November 23, 2022

பாதைகளின் ஆலிங்கனம்




திரும்பிப் பார்க்கவே எத்தனிக்கிறேன்..
மாறிய தடங்கள்
மீண்டு(ம்) வர முரண்டு பிடித்தன.
முறுக்கி நின்ற பாதைகள்
மறுபடியென் முகம் பார்க்கவில்லை.
சாலையோரங்களின் மணல்வெளியிலும்
சோலைமலர்களின் மடியினிலும்
நினைவுகளின் எச்சத்தை சுவாசிக்கிறேன் .
தூரத்தில் புள்ளியாய் மறைந்து போனவை
நினைவுகளாகி நெருங்கி நின்றது
உயிர்த்தெழுந்து உடன் நடந்தது
நட்புடன் கைகோர்த்து
காதலுடன் கைபிடித்து
என்னில் நானாகிப் போனது.
இதயமெங்கும் இறந்தகாலம்
மணம்வீசிச் சென்றது
நிகழ்காலத்தையும் மெருகேற்றிப் போனது.

3 comments:

  1. Hi mam im trying to contact you. Im nithya book publisher. I have message you in fb but i do not think you are active in fb. Kindly check and revert. Thank you

    ReplyDelete
    Replies
    1. Mam awaiting your responce. If you can write a book for us

      Delete
    2. Thankyou for your efforts. Ms. Nithya. Sorry for late response :)

      Delete