Showing posts with label மௌனம் கவிதை. Show all posts
Showing posts with label மௌனம் கவிதை. Show all posts

September 15, 2010

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல்



உதடுகள் உயிறற்று உலர்ந்திருந்தாலும்
உயிரோசையில் ஓய்வற்ற அனத்தல்
பழையது புதியது
பத்து வருடத்து முந்தைய தூசு
சின்ன வயது பல்லாங்குழி
வயது வந்ததும் வந்த ஈர்ப்பு்
முற்றிலும் மெய் மறந்த முதல் காதல்
இதுவும் அதுவும்
இன்னும் சிலவும்
நினைவு கிடங்கில்
கூச்சலிடும் சப்தங்கள்
விரதங்களைக் கீறிவரும் ஓசைகள்
உள்ளொன்று வைத்து புறமொன்று
போர்த்தியிருக்கும் பொய் முகத்துடன்
ஓயாமல் ஒலிப்பதால்
மௌனம்
அர்த்தமற்றது

August 31, 2009

காதலியாள் தூங்குகிறாள்...காலையில் மலருங்கள்




மிருதுவாய்
மெல்லிய இழைகளால் கோக்கப்பட்டிருக்கும்.
அதன் கனத்தில் தொங்குவது
மெல்லுணர்வுகளைத் தொட்டுச் செல்லும் யதார்த்தங்கள்.

குழந்தையின் மாசற்ற சருமம் போல்
மென்மையாய்..
இளசாய்...
அல்லது
பதினாறு வயது பருவத்தின் பரிசுத்த அழகுடன்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு பம்மி நிற்கும்.

கருத்துக் கற்பனையைத் தாங்கி நிற்கும் பருத்த நீர்குமிழியை
வார்த்தைப் பற்களால் உடைத்து விடாது
அடர்ந்த மௌனத்தால் அஞ்சலி செலுத்தலாம்
கண்ணீர் துளிகளால் கனம் சேர்க்கலாம்
அல்லது
புன்னகை மலர் தூவலாம்

மெதுவாய்...
சத்தமின்றி சுவடுகள் பதிக்கப்படுகின்றன
உதிர்க்கும் ஒரு மாத்திரையும்
படைப்பின் ஆழத்தை..
மோனத்தை..
பதம் பார்க்குமோ என பயந்து!