உடனிருந்த கணங்களுக்கு
உரமிட்டு உயிரூட்டி
நீரூற்றி நிறம்சேர்த்து
செழித்தோங்கும் மனத்தோட்டத்துப் பூக்களின்
பறிக்கப்படாத வாசம்...
()
கடன்படவில்லை உனக்கெனவே உயிர்பெற
திடம் பெறவில்லை உறவெனவே உரிமை தற
உன் தோளில் உறவாடும் வேறொருத்திக்கு
என் மனப்பூக்களை அணிவித்து அழகூட்டி
அறிவிப்பின்றியே அகன்றிடவோ...
ஷக்திப்ரபா
