பலகாலம் சுமந்திருந்த
பழுப்பேறிய திரவம்
புளிப்பும் துவர்ப்புமாக
விளிம்புவரை நுரைத்திருந்தது.
பொங்கித் ததும்பிடினும்
நிலைதடுமாறி கரைபுரளாமல்,
நளினமாகவே ஏந்தியிருந்தேன்...
அடையாளக் கோப்பையது,
என்னையே தாங்குவது!
குளிர் திரவமதை
கண்டவர் கிண்ணங்களிலும்
சொட்டுச் சொட்டாய்
சிந்தியபடியே நகர்கிறேன்
அடடா! எட்டாத அதிசயமடி
மாயத்திரவமதுவும்
மதுரமாகிப் பொனதடி!
ShakthiPrabha
No comments:
Post a Comment