February 25, 2026

கவிச் சின்னங்கள்

 



கவிதொகுத்த 
கற்றைப் பூச்செண்டின்
ஒற்றைச் சரத்தை
மெல்ல நிமிர்த்தி
மொட்டு விரியவே
மெல்லிசைக் கோர்த்து - புது
மெட்டமைத்து மேடையேற்றி
பட்டுவண்ண  நூல்நூற்று 
ஒளிப்பெருக்கி; 
பட்டித் தொட்டியெங்கும்
ஒலிப்பெருக்கியதில், 
அமுதென  எழுந்தது நாதம்
மெழுகென நெகிழ்ந்த நேயர்கள்
ஊனெனும் ஓலையில் 
உயிரெனும் -மைத்தொட்டு
உணர்வுகளால்
எழுதிச் சென்றனர்.
ஒரேயொரு கவிதைக்கு
ஒவ்வொரு முறையும்
ஆங்கே புனையப்படும்
ஓராயிரம் கவிதைகள்! 

           (ShakthiPrabha) 

No comments:

Post a Comment