February 28, 2020

மனதில் என்ன நினைவுகளோ




செவ்வாய் சிறுத்திருக்க
வில்லென வரைந்த புருவங்களின் மத்தியில்
வருத்தத்தின் சுருக்கங்கள்..
காலைச் சிற்றுண்டியில்
தூக்கலாக சிதறியிருந்த உப்புக்கல்,
கணித வகுப்பில் கண்டெடுத்த முட்டை,
கடிந்துகொண்ட முட்கள்,
கேலிக்குள்ளாக்கிய எகத்தாளம்,
எது தான் காரணம்!? - என
குழம்பிய பொழுதுகளை நீட்டாமல்
சட்டென பூமலர்ந்து
புருவங்கள் சீராகி
கோவைச் செவ்வாய்
காதுவரை நாண் தொடுத்தது.
முகக் கவிதைகள்
அகத்தை எப்போதும் விளக்கிவிடுவதில்லை!


No comments:

Post a Comment