October 04, 2024

ஜயஜய துர்கா

 ஆயிரம் நாமங்கள் தாளமிட வரும்

அர்ச்சனைப் பொருளே அம்பிகே!
துக்கங்கள் தூளாக தித்தித்தி ஆடிடும்
தாயவளே ஜயதுர்கையே!
.
முக்காலம் உணர்ந்த ஞானியரும் ஏத்தும்
தூயவளே மூகாம்பிகே !
காரணி உனையே கவியிற் புனைந்தோம்
பூரணியே அபிராமியே!
.
அனந்தம் நீயென அடைக்கலம் கண்டோம்
ஆனந்த பைரவியே!
தோரணங்கள் நாட்டி பாயிரமும் சூட்டி
பாடுகின்றோம் பவானியே!
.
கதிநீயேனவே தினம் போற்றியுந்தன்-சரண்
நாடுகிறோம் சிவகாமியே!
பாரெங்கிலும் மங்கலம் தங்கவே- கண்
பாரடியே மீனாட்சியே!
ShakthiPrabha

2 comments:

  1. மிக மிக அருமையான வரிகள். பாராட்டுக்கள் 🎉

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்.

    ReplyDelete