Showing posts with label tamil movie songs. Show all posts
Showing posts with label tamil movie songs. Show all posts

August 12, 2010

திரையிசை பயணங்கள் - 2

படம்: நாடோடி ராஜா
பாடல்: வைரமுத்து
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள் : எஸ்.பி.பி / எஸ். ஜானகி
வருடம்: 1982

___
Courtesy
http://www.dhool.com/sotd2/645.html

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே..ஆஅ....
.
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரம்
இவள் ஒரு தாவணி மேஹம்
இதயம்..
அமுதில்..
தொடுகையில்
.
பார்வை வேறானது இங்கு
வியர்வை ஆறானது
பார்வை வேர்-ஆனது இங்கு
வேர்வை ஆறானது
.
சேலை தொடு மாலை இடு
இளமையை தூது விடு- பாடு (சந்தன)
.
என்னோடு வந்தாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி தாகம்
கரும்பும்...
இவளை ..
விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை - இனி
தேனில் ஆராதனை
கூந்தலிலே
போர்வையிடு
மன்மத சேதி கொடு - பாடு (சந்தன)
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஆஹாஹாஹா






___
பார்வை வேறானாது / பார்வை வேர் - ஆனது (பிரித்தும் பொருள் கொள்ளலாம்) போன்ற பாடல் வரிகள் வைரமுத்துவின் முத்திரைக்குச் சான்று. ஷங்கர்-கணேஷின் வீணை இடையிசையில் நாட்டை ராகத்தின் குதூகலிப்பு (மஹா கணபதிம் பாடலின் தொனி) 'விடிந்ததும் காய்ந்து விடும்' என்ற கடைவரியில் ஸ்வர வேறுபாட்டுடன் முடித்திருப்பது மகுடம். எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி குழைவும் லயிப்பும் பாடலை அலங்கரித்திருக்கிறது.

August 11, 2010

திரையிசைப் பயணங்கள் - 1

எனக்குப் மிகவும் பிடித்த / ஓரளவு பிடித்த / பிடிக்காதா திரைப் பாடல்களை பகிர்ந்து கொள்ளும் சிறு முயற்சி. பல பகுதிகளாகத் தொடரும்.

இறைவனைப் போற்றும் பாடலிலிருந்தே துவங்குகிறேன்.

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000528
ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முத்தாவன் மூல முதல் ஆனவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவை ஒன்றுதான் என்று சொன்னான் அவன்
தான் பாதி உமை பாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன்
கொடியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையாகி
ஊற்றாகி நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்



(இப்பாட்டின் ஒளி வடிவம் கிடைக்கவில்லை)