February 06, 2020

வன்புணர்வு






புதுமலர், இளமலரென்றும்
வண்ணமிழந்து வாசம் தொலைத்ததென்றும்
பகுத்தறியா வண்டுகள்.
முதுமலரின் வறட்சியிலும்
முயங்கிக் கிடக்கும் பூச்சிகள்
.
இணங்கும் உரிமை மறுக்கப்பட்டு
இணையும் விதியின் வழியில்
சிக்கித் துடிக்கும்
சிறகிழந்த மலர்கள்
.
ருசித்ததும்
ரசிக்க ஏதுமில்லையென
இலக்கை நகர்த்தி இறக்கை விரிக்கும்
.
பூச்சிகளும் வண்டுகளும்
நன்றி மறப்பதில்லை.
நுகர்ந்த பூவின் மிச்சத்தை
எச்சமென விட்டுச் செல்லும்
பூக்களை சிதைத்ததாகவோ
உருகுலைத்து உமிழ்ந்ததாகவோ
இதுவரை சரித்திரமில்லை.

(© ஷக்திப்ரபா)

2 comments:

  1. மனசில் பட்டதே பதிவில் நன்றி

    ReplyDelete
  2. nandri sir... கொடும் நிகழ்வுகள் தொடாமல் இருந்தாலே நிம்மதி.

    ReplyDelete