கல்லிலே உயிர்கொண்ட அருங்கலையே!
பரணியர் வடித்த பரம்பொருள் ஆதியே!
தரணியெலாம் ஆளும் ஆனந்த ஜோதியே!
இதழ்வழி நீ சிந்தும் இளநகையின்
காரணப் பொருளாகி; மதிதுறந்து
பாழ்மன வழியோடும் புலன் பணிந்த
மிகை வாழ்வு இனியும் வேண்டா ; பொன்
நகையாகி முடி கண்டு மின்னவோ
வகையான மாலையென மார்பிலாடி
கலையாத நின் கீர்த்தி பாடவோ - கொன்றை
மலராகி உன்னடி சேரவோவென வெள்ளி
மலைவாழ் நாதனே என் ஈசனே - நெஞ்சுருகி
சிலையாகிப் போகிறேன் நான்
ShakthiPRabha
No comments:
Post a Comment