September 17, 2017

Lalitha Sahasra Nama-Dhyana shloka 3

Lalitha Sahasra Nama-Dhyana shloka 3



(த்யான ஸ்லோகம்-3 பாடியவர் பற்றிய தகவல்கள் இல்லை)

த்யாயேத் பத்மாசனஸ்தாம்; விகசித வதனாம்; பத்மபத்ராயதாக்ஷீம்; ஹேமாபாம்; பீதவஸ்த்ராம்; கரகலித-லசத் ஹேம பத்மாம்; வராங்கீம்; சர்வாலங்கார யுக்தாம்; சததம் அபயதாம்; பக்த நம்ராம்; பவானீம்; ஸ்ரீவித்யாம்; ஷாந்தமூர்த்திம்; சகல சுரனுதாம்; சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்

**
பத்மாசனஸ்தாம் = தாமரையில் வீற்றிருப்பவள்
விகசித வதனாம் = ஒளிரும் வதனம்
பத்ம பத்ராய = தாமரை இதழ்கள்
அக்ஷீ = கண்கள்
ஹேமாபாம் = பொன்னென ஜொலிப்பவள் (ஹேம= தங்கம்)
பீத வஸ்த்ராம் = பிரகாசிக்கும் ஆடை தரித்தவள்
கரகலித = கைகளில்
லசத் = மின்னும்
ஹேம பத்மாம் = தங்கத் தாமரை
வராங்கீம் = வரபூஷணி - வரங்களின் வடிவமாகவே இருப்பவள்.
சர்வ = சகலவித
அலங்கார யுக்தாம் = ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவள்.
சத்தம் = எப்பொழுதும்
அபயதாம் = பாதுபாப்பு அளிப்பவள்
பக்த நம்ராம் = பக்தர்களுக்கு இரங்கி செவிசாய்ப்பவள்
ஸ்ரீ வித்யாம் = வித்யையின் ரூபிணி. ஞானத்தின் இருப்பிடம்
ஷாந்த மூர்த்திம் = அமைதியின் ரூபம்
சுர-(அ)னுதாம் = சுரர்களால் எனப்படும் தேவர்களால் (தெய்வங்கள்) வணங்கப்படுபவள்
சர்வ = அனைத்து விதமான
சம்பத் ப்ரதாத்ரீம் = செழிப்பும் வளமையும் தந்தருள்பவள்
த்யாயேத் பவானீம் = பவானியை தியானிக்கிறேன்.
**

( ரூபத் தியானம்)

பத்மத்தில் வீற்றிருப்பவளும், ஒளிரும் திங்களென முகமுடையாளும், தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளும், பொன்னென ஜொலிப்பவளும், பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளும், கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளும், சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளுமான பவானியை தியானிக்கிறென்.

(பவானியின் குணங்கள்)

எப்பொழுதும் பக்தர்களுக்கும் அபய கரம் நீட்டுபவளும், அவர்கள் கோரிக்கைகளுக்கு இரங்கி செவிசாய்ப்பவளுமான பவானியை தியானிக்கிறேன்.

(அன்னையின் அம்சங்கள்)

ஞானமாகியவளே, வரங்களையே வடிவமாக்கிக் கொண்டவளே, அமைதியின் ரூபமானவளே, சுரர்கள் எனப்படும் ஏனைய தேவதைகளால்வ ணங்கப்படுபவளே, செழிப்பும் செல்வமும் வழங்குபவளே அன்னை பவானியே உன்னை நான் தியானிக்கிறேன்.

**

குறிப்புகள்: சம்பத்து என்பது இவ்வுலக பொருள் சார்ந்த விஷயமாக மட்டும் கொள்ளக்கூடாது. செழிப்பு செல்வம் என்பன, மன அமைதி, அறிவு, பண்பு, ஞானம், வைராக்கியம், பக்தி போன்ற கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம செல்வத்தையும் குறிக்கும்.

பீத வஸ்த்ரம் போன்ற பட்டாடை தரிப்பதும், பொன்னென ஒளிர்வதும், தங்கத்தாமரையை ஏந்தியிருப்பதும் பணமோ பகட்டையோ குறிப்பிடுபவை அல்ல. அழுக்குகள் அற்ற பூரண பரமாத்மா எப்படி ஒளிருமோ, அப்படி ஒளிர்கிறாள். ஜோதி வடிவமாக இருக்கும் பரமாத்மா என்பதால் மிளிர்கிறாள்.

__

Lalitha Sahasranama dhyana verse 3
(Origin of dhyana verse 3 is unknown)

**

Dyayeth padmasanasthaam; vikasitha vadanaam;
padma pathrayathaaksheem;
Hemabham; peethavasthraam;
karakalitha-lasad hema padmam; varangeem;
Sarvalangara yuktham; sathatham abhayadam;
bhaktha namram; bhavaneem;
Srividyam; santhamurthim;
sakala suranuthaam; sarva sampat pradhatreem

**

Dyayeth = Meditate
padmasanastham = One who sits on lotus
Vikasitha vathanaam = face beaming with smile
padma badhaaya = lotus petals
akshim = eyes
Hemabam = shines like gold
peetha vasthraam = clothed in yellow sheen
karakalitha = in her hand (holding)
lasad = bright beaming
hema padmaam = golden lotus
varaangim = embodiment i.e. bestower of boons
sarva-alankara-yuktham = dressed exquisitely/skillfully
sathatham = always - eternal
abhayatham = protector
bhaktha namraam = attentive to the devotees
sri vidhyam = essence / symbol of "Knowledge"
shantha murthim = personification of peace
sakala sura nutham = worshipped by all gods(evolved beings)
sarva sampath pradhatrim = bestower of every wealth (including wisdom)

**

(meditating on her form)
I meditate on Bhavani, who is seated on lotus with a beaming smile. Whose eyes are like lotus petals. Bhavani who is clothed in silky golden sheen, who herself radiates like gold, Who is so exquisitely dressed, holding a glittering golden lotus in her hand.
(meditating on qualities)
I meditate on bhavani, who eternally plays the role of 'protector', who inclines to be attentive/listen to the needs of devotees
(meditating on her aspects )
I Mediate on her who is worshipped by all suras (gods), who is the essence of all 'knowledge', who is the embodiment of boons, personification of peace and she who grants every kind of wealth.

**
Note:
Wealth as referred here, should not be understood only to mean materialistic riches as we know. Peace, knowledge, wisdom, experience and other such innumerable-intangible wealth are inclusive.
Her shine should not be mistook as the shine of riches as we know. Since she is personified as truth or parabrahman, she is glowing with purity.
_
Thanks: Reference Credit:

http://www.sanskritdictionary.com


September 15, 2017

Lalitha Sahasranama Dhyana Sloka 2




லலிதா சஹஸ்ர நாமம் த்யான ஸ்லோகம் 2:

இரண்டாம் தியான ஸ்லோகம் தத்தாத்ரேயரால் அம்பிகையை துதித்து பாடப்பட்டது.
**
அருணாம்; கருணா தரங்க்கிதாக்ஷிம்; 
த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்;
அணிமாதிபிராவ்ருதாம்; மயூகை-ரஹமித்யேவ விபாவையே பவானீம்

**
அருணாம் = சூரிய அருணோதயம்
கருணா = கருணை கொண்டவள்
தரங்கி = அலை
அக்ஷி = கண்கள்
த்ருத = சுமந்து, தரித்து அல்லது கொண்டிருப்பவள்
பாச = பாசம் என்னும் சூக்ஷ்ம பிடிப்பு-ஜீவனை பந்தப்படுத்தியிருப்பது.
அங்குசம் = ஜீவனை தன்னிடத்தில், தன் வசத்தில், கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளம்
புஷ்ப பாண = மலர்களாலான அம்பு
(பாண) சாபாம் = கரும்பு வில்
அணிமாதி = அஷ்ட சித்திகளின் வடிவ தேவதைகள்
அணிமாதிபிராவ்ருதாம் = அஷ்டமாசித்தி தேவதைகளால் சூழப்பட்டவள்
மயூகை = ஒளிக்கதிர்
அஹம் = நான்
இத்யேவ = இப்படிப்பட்ட
விபாவயே = மஹத்துவத்தை உடைய
பவானீம் = தேவி பவானீ
**
சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளும், அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும், பாசம், அங்குசத்தை தரித்தவளும், புஷ்பத்தாலான அம்புகளையும் கரும்பு வில்லையும் சுமந்தவளும், அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளும், ஒளிக்கதிரென மிளிர்பவளும் பெரும் மஹத்துவத்தையுடையவளுமான பவானியை நான் தியானிக்கிறேன்.
பின் குறிப்பு: 'த்ருத', 'விபாவயே' போன்ற பல சொற்களுக்கு, அமைப்பு, சொற்றொடருக்கேற்ப வேறு இடங்களில் பொருள் மாறுபடலாம்.
(த்யான ஸ்லோகம் 3 தொடரும்)
**
Lalitha Sahasra Nama - Dhyana shloka 2
**
These were Lord Dattatreya's work in praise of Goddess Bhavani
**
Arunam; Karuna thrangitakshim; 
dhrutha pasangusa pushpabana chapam; 
Animadhibhiravrutham; 
mayukair-ahamityeva vibhavaye Bhavanim.

**
I mediate on bhavani, who...
Aruna = who shines like rising sun
karuna = is merciful
tharanga = wave
karunaa tharangitha = waves of mercy
akshi = eyes
dhrutha = held
pasa = we can understand this as invisible noose which binds every soul to the truth (parabrahman)
angusa = Symbolic representation divine having control or power over the souls
pushpa bana = arrows made of flowers
BaNa chapam = bow (BaNa means arrow. BaNa can also mean sugarcane)
aNimadhibhi = eight sidhis which includes anima, mahima, lahima etc
aNimaadhibhir-avruthaam = surrounded by either sidhis...
mayukai - streak/ray/beam of light/shine/brightness
aham = me
ithyeva= accordingly (thereby)
vibhavaye = magnanimity or exalted personification
Bhavaneem = of Devi Bhavani
**
I meditate on devi bhavanee, who shines red like rising sun,
whose eyes emits eternal waves of mercy. Who holds pasa and angusa in her hands to bind and control souls (every living non-living entity). Who holds bows of sugarcane and arrows of flowers. Devi who is surrounded by ashta sidhis, who shines like streak of ray, I meditate upon such exalted divinity of devi bhavanee .

**
Ps: meaning of certain words would vary depending on context.
Here I have assumed "dhruta" to mean "held" or "to hold"

(dhyana 3 to continue)

September 13, 2017

Lalitha Sahasra Nama Dhyana Sloka 1




Lalitha Sahasra Nama - Dhyana shloka 1 

We first start with dhyana shloka(s) which lets us concentrate and meditate upon the divine form of Goddess Lalitha. When this divine form sits in our mind deeply rooted, its a tiny-bit easy to try and develop bhakthi towards her and listen to her glories. There are four dhyana shlokas helping us meditate on her. 

First one was blessed by vaak-devis glorifying the goddess.

Dhyana shlokam says:

**

Sinduraaruna vigrahaam; trinayanaam; manikya mauli sphurath
Tara nayaka shekharam; smitamukheem; aapina vakshoruham
Panibhyaam-alipoorna ratna chashakam; raktothpalam pibhratheem
Saumyam ratna ghatastha raktacharanam; dhyayeth paraam ambikaam
____

*Sindhura = red / vermillion 

* Aruna = to rise , rising sun 

*Vigraham = her form or physique.

*Tri nayan = Three eyed (one on forehead)

*Manikya mouli spurath = adorning red ruby on her crown 

*Tara nayaka = Tara-nayak ( head of stars) i.e. moon 

*Sekaraam = on the crest

*Smitha mukheem = Smiling face

*Apeena vakshOruhaam = vaksham is breast. 

*Apeena vakshOruhaam - firm breasted

*paaNibyaam = in her hand

*aLi-poorna = Honey filled 

*Rathna chasakam = cup made of exquisite gemstones. 

*Rakthoth palam bibhrathim = Holding Red flowers in her hands

*Sowmyam = Pleasant, charming, beautiful

* Raktha charanam = her red feet

* Ratna gatastha = pot filled with precious jewels

*Dhyayeth paraam ambikaam = I Meditate on Devi Ambika
___

I am meditating on devi, Ambika, whose shines bright red like rising sun's vermillion.  She with three eyes, who wears bright ruby and moon on her crown, who is firm breasted and beams with enchanting smile, Her one hand holds honey brimming in a rich cup made of precious stones. Other hand has red flowers. Beautiful divine mother places her red feet in the pot filled with jewels.


(I meditate on that divine mother)


Note: (ie. the inner vision or Gyaana is considered as third eye)


******

லலிதா சஹஸ்ர நாம - தியான ஸ்லோகம்

அன்னையின் கருணையும் அழகும் நிறைந்த வடிவத்தை முதலில் தியானித்து அவள் பெருமையை உணரத் துவங்கினால், உணர்வு பூர்வமாக ஈடுபடலாம். நான்கு ஸ்லோகங்கள் த்யான ஸ்லோகமாக சொல்லப்படுகிறது. முதலாவது ஸ்லோகம்  வாக்தேவிகளால் அருளப்பட்டது.

**

சிந்தூராருண விக்ரஹாம்; த்ரி நயனாம்;
மாணிக்ய மௌலிஸ்புரத்; தாரா நாயக சேகராம்;
ஸ்மிதமுகீம்; ஆபீன வக்ஷோருஹாம்;
பாணிப்யாம் அளிபூர்ண ரத்ன சஷகம்
ரக்தோத்பலம் பிப்ரதீம்; சௌம்யாம்
ரத்ன கடஸ்த ரக்த சரணாம்; த்யாயேத் பராம் அம்பிகாம். 

____

சிந்தூராருண விக்ரஹாம் = குங்குமத்தின் நிறத்தையொத்த உதிக்கும் சூரியனை போன்ற உருவம்

திரி நயனாம் = முக்கண்களை உடையவள்

மாணிக்ய மௌலி-ஸ்புரத் = மாணிக்கத்தை சிரசில் தரித்தவள்

தாரா நாயக சேகராம் = நட்சத்திரங்களின் நாயகனான சந்திரனை உச்சியில் தரித்தவள்

ஸ்மிதமுகீம் = புன்னகை சிந்தும் முகமுடையாள்

ஆபீன வக்ஷோருஹாம் = திண்மையான மார்பகத்தை உடையவள்

பாணிப்யாம் = கைகளில்

அளிபூர்ண ரத்ன சஷகம் = தேன் நிரம்பிய ரத்னத்தாலான கிண்ணத்தை ஏந்தியிருக்கிறாள்

ரக்தோத் பலம் பிப்ரதீம் = சிவந்த மலர்களை ஏந்தியிருக்கிறாள்

சௌம்யாம் = அழகு பொருந்தியவள்

ரத்ன கடஸ்த = ரத்னக் குடத்தில்

ரக்த சரணாம் = தன் சிவந்த பாதத்தை இருத்தியிருக்கிறாள்.

த்யாயேத் பராம் அம்பிகாம் = இப்படிப்பட்ட அம்பிகையை நான் வணங்குகிறேன்.
____

குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் சூரியனைப் போல் திருமேனி கொண்டவளும் முக்கண்ணுடையவளும், சிவந்த மாணிக்கத்தை சிரசிலும், நட்சத்திரத்தின் தலைவனான சந்திரனை உச்சியில் தரித்தவளும், மந்தஹாச புன்னகை சிந்துபவளும், திண்மையான மார்பகத்தை உடையவளும், கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தையும், சிவந்த மலர்களையும் கொண்டவளும், சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளும், சௌந்தர்யம் பொருந்தியவளுமான அம்பிகையை தியானிக்கிறேன்.

( மூன்றாவது கண் என்பது ஞானத்தை குறிக்கும் )

Thanks: Reference Credit:

http://www.starsai.com/lalithambigai-goddess-lalithasahasranamam.html

September 11, 2017

லலிதா சஹஸ்ர நாமம் - Lalitha Sahasranama - An Introduction



பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர், பெருங்கருணை கொண்டு லலிதா சஹஸ்ர-நாமத்தை நமக்கெல்லாம் விளக்கியருளினார். அகஸ்திய முனிவருக்கும் ஹயக்ரீவருக்கும் நடைபெரும் உரையாக, சம்பாஷணையாக சஹஸ்ர நாமம் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டது.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பரமசிவன் மன்மதனை உயிர்பித்த போது, கூடவே பண்டாசுரன் என்ற அசுரனும் தோன்றினான். ஈடு இணையற்ற சக்தி கொண்டவனாக, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்து கொடுங்கோல் புரிந்து வந்தான். தேவர்கள் கடுந்தவம் புரிந்து அவனை அழிக்க வல்ல சர்வசக்தியான ஆதிபராசக்தியை துதித்து வழிபட்டனர். யக்ஞத்திலிருந்து ஜகத்தை ஆளும் சக்தியானவள், பேரழகு பொருந்திய லலிதா தேவியாக அவதரித்தாள்.

முதல் 84 ஸ்லோகங்கள் லலிதா தேவியின் அங்க வர்ணனையாகவும் இக்கதையின் ஸ்லோக வடிவாகவும் திகழ்கிறது. சஹஸ்ர (ஆயிரம்) நாமங்களை கொண்ட லலிதாம்பிகையின் நாமங்கள், 'ரஹஸ்ய நாமங்கள்' என்றும் வழங்கப்படுகிறது. இந்த நாமாக்களின் அர்த்தம் உணர்ந்து தியானிக்க முற்பட்டால், பல கேள்விகளுக்கு விடையாக திகழலாம் என்ற எண்ணத்தால்,


வரும் நாட்களில்,

ஆயிரம் நாமாக்களை 4 அல்லது 5 ஸ்லோக வடிவாக பிரித்து, நான் இணையத்தில் படித்த விளக்கத்தை, ஆங்கிலத்திலும் தமிழிலும் என்னால் இயன்ற போது பதிவு செய்ய முயற்சி செய்கிறேன். என் புரிதல் மிகவும் சொற்பமாகவும் அற்பமாகவும் இருக்கலாம். அறிஞர், தெரிந்தோர் தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் விளக்கினாலோ அல்லது தெளிவுபடுத்தி விரிவுரை எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.
என் பதிவுகளை அதன் தொடர்புடைய கதைகளுக்கு சம்பாஷனைக்குறிய களமாகவும் பயன்படுத்தலாம். நன்றி.

எழுத்துப்பிழைகளையும், பொருட்பிழைகளையும் பொறுத்தருள்க.

**

Immature / amateur attempt to discuss the sahasra naama of goddess sri.lalithadevi as per my understanding based on extremely limited knowledge. I shall be posting 4 or 5 shlokas or names per post and try to discuss the meaning. I would elaborate a word or two in some places, if my understanding lets me to do so.
You can use this as a discussion post to comemnt on related stories or any other spiritual explanation from a different dimension. Thankyou.

Please, forgive my errors in language, usage or explanation.

September 08, 2017

Sangamam - Matrimonial Service open to Hindu Community


Hello A devotee of Sri. Kanchi Mahaperiyava has initiated a service for matrimony which is open to entire hindu community. I am hereby giving the details.

Those interested may pursue:


____

Sangamam : A Matrimonial Service

The guide lines and conditions:

  1. This “Sangamam” is open to all people who belong to Hindu Religion.

  2. Our effort is to facilitate people to meet each other and taking it further is the sole responsibility of both the parents.

  3. Our responsibility will be over once we publish matrimonial form.

  4. We will not influence or do any lobbying in favor of anyone in this process.

  5. It becomes the absolute responsibility of both the parent to verify the details and facts given in the enrollment form before proceeding further.

  6. Under any circumstances this blog or blog members will NOT become responsible for any misunderstanding between parents.

  7. Kindly note that this prestigious bon services “Sangamam” is carried out absolutely as honorary services and not a paisa will be charged towards this services.

___



How to go about it:

Once a devotee comes to know about our “Sangamam” they have to send a mail to the dedicated email periyavaarul.matrimony@gmail.com  with the request for enrollment form. On receipt of their request, the enrollment form will be sent to them through mail as an attachment. They have to fill up this form with relevant details.
There is a declaration at the end of the enrollment form. When they send back this enrollment form from their email I.D. it becomes an authentic document which implies that the information’s given are correct and true to the best of their knowledge. On receipt of their enrollment form the same will be hosted in our blog on Every Sunday. 
As planned already this “Sangamam” is being launched on Anusham Thiru Nakshatram day. Our Mahaperiyava also will bless not only the initiative of the blog but the brides and bride grooms for their successful family life. Every horoscope will be placed at the LOTUS FEET of Mahaperiyava and seek HIS blessings for overall success.
It is the divine instigation of Mahaperiyava to launch “Sangamam‘and our part is to take it further towards prospective parents. Please tell your friends and relations.

For further information please refer the following link or email:


link:

https://periyavaarul.wordpress.com/2017/08/29/sangamam-born-today/


Thankyou:

Those interested please tell and share the information to your near and dear ones. (Please avoid sharing in social medias like facebook, twitter, etc because of the underlying  difficulty in identifying the authenticity)



June 09, 2017

வல்லமை படப்போட்டிகாக

வல்லமை படப்போட்டிகாக அனுப்பிய இரு கவிதை.


அடையாளங்கள்
__________________


மனமொத்த மணவாழ்க்கையின்
மொத்த அடையாளத்தை
மென்பாதங்கள் நோக
தனியொருத்தியாய் ஏனடி பாரம் சுமக்கிறாய்?
மெட்டியிரண்டை புருஷனுக்குப் பகிர்ந்து..
கொலுசு குலுங்க,
பழந்தமிழ் பண் பாடு.
சற்றே இலகுவாகி
இளைப்பாறிக்கொள்..
உன் தனித்துவத்தையும் 
சேர்த்தணியப் பழகிக்கொள்.

***********


படத்துக்காக இன்னொன்றும் எழுதினேன்.  முதலில் எழுதியது இன்னும் பிடித்தமானதாய் இருந்தது.


அளவோடு மிஞ்சினால் அம்ருதம்
__________________________________



பெண்மையின் அடையாளம்
நளினத்தின் நகை வடிவம்
நடனத்தின் நாடி
மங்கலச் சின்னம்
ஆடவரை ஆட்டுவிக்கும் நட்டுவாங்க

ஆயிரம் காரணம் இருப்பினும்
இவர் சொன்னார் 
அவர் தந்தாரென
விரலுக்கு ஒன்றாய்
மாட்டிக்கொண்டு விழிக்காதே
இதுவே பெண்ணின்
எல்லையென அடங்காதே

சிக்கென அழகாய்
ஒற்றை விரலில்
பாங்காய் அணிந்து
டக்கென தாவிக் குதிக்கும்
சுதந்திரமும் ஒப்பிலா அழகு
அளவான அழகும் அளவிலா அழகே

*******


May 12, 2017


இயந்திர வாழ்வு





அலுப்பு
சலிப்பு
கசப்பு
வெறுப்பு
முகச் சுளிப்பு
மணமிலாப் பூக்களென
போட்டது போட்டபடி உதறி
சட்டென  துறவு பூண்டேன்
..
தனிமை
வெறுமை
வறுமை
சிறுமை
இம்மையில் கொடுமை
மறுமையின் நிலையாமை
...
எண்திசையிலும்
புறமும் உள்ளும்
புரட்டிப் புரட்டிப் போடும்
வெங்காய வாழ்க்கை