August 11, 2018

சின்ன சின்ன வரிகள்



சடுதியில் வீசிய வைரத்தை
கண்ணாடிக் கற்களில் தேடியே
தொலைந்து போகும் பயணம்

**** 

பேரிடிகளைத் தாண்டி 
கடும்புயல் சீற்றத்தின் நடுவிலும் 
அழகாய் ஆடி நிற்குது ஒற்றைப் பூ

-ஷக்திப்ரபா

3 comments:

  1. சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக் குடை தாங்காது ஏனோ நிஐவுக்கு வந்தது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. உண்மை தான். குடைகள் தாங்குவதில்லை, வளைந்து கொடுக்கும் நாணல்கள் தாங்கிடும். ஆற்றாங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் என்ற பாடல் வரிகள் பொருந்திடும்.

      Delete
  2. நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete