Showing posts with label Comedy. Show all posts
Showing posts with label Comedy. Show all posts

March 19, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம்- பகுதி 8) ( நிறைவுப் பகுதி)




காட்சி 10

(இடம்: சுசீலா வீடு.)

நவீன்: இவ்ளோ சீக்கிரம் சம்மதிப்பீங்கன்னு நினைக்கலை ஆண்ட்டி.

சபேசன்: உங்களை மாதிரி ஒரு நல்ல பையன வேணாம்னு சொல்ல எங்களுக்கு பைத்தியமா?  மங்களம் கொஞ்சம் அப்படி இப்படி தான்... ஆனாலும் இன்னும் முழுப் பைத்தியம் ஆகல.


மங்களம்(முறைப்புடன்): அந்தக் குறையைப் போக்கத்தான் நீங்க இருக்கீங்களே.

சுசீலா: நிஜம்மாம்மா. நீ தான் குப்புக்கு ஒகே சொல்லலைன்னு எங்க கல்யாணத்துக்கு வில்லியா இருப்பியோன்னு நினைச்சேன்.

மங்களம்: சீச்சி! அதெல்லாம் சினிமால தான். எதோவொரு குப்புவோ சொப்புவோ கல்யாணம் பண்ணின்டு சந்தோஷமா இருந்தீன்னா சரி. வேற என்ன வேணும்?

நவீன்: சொப்பு இல்லை ஆண்டி. நவீன். நவீனைக் கல்யாணம் செஞ்சிட்டு உங்க பொண்ணு குவீன் மாதிரி இருப்பா

சுசீலா: கடவுளே இப்படி அறுவையை காலம் பூரா கேக்கணமா?

மங்களம்: வருத்தபடாத சுசீ...இப்போ நான் இல்ல?

வினோத்: ஆனா ஒண்ணு சுசீ... நீ பரோடா போன பிறகு,........ (கண்துடைத்துக் கொள்கிறான்)... அதை எப்படி சுசீ சொல்றது?

சுசீலா(ஞானிபோல் முகம் வைத்து): லை·ப் கோஸ் ஆன்....

வினோத்: அத யாரு சொன்னாங்க? தட் வில் கோ ஆன்... நான் சொன்னது உன்ன சாக்கா வெச்சு, லேடீஸ் காலேஜ் வாசல்ல ட்ராப் பண்ண வருவேன்.  ஹ்ம்ம்.... இப்ப எங்க போவேன்?


சுசீலா: அதானே பார்த்தேன்

சபேசன்: உங்க வீட்ல என்ன சொல்றாங்க ? உங்க விருப்பத்தை சொன்னீங்களா?

நவீன்: அப்பா உங்க கிட்ட பேசுவார் அங்கிள். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். சரி நான் கிளம்பறேன். இப்போவே லேட். (சுசீலாவிடம் திரும்பி) அப்புறம் கால் பண்றேன் சரியா. ஒழுங்கா படி.


வினோத்(இடிஇடியென சிரிக்கிறான்): நவீன் இவ்ளோ அப்பாவியா இருக்கியே. சுசீலா என்னிக்கு படிச்சிருக்கா?

சுசீலா(பல்லை கடித்துக்கொண்டு): இரு இரு உன் ட்யூஷன் பசங்க கிட்ட உன்னை பத்தி வத்திவெச்சிட்டுப் போறேன்.

வினோத்: அப்புறம் நவீன்... நல்லா சாப்பிட்டு; உடம்பப் பார்த்துக்க.

நவீன்: அதுக்கென்ன நல்லாத்தானே இருக்கேன்.

வினோத்: அதுக்கப்புறம் உனக்கு சுசீலா சமைச்சு சாப்பிடணம்ன்னு விதி. எல்லாம் அவங்க அவங்க வாங்கின வரம்.

(நவீன் சிரித்துக் கொண்டே கிளம்புகிறான்)

மங்களம்: என்னை இந்த நாட்டு பிரதம மந்திரி ஆக்கினாங்கன்னா எல்லா ப்ரச்சனையும் தீர்த்து வெச்சுடுவேன்.

சபேசன்: ஏம்மா உனக்கு இந்த விபரீத ஆசை. ஏதோ நம்ம நாடு சுமாரா இருக்கறது குத்துதா?

மங்களம்: அதுக்கில்லீங்க. வீட்டுக்குள்ளையே இந்தியா பாக்கிஸ்தனை வளர்க்கறேனே... அதை சமாளிக்கறேனே.. அதுக்கு சொன்னேன்.

சபேசன்: என்னது வீட்டுக்குள்ள இந்தியா பாக்கிஸ்தானா? உன் பேரு என்ன ஏசியாவா?
மங்களம்: நம்ம பசங்களைச் சொன்னேங்க.

சபேசன்: அப்போ அவங்க பேரு ஏசியாவா?

மங்களம்: நக்கலுக்கு ஒண்ணும் கொறைவே இல்லை. உங்கள மாதிரியே தான் பசங்களும்.

வினோத்: ஸ்டாப்.. ஸ்டாப்.. இவ்ளோ நல்ல விஷயங்கள் நடந்திட்டு வரச்சே, யாராவது இதுக்கு காரண கர்த்தாவுக்கு நன்றி சொன்னமா?

சபேசன்: யாருடா அது?

வினோத்: ரத்னா கலகம் நன்மையில் முடியும். அவளால தானே இந்த நவீன்... எல்லாமே..

சுசீலா: டேய். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுறியே. உனக்கு அவ பேரை இழுக்கணம் அதுக்கு இது ஒரு சாக்கு.

வினோத்: சீச்சி. ஐ மீன் இட். பத்திரிகை ரெடியானவுடன், முதல் பத்திரிகை அவளுக்குத் தான். அதுவும் நானே கொண்டு கொடுக்கப் போறேன்.

சுசீலா:  உன் அட்டகாசத்துக்கு அளவே இல்ல!

வினோத்: ஹ்ம்ம்.... முயன்று பார்க்கலாம்.... கிடைச்சா சரி.. இல்லைன்னா, குப்புவுக்கு பண்ண த்ரோகத்துக்கு நானே குப்பு தங்கச்சிய கட்டிக்கறேன்.

மங்களம்(வாயெல்லாம் பல்லாக): ஓ ராசாத்தியா?

வினோத்: உங்க அண்ணன் குடும்பத்துல யாருக்குமே இருவத்தியோராம் நூற்றாண்டு பேரே இல்ல

சுசீலா(சிரித்துக் கொண்டே):  A Rose is a Rose is a Rose 

வினோத்: ம்ஹ்ம்.. அந்தப் பாட்டு இந்த சிச்சுவேஷனுக்கு சரியில்லை. ராசாத்தி ஒன்ன... காணாத நெஞ்சு... . இது தான் சரி.

சுசீலா: அண்ணா.. நீ ரத்னாவை ட்ரை பண்ணு. சைட்ல தாமரைக்கு நோட்ஸ் எழுதி கொடு, ராசாத்திய பத்தி யோசி... ரத்னாவோ, ராசாத்தியோ, ரமாவோ, ரோஹிணியோ......



சபேசன்: இது வேறயா?

மங்களம்: இதெல்லாம் யாரு புதுசா?

சுசீலா: யாரை வேணாலும் இம்ப்ரேஸ் பண்ணு. ஆனா அவங்க உன்ன விட்டு தப்பிச்சு ஓடிடாம இருக்க ஒரே வழிதான் ..

வினோத்: என்ன செய்யணம்?

சுசீலா(கண்ணைக் கையால் மூடியபடி): நீ பாடறத நிறுத்தணம்

(கடைசி சீனில் வழக்கம் போல் எல்லோரும் சிரிக்கிறார்கள்.)

(முற்றுபேற்றது)

(சுபம்)


March 18, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 7)




காட்சி 9

இடம்: கதிர் வீடு

நேரம்: மாலை 5 மணி 58 நிமிடங்கள்

(சுசீலா வருகிறாள்.)

கதிர்: ஹாய்! ஷார்ப்பா வந்திட்டயே. வா வா

சுசீலா: ஹாய் கதிர். வர சொல்லிருந்தன்னு விஜி சொல்லித் தெரியும்? என் நம்பர் என்னாச்சு? எனக்கேன் கால் பண்ணல?

கதிர்: வெயிட் வெயிர்....இவ்ளோ கேள்விகள் கேட்டா...கன்ஃப்யூஸ் ஆகிடுவேன்....
முக்கியமான விஷயமாத்தான் வர சொன்னேன். என் ரூம்ல உனக்காக யாரோ வெய்ட் பண்றாங்க. நீ போய் பேசிட்டு இரு. நான் அப்புறம் வரேன்.

(சுசீலா உள்ளே நுழைகிறாள். அங்கே நவீன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறான் )

[ சுசீலாவின் வயிற்றில் பட்டாம்பூச்சி தவிர வேறு பூச்சிகளும் கலவையாய் பறந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டது ]

சுசீலா: ஹல்லோ நவீன்! என்ன இந்த பக்கம்?

நவீன்: சும்மா கதிர பார்த்துட்டு போலாம்ன்னு தான், அப்டீன்னு சொன்னா நீ நம்ப போறதில்ல....உன்னை நான்தான் கூப்பிட்டேன்னு உனக்கே தெரியும். சோ, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.

[ சுசீலாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல், மேலே பார்த்து, பக்கவாட்டில் பார்த்து, இறுதியாக சுவற்றில் பார்வையைப் பதிக்கிறாள் ]

நவீன் : உனக்கே தெரியும்.. என்னோடது ·பைனல் இயர் எம்.டெக்.
காம்பஸ் இன்டர்வ்யூலையே செலெட் ஆகிருக்கேன். அதனால எனக்கு 'xyz' கம்பனில வேலை கிடைச்சிருச்சு.

சுசீலா: வாவ்.....கங்க்ராஜுலேஷன்ஸ்....இது எதிர்பார்த்தது தானே.... வாட் நேக்ஸ்ட்?
நவீன்: இன்னும் ரெண்டு மூணு மாதத்தில எனக்கு ட்ரெய்னிங்க். பரோடா போக வேண்டி வரும்.

( நவீன் தொண்டையை செறுமிக் கொள்கிறான், அது எசகுபிசகாகி தொண்டை கட்டிக்கொண்டது போல் கீச்சென்று ஒலிக்கிறது )

சுசீலா: கிரேட்.......ஓ அதான் பிஸியா? சில நாளாக ஃபோன் மேஸ்ஸேஜ் எதும் காணமே

நவீன்(கனைத்தபடி): அதெல்லாம் ஒண்ணும் இல்லை.... ட்ரைய்னிங் முடிஞ்சு பெர்மனென்ட் ஆக்கிடாங்கன்னா லைஃப்ல செட்டில் ஆகிடுவேன்

சுசீலா: ஆஹா!....அப்ப இனிமே என்னையெல்லாம் மறந்து பொய்டுவ...இதான் நீ சொன்ன சர்ப்ரைஸா?

நவீன்: ஹ்ம்ம்.....ஆமாம்..... அப்புறம் நீ என்ன பண்ணப் போற

சுசீலா:  இனிமேத்தான் யோசிக்கணும். ஒண்ணும் பெரிய ப்ளான் இல்ல, கண்டிப்பா மேல படிக்கறதா இல்ல.  மே பீ சின்னதா "all purpose boutique" வெக்கலாமானு ஐடியா.

( நவீன் கிட்டதட்ட சாயம் போன கலருக்கு வெளிறி வார்த்தையைத் துப்புகிறான். )

நவீன்: நீ என்னோட வர ரெடின்னா நானே போடீக் வெக்க ஹெல்ப் பண்ணுவேன்

சுசீலா: எங்க வரணம்? மாம்பலமா? அண்ணா நகரா? அங்க தான் இதுக்கு மெட்டீரியல்ஸ் சீப் ரேட்-ல பிக் பண்ணலாம். முதல்ல எக்ஸாம் முடியட்டும்.

நவீன்: நான் அத சொல்லல

சுசீலா: பின்ன?

நவீன்: ooph You are not helping me....not helping me at all.

[ சுசீலா பொங்கி வரும் புன்னகையை மறைக்க உதட்டை இறுக்க குவிக்கிறாள்.
முகம் அஷ்ட கொணலாகி விட்டதோ என்ற பயத்தில் வேறு புறம் திரும்புகிறாள். ]

[ நவீன் அசடு வழிந்தபடி சடாரென ஒற்றைக் காலில் முட்டி போடுகிறான் ]

[ திடீரென அவன் கீழே விழுந்து விட்டான் என்று நினைத்து முதலில் சுசீலா பதறுகிறாள். பிறகு அவள் முகம் அன்றைக்கு அரைத்த தக்காளிச் சட்டினி போல் சிவக்கிறது. ]

[ நவீன் பூங்கொத்து ஒன்றை நீட்டுகிறான். ]





சுசீலா: என்னது

நவீன்: பூ!

சுசீலா: அது தெரியுது. எனக்கு பிறந்த நாள் கூட இல்லையே ...அப்றம் எதுக்குன்னு கேட்டேன்.

நவீன்: தெளிவா இருக்கனும் சுசீ. இது என்னதுன்னா, அதான் பூன்னு சொன்னேன்.

சுசீலா: This is not getting anywhere.... எனக்கு வீட்டுக்கு போகணம். இப்ப எதுக்கு பூ, டக்குனு சொல்லிடு பார்போம்.

நவீன்: இந்த... இந்தப் பூ பிடிச்சிருக்கா?

சுசீலா: ஏன்? நீ தான் ரோஜாசெடியவே நட்டியா?

நவீன்(கோவமாக): நீ என்னை ரொம்ப டீஸ் பண்ற.

சுசீலா: எனக்கு எப்பவுமே ரோஜா ரொம்ப புடிக்கும்.....பூவெல்லாம் ஒக்கே தான். ஆனா ரொம்ப உதிர்ந்து போயிருச்சு

நவீன்: பயத்துல இருக்கமா பிடிச்சேனா... அதான் உதிர்ந்திருச்சு.

சுசீலா: பயமா? எதுக்கு?..... இன்னும் நீ எதுக்கு பூன்னு சொல்லல...

( நவீனுக்கு campus interview இதை விட எளிமையாக இருந்ததாக தோன்றுகிறது)

நவீன்: அந்த குப்புவுக்கு சரின்னு சொல்லிட்டியா?

சுசீலா: குப்புவா?? யாரது

நவீன்: உன்னோட ஃபியான்ஸ்னு சொன்னியே

சுசீலா: அப்படியெல்லாம் எனக்கு யாரும் இல்ல...நான் சும்மா வம்புக்கு சொன்னேன்.

( நவீன் மனதில் அக்கால காதல் மன்னர்கள் வரை இக்கால புதிய ரோமியோக்கள் வரை எல்லோரும் ஆசீர்வதித்து தெம்பு வழங்கினார்கள் )

சுசீலா (அழ மாட்டாத குறையாய்) : இப்பவானும் சொல்லிடு.... பூ எதுக்கு?

( காலையிலிருந்து பத்து படங்களில் வரும் காதல் காட்சிகளையும் வரிகளையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தான். இருந்தாலும் எல்லாம் மறந்து விட்டிருந்தது )

நவீன்: எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு....உனக்கு என்னை பிடிக்குமா?

(சுசீலா கண்ணை மூடிக்கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டுகிறாள்)

நவீன்: I have fallen in love with you. Will you marry me?

சுசீலா(வீரக் குரலில்): தமிழ்ல கேட்டாத்தான் என்ன!

நவீன்: அம்மாடி தல விரிச்சு போட்டு ஜீன்ஸ் போட்டிருக்குற மரத்தமிழச்சியே.....பதில சொல்லு.

சுசீலா (மறுபடியும் கண்ணை மூடிக்கொள்கிறாள்) : எனக்கும் சம்மதம். ஆனாலும் ரொம்ப ட்ராமாட்டிகா ப்ரொபோஸ் பண்ற.

( இருவர் மனதிலும் காதல் தேவதைகள் என்று சொல்லிக்கொண்டு சில பேர், தப்பு தப்பாய் ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடினார்கள் )

நவீன்: குப்புனு ஒரு வில்லன் இருக்குறதா நினைச்சிடு இருந்தேனா. நீ என்ன ரிஜெக்ட் பண்ணிடுவியோனு பதட்டம்.

சுசீலா: வில்லன் நமக்கு நாமே தான். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லாமயே விட்டுட்டா,  அப்புறம் அது சொல்லாமையே நம்ம விட்டு போயிடும்

நவீன்(கோவத்துடன்): நீ தானே குப்புன்னு உளறிட்டு போன...எதுல விளையாட்டுன்னு அறிவே இல்லையா?

சுசீலா: ரெண்டு மாசம் முன்ன உன்ன பார்த்தனே அப்பவே அறிவு டாட்டா சொல்லிடிச்சு.
நவீன்: அப்ப குப்புன்னு யாருமே இல்லயா?

சுசீலா: இருக்கானே...என் அத்த பையன்...இந்த பிரச்சனையெல்லாம் வரக்கூடாதுன்னு சில வருஷம் முன்னமே அவனுக்கு ராக்கி கட்டிட்டேன்.

சுசீலா: அடேங்கப்பா! கடைஞ்சு எடுத்த கெட்டிக்காரியா இருக்கியே .

[ சுசீலா வெட்கப்படுகிறாள் ]

நவீன்: நீ..ஏன் அடிக்கடி கண்ணை மூடிக்குற? நான் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கேன்?

சுசீலா: உன் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி, அவங்களொட வீட்டுக்கு வந்து என் அம்மா அப்பா கிட்ட பேசணும். ஓகேவா?

நவீன்: அதெல்லாம் ஓகே தான். ஆனா உன்னை பொண்ணு பார்த்தும் திடுமின்னு, "எனக்கு கல்யாணம் வேண்டாம்" னு சொல்ல கஷ்டமா இருக்கு..

[ சுசீலா கேள்வியுடன் பார்க்கிறாள் ]

நவீன்: அதாவது....."உன் படிப்பு முடியற வரை.."

சுசீலா: சே! கேவலமான இடத்துல ஒரு pause...ஆனாலும் ரொம்ப டிவி சீரியல் பார்த்து கெட்டுப் போயிருக்க நீ.

நவீன்: எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா....அவ கிட்ட நீ ரொம்ப அழகா இருப்பனு பொய் வேற சொல்லிருக்கேன். அது வேற கவலையா இருக்கு.

[ சுசீலா முறைக்கிறாள் ]

நவீன்: சரீஈ..... இவ்ளோ ஸ்வீட் ப்ரபோசல்க்கு ஸ்பெஷலா ஒண்ணும் கிடையாதா?

சுசீலா: ஸ்பெஷல் தானே.....ராத்திரி மேக்கப் எல்லாம் கலைச்சிட்டு ஒரிஜினல் ஃபோட்டோ அனுப்பறேன்

(நவீன் அலறுகிறான்......

சுசீலா அவன் மூக்கை வலிக்கும்படி திருகிவிட்டு வீட்டுக்கு செல்கிறாள்)

( உடனே கதிர் உள்ளே நுழைகிறான்)

கதிர்: என்னடா...அவளுக்கு முகம் சிவக்கும்னு நினைச்சா, கடைசீயில உனக்கு மூக்கு சிவந்திருக்கு?

நவீன்: அடப்பாவி! உடனே வந்திட்டியே....இங்க தான் இருந்து ஒட்டுக் கேட்டியா?

கதிர்(கோபத்துடன்) : சீச்சி. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கில்ல. கதவை முழுக்க திறந்து வெச்சு, ஓபனாவே கேட்டேன்.

(அடுத்த பகுதியில் முடியும்)

ஒரு காதல் வந்துச்சோ (நாடகம் - பகுதி 6)



காட்சி 7

( இரண்டு மாதங்களுக்குப் பிறகு)

( விஜியும் சுசீலாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.)

விஜி: சுசீ... சுசீலாஆ........

(சுசீலா காதில் வாங்கவில்லை, ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்)

விஜி: சுசீஈஈ.....என்ன ஆச்சு உனக்கு. எனிதிங் ராங்க். ரொம்ப டல்லா இருக்க.

சுசீலா: ஒண்ணும் இல்லையே . தூக்கம் கம்மி, எக்ஸாம் வருதில்ல.

விஜி: காலையில கதிர் கால் பண்ணினான்.

சுசீலா: இவ்ளோ காலையில அவன் ஏன் உனக்கு கால் பண்றான்?

விஜி: உன்னை அவன் வீட்டுக்கு வர சொன்னான்

சுசீலா: என் நம்பர் அவன் கிட்ட இருக்கே..... நீ என்ன நடுவில? எத்தனை 
மணிக்கு வர சொன்னான்?

விஜி: இடியட்! சொல்றத மட்டும் கேளு. ஈவினிங்க் ஆறு மணி.

சுசீலா: ஓஹோ என்ன விஷயம்?

விஜி: எனக்கென்ன தெரியும். நீயே போய் பாரு.

(விழி பிதிங்கிக் கொண்டு, நிறை மாத கர்பிணியைப் போல பேருந்து வந்து 
மூச்சிரைத்து நிற்கிறது. விஜி, சுசீலா உட்பட மேலும் பத்து பேர் கசங்கிக் கொண்டு 
ஏறிய பின், அலுப்புடன் நகர்கிறது)


காட்சி 8

(இடம்: ஏபிசி காலனி. சுசீலா வீடு.
நேரம்: மாலை 4.30

[ சுசீலா புத்தகம் படிப்பதாக டபாய்த்துக் கொண்டிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. 
"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு" இப்படிக்கு - நவீன்


அவ்வபோது செல் ஃபோனை முறைத்து பார்ப்பதும்,
தனக்குள் முணுமுணுப்பதுமாக இருக்கிறாள். ]


(கொஞ்சம் நாட்களாகவே சுசீ ஃபோனைப் பார்த்து சிரிப்பதும்,
திடீரென உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதும் நெருடலாகவே இருக்க 
மங்களம் கவலையாகிறாள். )


(சபேசன் நுழைகிறார்)

சபேசன்: என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?

மங்களம்: அதைத்தான் நானும் யோசிச்சிட்டிருக்கேன். சுசீ ரெண்டு நாளாகவே ரொம்ப 
டல்லாக இருக்கியே

சுசீலா: ஆமாம்ப்பா கடைசி கிளாஸ் இல்லை.

வினோத்: கட் அடிச்சுட்டு வந்திருப்பா. ஹி ஹி'

சுசீலா: நான் உன்ன மாதிரியா!

மங்களம்: என்ன சுசீ. ஏன் டல்லா இருக்க?

சுசீலா: இல்லைம்மா டையர்ட்னஸ். எக்ஸாம்னா சும்மாவா? படிக்க வேணாம்?

வினோத்: நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன். நைசா ரோல் நம்பர மாத்தி எழுதிக் 
குடுத்துடு.  ரிசல்ட் வரும் போது, 'நான் எழுதினேனே, எப்படி என் ரிசல்ட் வர்லைன்னு 
சொல்லி தப்பிச்சுகலாம்'


சபேசன்: எப்படிடா இப்படி க்ரிமினல் புத்தி ஓடுது உனக்கு?

வினோத்: உங்க பையனாச்சேப்பா!

மங்களம்: ஏங்க, நீங்களும் இப்படி தில்லுமுல்லு பண்ணிதான் இஞ்சினியரானீங்களா?

சபேசன்: வர வர யாருக்கும் மரியாதையில்லாம போச்சு.

சுசீலா: எல்லாரும் என்ன நிம்மதியா தனியா இருக்க விடுங்க ரொம்ப போர் 
அடிச்சா டி.வி பாருங்க. இன்னிக்கு வினோத் கலந்துக்கற ப்ரோக்ராம் இருக்கு. 

மங்களம்(அதிர்ச்சியுடன்): என்னது? எந்த சானல்?


சுசீலா(அலட்சியமாய்): நேஷனல் ஜியாக்ரபிக்.

சபேசன்(சிரித்தபடி ): தன் வினை தன்னைச் சுடும்.

வினோத்: ராட்சசி, உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு. நல்லா கஷ்டப்பட்டு 
படிச்சு... ஃபெயிலாகு.

சுசீலா: பெரீஈஈய முனிவரு... சாபம் குடுக்கறாரு. சரிதான் போடா.

மங்களம்: இன்னிக்கு பஜ்ஜி, சொஜ்ஜி செஞ்சிருக்கேன். எல்லாரும் சாப்பிட்டு அப்புறமா
சண்டை போடுங்க. குப்புவத்தான் வர விடாம செஞ்சுட்டீங்க. நாமளானும் பஜ்ஜி 
சொஜ்ஜி திங்கலாம்.


சபேசன்(கிண்டலாக): பஜ்ஜி சொஜ்ஜிக்காக குப்பு வரணமா? நாங்களே சாப்டுடறோம்.
வினோத்: ஆமா அது என்ன பஜ்ஜி செஞ்சா சொஜ்ஜியும் சேர்த்து செய்யணமா? 
கேசரி செஞ்சா என்ன?

சுசீலா: லூசு! கேசரிக்கு பேரு தான் சொஜ்ஜி.

மங்களம்: அதாவது பஜ்ஜி செஞ்சா, அது கூட எது வேணா செய்யலாம். 
சொஜ்ஜி தான் செய்யணம்னு இல்லை.

வினோத்: பின்ன எதுக்கு?

மங்களம்: எல்லாம் ஒரு ரைமிங்க்காக தான்.

சபேசன்: சவுண்ட் எஃபெக்ட் டா

(எல்லோரும் பஜ்ஜி சாப்பிடச் செல்கிறார்கள்)

(தொடரும்) 

March 17, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 5 )




(சலசலத்து ஓய்ந்த மழை போல் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
வினோத் சுசீலாவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான்.)

சுசீலா: வினோத், மீட் நவீன் காலேஜ் மேட்ஸ்.

வினோத்: அது சரி.. நவீன் யாரு?

சுசீலா(அசடு வழிந்தபடி): ஐ மெண்ட் கதிர் காலேஜ் மேட்ஸ்.

(இதை நவீன் கவனித்து விட, ஜீரோ வாட்ஸ் பல்பாய் தொங்கியிருந்த அவன் முகம், ஆயிரம் வாட் பல்பாய் ப்ரகாசிக்கிறது.)

வினோத்: எல்லாருக்கும் பாராட்டுக்கள். நிகழ்ச்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.

தாமரை: தாங்க்ஸ் வினோத். நீங்க என்ன பண்றீங்க?

வினோத்: பீ.ஈ முடிச்சிட்டு, 'டி.ஈ.' கம்பனில வேலை பண்றேன். ஸ்டைன்லஸ் ஸ்டீல் ராட்ஸ் தயாரிக்கறோம். கேள்விப்பட்டிருப்பீங்களே, கம்பனி பத்தி..

தாமரை: இல்லையே!

வினோத்(கனைத்தபடி): அது தவிர, ட்யூஷன் சொல்லித் தரேன். மாத்ஸ் ட்யூஷன். நீங்க கூட வேணுனா ஜாயின் பண்ணிக்கலாம்.

தாமரை(சிரிப்பை மறைத்தபடி): இல்லை தாங்க்ஸ். நான் பி.ஏ லிட்டரேச்சர் பண்றேன்.

வினோத்: அதுல கூட சந்தேகம்னா வரலாமே. குறிப்பா ஷேக்ஸ்பியரோட plays பத்தி எதாச்சும் டவுட்டுன்னா...

(ரத்னா வருகிறாள்)

ரத்னா: நானும் லிட்டரேச்சர் தான். எனக்கு ட்யூஷன் உண்டா?

வினோத்(உற்சாகத்துடன்): ஓ கட்டாயமா. உங்களுக்கு இல்லாமையா?

சுசீலா(காதருகில்): ரொம்ப வழியாதடா. தொடச்சிக்க.

ரத்னா: ப்ரோக்ராம்ஸ் ரொம்ப நல்லா இருந்திச்சு...உங்களையெல்லாம்
பாராட்டிட்டு போலாம்னு வந்தேன்.

விஜி: தாங்க் யூ ரத்னா. நீங்க எல்லாரும் அமைதியா கோ-ஓபரேட் பண்ணுவீங்கன்னு
நாங்களே நினைக்கலை.

ரத்னா: நான் ஒரு சஜெஷன் குடுக்கலாம்னு இருந்தேன். அடுத்த வருடத்திலெருந்து எல்லாரும் சேர்ந்தே செய்யலாம். எல்லார் கிட்டையும் திறமை இருக்கு, நேரத்தை அதிகமாக்கி ரெண்டு மணி நேர வெரைட்டி எண்டர்டைன்மென்ட் பண்ணலாம். என்ன சொல்றீங்க?

கதிர்: கண்டிப்பா.

(ரத்னா பொதுவாய் புன்னகைத்து விடை பெறுகிறாள்.)

வினோத்: அடுத்த வருடம் ட்ராமா போட்டா, நான் துஷ்யந்தன்... ரத்னாவை சகுந்தலாவா நடிக்கச் சொல்லலாமா? இந்தக் காம்பினேஷன் ரொம்ப வர்க் ஒவுட் ஆகுது.

நவீன்: ரத்னா சகுந்தலான்னா, நான் கூட மறுபடியும் துஷ்யந்தனாக நடிக்கத் தயார்.

( உப்பிய பூரி போல் மலர்ந்திருந்த சுசீலா முகம் லேசாய் சுருங்குகிறது.)

வினோத்: சரி நான் அப்ப கிளம்பறேன். சுசீ நீயும் சுருக்க வந்திடு.

சுசீலா: நீங்க எல்லாரும் இல்லைன்னா இது சக்ஸஸ் ஆகிருக்காது. ரொம்ப நன்றி...ok folks... நேரமாகுது கிளம்பறேன்  குப்பு வேற ·போன் பண்ணுவான்.

நவீன்: யாரு குப்பு?

சுசீலா(அலட்சியமாக): என்னோட ஃபியான்ஸ்!

(எல்லோரும் அடுத்தடுத்து கிளம்புகிறார்கள்.)

கதிர் (நவீனிடம்): நான் உன்னை ட்ராப் பண்ணவா?

நவீன்: நோ ப்ராப்ளம். I will take a cab. வெரி எஞ்சாயபிள் டைம். ஆனா இன்னொரு முறை நாடகம்ன்னா என்னைக் கூப்டாத. விக் ஒட்டி எடுக்குறதே பெரும்பாடா போச்சு. (நெஞ்சை நிமிர்த்தியபடி) ஒண்ணு வாடகைக் கடைய மாத்து, இல்லை என்னை மாதிரி கலைஞனை இழக்க வேண்டிவரும்.

கதிர்: இவன் பெரிய சிவாஜி. போடா! இந்த நவீன் இல்லைன்னா ஒரு 'பவீன்' நடிச்சுட்டு போறான்.

நவீன்: செ! நன்றிகெட்ட உலகம். காலைல சூரிய நமஸ்காரம் மாதிரி பண்ணி கால்ல கூட விழுந்த!

('யாரை நம்பி நான் பொறந்தேன்' என்று பாடத் துவங்குகிறான்.)

( கதிர் காதை இறுக்க பொத்திக் கொள்கிறான்)

March 16, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 4 )



(இடம்: ஒப்பனை அறை)

கதிர் (மெட்டுடன் முணுமுணுக்கிறான்):

"சகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு...."


(நவீன் இளித்தபடி நிற்கிறான்)

குமார்: கிராம்ஃபோன் கால பாட்டெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமா

சுசீலா: பெருமாளே! இதை எப்படியாவது கழட்ட வழி பண்ணு. நான் உண்டியல்ல ஒரு ரூபாய் போடறேன்.

தாமரை: இங்க நாங்க கஷ்டப்படடிட்டிருக்கோம். பெருமாளுக்கு பைசாவா? அதுவும் ஒரு ரூபாய். ரொம்ப தாராள மனசுடீ உனக்கு.

கதிர்: நான் ஒரு ஐடியா தரவா?

நவீன்: சொல்லித் தொலை

கதிர்(அகலமாக கண் விரித்து) : சவுரிய குட்டியா வெட்டி விட்டுட்டு, துஷ்யந்தன் திரும்ப வர சகுந்தலா மாரியம்மனுக்கு முடி  நேர்ந்துகிட்டதா கதைய மாத்திட்டா?


( எல்லோரும் சுட்டெரிப்பது போல் கதிரையே முறைக்க, தன் அபார புத்தியின் அருமை தெரியாத ஜன்மங்களிடம் என்ன பேச்சு என வேறு பழைய பாட்டை முணுமுணுக்க தொடங்கினான்)


சுசீலா: இது எங்க பாட்டியோட நிஜமுடில செஞ்ச சவுரி, அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க

(சரியாக மூன்று நிமிடத்தில் சவுரியை வங்கியிலிருந்து கிட்டத்தட்ட பிடிங்கி எடுத்தனர்.  நவீன் அவசர அவசரமாய் மேடையேறுகிறான். படபடப்பில் சுசீலாவுக்கு அடுத்த வசனம் மறந்ததால், ஸ்க்ரிப்டை வேகமாகப் படித்து விட்டு ஒடுகிறாள்)

விஜி: பார்த்து...நிதானமா ஓடுடீ. சவுரியே இப்பவோ அப்பவோனு இருக்கு, வேகமா ஓடி கீழ விழுந்தடப் போகுது.

( ஒரு வழியாக நாடகம் முடிய, குமார் , ஏணி வழியாய் ஏறி, வாங்கியிருந்த உதிரிப்பூக்களை நடு மேடையைப் பார்த்து எறிகிறான். பலத்த கரகோஷம் எழும்புகிறது.)


தாமரை(குஷியாய்): அப்பாடி! என்ன கிளாப்!!

விஜி: நாடகத்துக்கு தானே? இல்லை நிறுத்தினதுக்கா!

(பார்வையாளர் பகுதியில்)

சபேசன்: இப்போ சுசீலாவைப் பார்த்தா தேவதை மாதிரி இல்ல...

வினோத்(நெகிழ்ந்து): என் தங்கை என்னிக்கு தேவதைக்கு குறைச்சல்

(அடுத்து இன்டெராக்டிவ் கேம் தொடங்குகிறது.)

(விஜியும் கதிரும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.)

(முதல் சீட்டை பிரித்து பார்வையாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பேச அழைக்கின்றனர்.)

மேடையேறிய பார்வையாளர்: முதல் க்ளூ.. இவர் ஆந்தை மாதிரிங்க

கீழிருந்து ஒரு குரல்: அம்மா முன்னாடி முழிக்கிற ஓ.பன்னீர்செல்வம்!!!

மேடையேறியவர்: இல்லை... இரண்டாவது க்ளூ... பகலில் தூங்குபவர்.

கீழே: ஸ்கூல்ல தூங்கற என் பையனோ? ஆந்தை மாதிரி முழிக்கறது கூட பொருந்தி வருதே.....அவ்வளவு famous ஆகிட்டானா அவன்?


மேடை : இன்னுமா யாருக்கும் தெரில?... நம் காவல் தெய்வம்.

கீழ்: எம்.ஜி.ஆர்!!!!

மே.பா: அய்யோ! நம்ம காலனி வாட்ச்மான்!

(ஓ என்ற பேரிரைச்சல் காதை பிளக்கிறது)

(அடுத்து ஒருவரை தேர்ந்தெடுத்து ஆட்டம் தொடர்கிறது.)

மே.பா: முதல் க்ளூ... இதிஹாஸ பாத்திரம்

(மேடையின் பக்கவாட்டில் நிகழ்ச்சி பார்த்தபடி..)

தாமரை: எங்க வீட்டு ஈயப்பாத்திரமே அதுக்குள்ள இளிக்குது. இதிஹாசப் பாத்திரமெல்லாம் உளுத்துப் போயிருக்காதோ?

சுசீலா: நீங்க ரெண்டு பேரும் கெஸ் பண்ணுங்க

தாமரை: உனக்கு மட்டும் எப்படி தெரியும்.

சுசீலா: சிட்ல பேர் எழுதி போட்டதே நான் தான்.

நவீன்: தெரிலை. நீயே சொல்லேன் சூசீ.....

சுசீலா: எங்க அம்மா எனக்கு பழைய பேரா இருந்தாலும் நல்ல பேரா சுசீலான்னு வெச்சுருக்காங்க. அதை சூசீ..னு மாத்தி, க்ருத்துவ மதத்துக்கு  நீயே எக்ஸ்போர்ட் பண்ணிடாத.


நவீன்: சரி க்ளூ குடு, யாரு இதிஹாஸ பாத்திரம்

சுசீலா: அவர் ஒரு பறவை

நவீன்: பறவை முனியம்மா !!

தாமரை ( நற நறவென பல்லைக் கடிக்கிறாள்) : இத்த்திஹாஸ பாத்திரம்

நவீன்: இவ்வளவு அழுத்தி சொன்னா, பாத்திரம் நசுங்கிடும்.

சுசீலா(சிரிக்கிறாள்): ஐயோடா... நவீன். எப்படி உன்னல இப்டி டக்டக்ன்னு கௌன்டர் குடுக்க முடியுது

(தாமரை தலையில் அடித்துக் கொள்கிறாள்)

தாமரை(நவீனிடம் ரகசியமாய்): நீ இம்ப்ரேஸ் பண்ணுற லட்சணத்துகாக இப்படி தாங்க முடியாத ப்ளேட போட்டு எங்கள கொல்லாத.

சுசீலா: த ஆன்ஸர் இஸ் ஜடாயு.

நவீன்(சோகமாக): அப்போ நான் ஃபெயில் ஆய்ட்டேனா?

சுசீலா(சூள் கொட்டியபடி): நீ தேறாத கேஸ். பாஸ் பண்ணறது ரொம்ம்ப கஷ்டம். அடுத்த கேள்வி போலாமா?

நவீன்: நான் ரெடி

சுசீலா: முதல் க்ளூ.... அமெரிக்கப் பெண்மணி

நவீன்: கிரிஸ்டினா ஆகீலேரா

( தாமரை...ஆமா... இந்த பில்ட்-அப் தான் இப்ப பாக்கி என்று முணுமுணுக்கிறாள்)

சுசீலா: இல்ல... பில் க்ளிண்டன் என்றதும் நினைவுக்கு வருபவர்?

நவீன்: ஆ....யெஸ் தெரியும்.....மோனிகா!

சுசீலா(உதட்டைச் சுழித்தபடி): தப்பு! ஹிலரி க்ளிண்டன். பில் க்ளிண்டன் என்றதும் மோனிகா தான் நினைவுக்கு வராங்களா?  ம்ஹீம்... நீ பாஸ் பண்ண மாட்ட.


நவீன்: இன்னொரு கேள்வி. இப்ப கண்டிப்பா சரியான ஆன்ஸர் சொல்லுவேன் பாரு.

சுசீலா: நான் கூட உன்ன என்னவோன்னு நினைச்சேன்...ம்ஹூம். டைம் வேஸ்ட்.

( நவீன் முகம் 99 ல் ரன்-அவுட் ஆன பாட்ஸ்மேன் போல் சுருங்கிப் போகிறது )

குமார்: யப்பா! நாங்க இருக்கவா வேணாமா?

நவீன்(எக்கச்சக்க எரிச்சலில்): ஏன்? இரேன்! இங்க என்ன மிட்நைட் மசாலாவா நடக்குது?

விஜி (அவசரமாய் ஓடிவந்தபடி): எல்லாரும் ஃபார்மல் தாங்க்ஸ் சொல்ல வாங்க, மசாலா ரெசிபியெல்லம் அப்புறம் பேசலாம்.

தாமரை: விஜி, அரைகுறையா காதில் வாங்கி எதையானும் உளறாத.

(மேடையில் எல்லோரையும் அறிமுகப் படுத்தி நன்றியுரையும் வழங்குகிறான் கதிர்)

(பார்வையாளர் பகுதியில்..)

சபேசன்: பரவாயில்லை துஷ்யந்தன் பார்க்க நல்ல பையனாத்தான் இருக்கான்

(மங்களம் கண்டுகொள்ளாமல் மௌனமாய் இருக்க்கிறாள்.)