Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

January 27, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (176 - 184) (with English meanings)






நிர்குண உபாசனை

நிர்விகல்பா;

நிராபாதா;
நிராபேதா;
நிர்பேதா;
பேதநாசினி;
நிர்-நாசா;
ம்ருத்யு மதனீ;
நிஷ்க்ரியா;
நிஷ்பரிக்ரஹா;
நி:ஸ்துலா;


() விகல்பா = இல்லாத ஒன்றின் கற்பனை, உதாரணம் 'கானல் நீர்' --- தவறான புரிதல் ---- தேர்வு செய்தல்

# 176 நிர்விகல்பா = நகல் / பிரதிபிம்பங்களின் பொய்மைக்கு ஆட்படாதவள்

( நாம ரூப வடிவங்களின் பேதம் பிரதிபிம்பங்கள் என்ற கருத்துக்கு உட்படுகிறது. உண்மையின் தத்துவம் பரப்பிரம்மம் மட்டுமே, அந்த உண்மையாக அவள் இருக்கிறாள் என்று பொருள் பண்ணிக்கொள்ளலாம்)

() ஆபாதா = துன்பம் - இடர் - இடையூறு

# 177 நிராபாதா = இடர்களால் நிலைகுலையாதவள்

() பேதா = பேதம் - வேறுபாடு

# 178 நிர்பேதா = எவ்வித வேறுபாடும் அற்றவள் - (சேதன - அசேதனத்தின் ஐக்கியமாக உணரப்படுபவள் )

# 179 பேதநாசினி = பேதங்களையும் அதனால் விளையும் வேற்றுமைகளையும் ஒழிப்பவள் (பேதங்கள் அஞ்ஞானத்தால் தோன்றுபவை)


# 180 நிர்நாசா = அழிவுக்கு அப்பாற்பட்டவள் ( அமரத்துவம் வாய்ந்தவள் )

() மதன = வீழ்த்துதல்

() ம்ருத்யு = மரணம் = முடிவு

# 181 ம்ருத்யுமதனீ = பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியை தகர்ப்பவள்

() க்ரியா = செயல் = கர்மா

# 182 நிஷ்க்ரியா = செயல் நிமித்த கர்மங்களுக்கு அப்பாற்பட்டு திகழ்பவள்
(கர்மங்களாலான வினைகளால் தீண்டப்படாதவள்)

() பரிக்ரஹா = ஆதரவு - சகாயம் - பெறப்படுவது

# 183 நிஷ்பரிக்ரஹா - தேவைகள் அற்றவள் - எதனையும் சாராமல் விளங்குபவள்.

() துலா = தராசு = அளக்கப்படுவது = பொருத்திப்பார்ப்பது

# 184 நி:ஸ்துலா = ஈடு இணையற்றவள்

( தொடர்வோம் )

Lalitha Sahasranama (176 - 184 )


NirguNa upaasana

Nirvikalpa;

Nir-abhadha;
Nir-bhedha;
BhedhaNasini;
NirNasa;
Mrithyu Mathani;
NishKriya;
NishParigraha;
NihSthula;


() vikalpa = false notions - fancy imaginations = choice or alternative

# 176 NirVikalpa = Who is without false identifications

( * False identifications would mean false names, forms and identity, She is without such
false dreams, which otherwise means she is the ultimate truth or formless brahmam )


() Abhaadha = distressed - tormented

# 177 NirAbhaadha = She who is undisturbed i.e. composed - tranquil

() BhEdha = division - difference

# 178 NirBhedha = Who is devoid of every perception of difference.. i.e the unified force ...

# 179 BhedhaNasini = Who erases and eliminates the differences born out of ignorance or Agnaana

# 180 NirNaasa = Who is indestructible (therefore immortal)

() Mathana = to destroy
() Mruthyu = to terminate

# 181 MruthyuMathani = Who destroys mortality ( thereby grants liberation from birth and death)

() Kriya = activity - work - karma

# 182 NishKriya = Who is does not associate with action or Karma ( * state of being a witness , beyond karmic stains )

() Parigraha = assistance - acquisition - receiving or accepting anything

# 183 NishParigraha = Who expects or wants nothing (she is complete in herself)

() thula = weigh - compare

# 184 NihSthula = Who is incomparable...i.e. peerless.

(to continue)

March 02, 2012

மரணத்திற்கு முன் சரணம்



இரு தினங்களுக்கு முன் பொதிகைத் தொலைகாட்சியில் வரும் "கண்ணபிரான் கதையமுதம்" நிகழ்ச்சியில் மிகவும் எளிமையான தத்துவம் ஒன்றை விளக்கினார் வேளுக்குடி க்ருஷ்ணன் அவர்கள்.

கீதையில் கண்ணன்

"என்னை நினைத்திரு...
மரண காலத்திலும் என்னை நினைத்திரு..
அப்படி நினைப்பவன் என்னையே வந்தடைகிறான்
"  என்கிறார்.


மரணத்தின் வாயிலில் நமக்கு பெருமானை நினைக்கும் பாக்கியம் கிட்டுமா என்றே தெரியவில்லை. முன்னமே இக்கருத்தினையொட்டி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மரணம் என்பது எப்படி எங்கு எந்த சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்பதே புதிர். அத்தருணத்தில் நாம் சிந்தனையற்று இருக்கலாம். கேளிக்கையில் திளைத்திருக்கலாம். கைகால் விழுந்து கோமாவில் இருக்கலாம். மரணபயத்தில் பீடித்து இருக்கலாம். உற்றார் உறவினரின் நினைவில் நெகிழ்ந்திருக்கலாம். பாசத்தில் கட்டுண்டு இனி இவர்களை எங்கு காண்பேன் என்று கலங்கி இருக்கலாம்.

எத்தனையோ எண்ணற்ற நினைவுகளும் பயங்களும் வந்து போகும் நேரத்தில் இறைவனை நினைக்கும் பக்குவம் சிறந்த பக்தனுக்கே வருவது குறைவு. சாமான்யனுக்கு சொல்லவும் வேண்டுமா? சதா சர்வ காலம், இறைத் தியானத்தில் இல்லாத ஒருவன் இறுதி நேரத்தில் எவ்வாறு நினைக்க முடியும். இப்படி எல்லாம் சந்தேகம் எழுகிறது. போதாத குறைக்கு, இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்சையில் வாழ்வின் பாதி காலம் கழிந்து விடுகிறது.

நம்மை போன்றவர்களுக்காகவே ராமானுஜர், திருகச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமானாக விளங்கும் ஸ்ரீமன்நாராயணனுக்கு கேள்வி அனுப்பினர். திருக்கச்சி நம்பிகளிடம் இறைவன் தினமும் பேசி உபதேசம் அளிப்பார். ராமானுஜர் அனுப்பிய ஆறு கேள்வியில் ஒன்று தான் "மரணத் தருவாயில் இறைவனை நினைப்பது அவசியமா?"

அதற்கு இறைவன்,. "உடல் நன்றாக இருக்கும் பொழுது நினைத்தாலே போதுமானது. என்னைச் சரணம் என்று பற்றியவனை அவனது இறக்கும் தருவாயில், நான் நினைத்து என்னிடம் சேர்த்துக்கொள்வென்" என்றாராம். அதாவது அவனை சரணம் என்று அடைந்துவிட்டால் நமக்காக அவனே நம்மை நினைத்து தன்னிடம் சேர்த்துக்கொள்கிறேன். என்னே கருணை!

"எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே." 

 என்றார் பெரியாழ்வார்.

மரணத்தருவாயில் நினைக்க மாட்டேனோ என்னவோ, இப்போதே உன்னிடம் சொல்லிவைத்தேன். 

 அப்படியெனில் மானின் மேல் இறுதிநாட்களில் மட்டுமே ஆசை வைத்த ஒரே செயலுக்கு ஏன் இறைவன் ஜடபரதரை மானாய் பிறக்கச் செய்தார்? இதற்குத் தான் வேளுக்குடி அவர்கள் சொன்ன விளக்கம் என்னை பெரிதும் நெகிழச்செய்தது.

பரதர் பக்தியோகம் கொண்டு பக்திபூண்டார். தம் முயற்சியினூடே பக்தியில் திளைத்திருந்தார். பக்தியோகத்தைத் தாண்டி எவன் ஒருவன் சரணாகதி என சரணம் கொள்கிறானோ, அதாவது, என்னை இட்டுச் செல்வதும் நீயே, உன்னையே சரணம் அடைந்தேன், என்று முழுவதுமாய் சரண் அடைந்தவனை இறைவன் இறுதிகாலத்திலும் உடல் நலிந்தோ, ஆசை மேலிட்டோ அவன் நினைக்காது போயினும் கூட தாமே நினைத்துச் சேர்த்துக்கொள்கிறார்.

பக்தி பூணுவோம். அதனையும் தாண்டி அந்த பக்தியைத் நமக்கு அருளவும் அவனையே சரணமும் அடைவோம்.