சிறகுகளின் வண்ணம் சுமந்து, சிறிதே நேரம் மின்னி-மறையும் மின்மினிப்பூச்சிகள்... நாமும், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும்.
Lalitha Sahasranama, லலிதா சஹஸ்ரநாமம், Miscellaneous
August 19, 2021
August 15, 2021
Short - nilaa kaaigiradhu (song)
February 01, 2021
சேரமான் பெருமான் (கழற்றி அறிவார்) நாயனார்
January 20, 2021
பெரியது எது
பொம்மைகள்,
குச்சிமிட்டாய்,
பெப்பர்மின்ட்,
சின்னச் சின்னக் கனவுகளை
இறுக்கமாகப் பிடித்திருந்த
பிஞ்சுக் கைகளை
வலிக்க வலிக்க விரித்ததில்,
ஒவ்வொன்றாய் சரிந்தது.
பொம்மைக் கனவுகள் வீழ்ந்து போனது....
சும்மா இருக்கும் சுதந்திரக் கைகளில்,
பெரிய குறிக்கோள்
பெரிய கனவுகள் பெரிய இலக்குகள்
எல்லாமே உயர்ந்ததாய் பெரியதாய்
பட்டியலிட்டு படாடோபமாக ஏறிக்கொண்டன.
அவை கூட ஒரு நாள் வீழுந்து போகுமோ!
அல்லது நிலையில்லாதொரு சுழற்சியில்
வீழ்ந்தும் எழுந்தும்...
வீழ்ந்தும் எழுந்தும்
மீண்டும் மீண்டும்..
...மீண்டும் மீண்டும்...
கண் கெட்ட பின்னே....
ஈடு செய்ய முடியாத இழப்பு...
ஏடு சொல்லித் தராத பாடம்.
மூடனாய் மயங்கிய மனமும்,
கேடு வரும் என்று தெரிந்தே
ஓடிய குணமும்,
மேடும் பள்ளமும் சூழும் பாதையில்
தேடிய சுகமும், சுவையும்,
ஆடி அடங்கிய பின்பு
வாடி நிற்பதென்ன! பின்
கூடிக் கூத்தாடும் கூட்டத்தை
சாடி உமிழ்வதென்ன!
Clueless
Maze of unanswerd questions..
assumptions, evaluations..
clogging my muddled mind
.
Was I mistaken?
or Were you?
What went wrong?
Was anything ever right at all?
.
searching the answers
amidst polluted surroundings..
biased opinions...
.
I may never find the answer,
Questions never cease to exist.
.
Paranoid of future
I lay,
closed in a dark cubicle,
depressed and lifeless..
to be lit by a ray of hope!
.
To be cherished,
kissed..
To shine like a queen
in the kingdom of praise.
.
In a fantasy world
I live, laugh, and
exhaust my existence...
In delusions
I mingle, merge and collapse.
.
Thoughts dwindling as pointless nothing
to become pointless nothing...
எங்கள் நடிகர் திலகம் - சிவாஜிகணேசன்
எளிய சொற்கள் கிறுக்கி வைக்கும்
குறையறிவுள்ளப் பேதை நான்
வலிய சொல்லும் தலைவணங்கி ஏற்கும்
சொல்வளம் செழிக்கும் மேதை நீ
*
ஏட்டில் வடிக்காத எண்ணங்களையும்
கண்களால் தீட்டிய கலைஞனே! - உனை
கவிதையாக்கத் துணிந்து - பின்
காவியம் அன்றோ நீ என உணர்ந்து,
சொல்லில் சிக்காமல் நழுவும் உன்
சாமர்த்தியத்தையும் சேர்த்தே ரசிக்கிறேன்.
*
இறைவன் அளித்த வரமோ!
கலையுலக நிலவோ! சிகரமோ!
உன் திறமைக்கு உவமை சேர்க்க மறந்து
செந்தமிழ் மொழியும் மௌனம் கொண்டதோ!
*
கள்வன், கணவன், காதலன்,
கொற்றவன், பெற்றவன், மற்றவன்,
நல்லவன், சற்றே பொல்லாதவன்,
தலைவன் அவன் போற்றும் இறைவன்,
இறைவன் அவன் தேடும் தொண்டன்.
இன்னும் எண்ணற்ற முறை பிறந்தாய்..
வீழ்ந்தும் எம் நெஞ்சத்தில் நிறைந்தாய்.
கணேசன் என்பதை மறந்து
சிவாஜியென உனை செதுக்கிக் கொண்டாய்.
நடையும், அதைத் தாங்கும் உடையும்,
சிரிப்பும் பொல்லாத கண்-விரிப்பும்
துடிப்பும் கம்பீர உச்சரிப்பும்
பல கோடி நெஞ்சங்களில் நின்று வாழும்.
உன் இமாலய வெற்றியின் பெயர் கூறும்.
.






