July 21, 2020

கங்கை




புலன்களால் புழுதியேறி
படர்ந்திருந்த அடர் கறையை
படித்துறையிலே துலக்கி,
சினம் தொலைத்து; மோகம் களைந்து,
பக்தியெனும் கடலில் மூழ்கி,
முக்தியெனும் நல்முத்தெடுக்க,
தமது முறைக்காக
வரிசையில் காத்திருக்கும்
கட்டிடங்கள்.
– சக்திப்ரபா
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)

1 comment: