April 29, 2020

அப்பாவுக்காக எழுதிய வரிகள்






அதிர்ந்து பேச அறவே தெரியாத
அடுத்தவர் பற்றி அவதூறு கூறாத
தடுத்து ஏதேனும் தவறாய் பேசாத
சாந்தமதை சிந்தையில் சுமந்தவனே
முத்துகள் சிதறிவிடுமோவென
மௌனம் காத்த பொழுதுகளில்
சத்தமின்றி தமை எழுதிச் சென்றன
நீ புகட்டிய கீதை
பார்வையின் பரிவும்
சொல்லின் மென்மையும்
சொல்லா ஆழ அன்பும்
என் சொல்லிலும் சித்தத்திலும்
நின்று வழி காட்டும்
என்றும் ஒளி கூட்டும்
(Must have written Sometime around 2004 or 2005)

No comments:

Post a Comment