Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

August 11, 2010

திரையிசைப் பயணங்கள் - 1

எனக்குப் மிகவும் பிடித்த / ஓரளவு பிடித்த / பிடிக்காதா திரைப் பாடல்களை பகிர்ந்து கொள்ளும் சிறு முயற்சி. பல பகுதிகளாகத் தொடரும்.

இறைவனைப் போற்றும் பாடலிலிருந்தே துவங்குகிறேன்.

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000528
ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முத்தாவன் மூல முதல் ஆனவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவை ஒன்றுதான் என்று சொன்னான் அவன்
தான் பாதி உமை பாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்

காற்றானவன்
கொடியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையாகி
ஊற்றாகி நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்



(இப்பாட்டின் ஒளி வடிவம் கிடைக்கவில்லை)