Showing posts with label அழுகை. Show all posts
Showing posts with label அழுகை. Show all posts

September 04, 2009

ம்ஹூம்...அழ மாட்டேன்!



பளீரென புன்னகை வரைந்து விடையளித்த பின்
இயல்பாய் இருக்க எத்தனித்து
இருபத்தி இரண்டாம் முறையாய் தோற்றுவிட்டேன்.
அதற்காகவெல்லாம் என்னால் அழமுடியாது.
.
இப்பொழுதெல்லாம் அழுவதில்லை தெரியுமா
மரத்துவிட்டது.
உன் நினைவுகளின் எச்சில் மிச்சமிருக்கிறது என்பதற்காக
அதைக் கண்ணீரிலா கரைக்க முடியும்?!
.
போதும் இன்னும் இம்சிக்காதே
விட்டுவிடு.
கடமைகள் காத்திருக்கிறது
அழ நேரமில்லை.
அய்யயோ... அழுவதில்லை என உனக்கு சத்தியம் வேறு செய்துள்ளேன்!
.
நல்லவேளை...
மனம் வரையும் ஓவியங்களை படம்பிடிக்கும் கருவியில்லை.
நல்லவேளை....
மனம் அழும் ஓசைகளை மொழிபெயர்க்க வழியில்லை.