October 09, 2024

அலைமகளே வருக

 


அலைமகளே! மாலவன் மார்பில்
சீரென விளங்கும் மலர்மகளே!
வளர் சௌபாக்கியம் தரும் அலர்மகளே!
நாராயணன் நாடும் நித்ய சுந்தரியே!
சுகபோகங்கள் சேர்க்கும் சௌந்தரியே!
.
தன-தானியம் தரணியெலாம் நிறைந்திட,
மாங்கல்யம் நிலைத்திட - பொங்கு
மங்கலங்கள் தழைத்திட,
பயம் விலகி பகை அகன்றிட,
ஜயம் கூடி தடை விலகிட - உன்
கரம் பற்றுகிறோம் நலம் நல்கிடம்மா!
.
செருக்குவாரா செல்வம் குவிந்திட;
தரக்குறைவிலாது தழைத்தே ஓங்கிட - எம்
சந்ததியே உனை தினம் துதித்திட;
தளிர் தாமரையில் ஒளிர் திருமகளே,
இணை ஈடில்லா துணை நீயெனவே - பொற்
கழல் போற்றுகிறோம் வரம் தாருமம்மா!

-ShakthiPrabha

No comments:

Post a Comment