமைப் பண்டமில்லை. நம் மூலமும் எதாவது நல்லது நடந்தால் அப்படி நடத்துவிக்கும் அந்த நாராயணனுக்கே உரிய ஸாமான் இது.
அதை நாம் ஒரு கூலியாகத்தான் தாங்குகிறோம்”
என்பது புரிந்து கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். பக்தர்களிடம் ப்ரியத்தினால் அந்த பாரத்தை ஸந்தோஷமாகவே தாங்கி – தாற்காலிகமாகத் தாங்கி – பகவானிடம் இறக்க வேண்டும்.
...
அப்படி இறக்காமல் எங்களுக்கே அந்த நமஸ்காரம் என்று நினைத்துக் கொண்டால் அது நிரந்தரமான பாப பாரமே ஆகி விடும்.
-
Devotees carry no baggage
மறுபக்கம், நமஸ்காரம் பண்ணுகிறானே, அவனைப் பார்த்தால் அவன் தான் பாக்யசாலி என்று தெரிகிறது. என்ன பாக்யம் என்றால் பாரத்தைத் தள்ளி விட்டு அக்கடா என்று கிடக்கிற பாக்யம்! பெரியவர் என்று அவன் நினைக்கிற ஒருவருக்கு முன்னாடி தன்னுடைய உடம்பைத் தள்ளி நமஸ்கரிக்கிற போதே அவன், ‘இவர் நம்முடைய ஸமாசாரத்தைப் பார்த்துக் கொள்வார்’ என்று பாரத்தையும் தள்ளி விடுகிறான்.
Acharya talks about he becoming Peetaathipathi at a young age
இந்த மாதிரி பாரத்தைத் தள்ளி லேசாகி, எளிசாகி ஒருத்தருக்கு முன்னே நமஸ்கரித்துக் கிடக்கிற பாக்யம் எனக்கு பால்யத்திலேயே போய் விட்டது! பறிபோய் விட்டது! ‘ஸ்தானம்’ வந்து பாக்யத்தைப் பறித்துக் கொண்டு போய் விட்டது!
.
Chapter: நம் பிரார்த்தனையும் அடியார் நம்பிக்கையும்
Chapter: உயர் ஸ்தானம்; ஆயின் கூலி வேலை!
Chapter: நமஸ்கரிப்பவனே பாக்யசாலி
-
(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

No comments:

Post a Comment