December 16, 2022

மார்கழிக் கோலங்கள்



புள்ளினங்கள் கூவும் பூங்காலைப் பொழுதில்
கள்ளியவள் எழுதியுள்ள புள்ளிகளின் இலக்கியம்;
தள்ளித்தள்ளி தெறித்திருக்கும்
வெள்ளிப் பூக்களை - கரத்தில்
அள்ளியள்ளி தொடுத்த மலரோவியம்;
சித்திரவீதிகளில் சிந்தியிருக்கும் அதிசயம்- என்
சிந்தையெங்கும் பூத்திருக்கும் பூவனம் - இது
பள்ளிகொண்ட சித்தன்ன-வாசல் காவியம்.
.
- ShakthiPrabha



( Maargazhi kolam two years ago)


No comments:

Post a Comment