July 21, 2020

Number 13





எத்துடன் எதனை பெருக்கினும்
கைக்கெட்டாக் கனியவள்
அத்துடன் அதனை வகுத்தும்
வாரா பத்தினியவள்
பத்துடன் மூன்றை பக்குவமாய்க் கோர்த்தால்
பாவையவள் பட்டென்றே
பக்கத்தில் வந்திடுவாள்
பக்தரைக் கண்டால் ஒதுங்குபவள்
பத்தடி தள்ளியே பத்தியம் காப்பவள்
பாடல்களை இசைக்காதவள்
கணக்குக்குப் பிழையானவள்
சகுனத்தின் சகுனியவள்!
இத்தனை ஏளனத்திலும்
காரியத்தின் கண்ணாகி
முன்னோர்க்கு முக்தியளிக்கும்
சக்தியவள் பதிமூன்றே!

ShakthiPrabha

No comments:

Post a Comment